சுபாஷிதம்: அந்த ஒன்பது ரகசியங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் : ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

16. ஒன்பது ரகசியங்கள்.

செய்யுள்:

ஆயுர்வித்தம் க்ருஹச்சித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமௌஷதம்|

தபோ தானாவமானே ச நவ கோப்யானி காரயேத்||

– ஹிதோபதேசம்.

பொருள்:

வயது, வருமானம், வீட்டுக் கலகம், தனிப்பட்ட ரகசியங்கள், மந்திரம், மருந்து, தவம், தானம், அவமானம் – இந்த ஒன்பது விஷயங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.

விளக்கம்:

சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருந்தால்தான் மனித கௌரவம் நிலைக்கும். வெளியில் யாரிடமும் கூறக் கூடாத ஒன்பது விஷயங்களைப் பற்றி இந்த சுலோகம் விவரிக்கிறது. நாம் பிறரோடு வெளிப்படையாக விவாதிக்க கூடாதவற்றுள் முதலாவது நம் வயது. நம் வரவு செலவு, வருமானம் போன்ற பொருளாதார விஷயங்களை அனாவசியமாக பிறரிடம் ஒப்புவிப்பது தவறு. பணம் இருப்பது தெரிந்தால் கடன் கேட்பார்கள். கடன் இருப்பது தெரிந்தால் விலகிச் செல்வார்கள். அதே போல் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறிய, பெரிய குடும்பக் குழப்பங்களை தேவையில்லாமல் பிறரிடம் கூறினால் அது நான்கு சுவர்களைத் தாண்டி வீதிக்குச் செல்லும். பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. எனவே கவனமாக இருக்கும்படி எச்சரிக்கிறது இந்த ஸ்லோகம்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அதேபோல் நண்பர்கள் என்று எண்ணி சம்சார ரகசியங்களையோ குடும்ப ரகசியங்களையோ கூறிவிட்டால் பின்னர் அதே நண்பர்கள் பகைவர்களாக மாறும் போது, என்ன ஆகும்? எப்போது நம் ரகசியம் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்ச நேரிடும். எச்சரிக்கை தேவை என்கிறது ஸ்லோகம்.

அதேபோல் நமக்கு குருமார்கள் உபதேசித்த மந்திரத்தை வெளியிடக்கூடாது. அடுத்தது மருந்து. நமக்கு இருக்கும் நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகள் பற்றி பிறருக்குக் கூறவேண்டிய தேவையில்லை. அதை கேட்பவர்கள் ஆளுக்கொரு அறிவுரை கூறுவர். இவ்விதம் பகிரங்கமாக வெளிப்படுத்தக்கூடாத அம்சங்கள் பற்றி நம் கலாச்சாரத்தில் மிகவும் கவனமாக எடுத்துரைத் துள்ளார்கள். கேட்டு நடப்பது நம் கடமை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories