சுபாஷிதம்: நட்பின் இலக்கணம்!

Published:

subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

20. நட்பின் இலக்கணம்

ஸ்லோகம்:

ஆரம்பகுர்வீ க்ஷயிணீ க்ரமேண
லக்வீ புரா வ்ருத்திமுபைதி பஸ்சாத் |

தினஸ்ய பூர்வார்த பரார்தபின்னா
சாயேவ மைத்ரீ கலசஜ்ஞனானாம் ||

பர்த்ருஹரி நீதி -50

பொருள்:

சூரியோதய வேளையில் நம் நிழல் நீண்டதாக இருக்கும். அது சிறிது சிறிதாக மத்தியான வேளையில் குறைந்து கொண்டே வரும். அதே போல் தீயவர்களின் நட்பு ஆர்பாட்டத்தோடு ஆரம்பமாகும். சிறிது சிறிதாகக் குறையும். நல்லவர்களின் நட்பு மத்தியான நிழல்போல் சிறியதாகத் தொடங்கி சிறிது சிறிதாகப் பெருகும்.

விளக்கம்:

நல்லவர்களின் நட்பு சிறிது சிறிதாக வளரும். தீயவர்களின் நட்பு அதற்கு மாறாக அட்டகாசமாகத் தொடங்கி சிறிது சிறிதாக குறைந்து விடும். நட்பை நிழலோடு ஒப்பிடுகிறது இந்த ஸ்லோகம்.

இரு மனிதர்களின் இடையே அறிமுகம் அவர்களின் விருப்பு வெறுப்புகள் ஒன்றாவதன் மூலம் சிறிது சிறிதாக நட்பாக மாறும். சுயநலமின்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதன் மூலம் சினேகம் தினம் தினம் வளரும். நிரந்தரமான நட்பாக நிலைத்து வாழ்நாள் முழுவதும் நிற்கும்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

நட்பிற்கு சாட்சியாக நிலைத்து நிற்பவர்கள் எத்தனையோ பேர் சமுதாயத்தில் உள்ளார்கள். அவ்வாறின்றி சுயநலத்திற்காக கொள்ளும் நட்பு ஏதோ ஒரு பலனை எதிர்பார்ப்பதால் சிறிது சிறிதாகக் குறைந்து போகும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img