சுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்: ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

23. சிக்கனம் சிறப்பான குணம்!

செய்யுள்:

இதமேவ ஹி பாண்டித்யம் சாதுர்யமிதமேவ ஹி|
இதமேவ சுபுத்தித்வம் ஆயாதல்பதரோ வ்யய:||

– மஹாபாரதம்

பொருள்:

வரவை விட செலவு குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதே அறிவுடைமை. அதுவே சாமர்த்தியம். அதுவே நற்குணம்.

விளக்கம்:

ஒரே ஒரு கருத்தையே திடமாக கூறுகிறார் இந்த செய்யுளில். அனாவசிய செலவு செய்யக்கூடாது என்பதே அது. இருப்பதைக் கொண்டு வாழக் கற்க வேண்டும். பொருளாதார நலிவால் வீழ்ந்துபோன நிறுவனங்களும் (என்ரான், ஆர்தர் ஆண்டர்சன் போன்றவை),  நாடுகளும் (கிரீஸ் போன்றவை) மனிதனுக்குப் பாடம் புகட்டுபவை. 

இது சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் மிக உயர்ந்த செய்தி.

பொருளாதாரப் பிரச்சனைகளே பல கவலைகளுக்கும் மூலம். கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட செய்திகளைப் படிக்கும்போது தான் இந்த சுபாஷிதத்தின் அருமை புரிகிறது. தனிமனிதன், குடும்பம், நிறுவனம், உலக நாடுகளின் பட்ஜெட்… எதை எடுத்துக் கொண்டாலும்  வரவுக்குள் செலவு என்ற இந்தக் கருத்து பொருந்தும்.

தினக் கணக்கு எழுதும் பழக்கம் முன்பெல்லாம் வீடுகளில் பலருக்கும் இருந்தது. அவசியமானவை,  அநாவசியமானவை என்று செலவுகளை சரி பார்ப்பதற்கு உதவும் வழிமுறை அது. பட்ஜெட்டுக்கு ஏற்ற வாழ்க்கை,  இருப்பதைக் கொண்டு குடும்பம் நடத்துவது… போன்றவை இந்திய இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை. சேமித்து வைக்கும் இந்தியர்களின் மனப்பான்மையே பொருளாதார மேடு பள்ளங்களில் இருந்து நம் நாட்டைக் காத்து வருகிறது.

கிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்  என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி. மக்களிடம் பெருகி வரும் கன்ஸ்யூமரிசம் என்னும் போக்கு தனி மனித அளவிலும் குழு அளவிலும் கூட நல்லது அல்ல. அளவுக்கதிகமான செலவுகளுக்கு அடிமையாவதே குறுக்கு வழிகளில் பணம் தேடும்படி மனிதனைத் தூண்டுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories