சுபாஷிதம்: செயலில் பங்குதாரர்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

33. செயலில் பங்குதாரர்கள்.

செய்யுள்:

கர்தா காரயிதா சைவ |
ப்ரேரகஸ்சானு மோதக: ||
சுக்ருதே துஷ்க்ருதே சைவ |
சத்வார: சமபாகின: ||
— பஞ்சதந்திரம்.

பொருள்:

எந்த நற்செயலிலும், தீய செயலும் செய்பவர், செய்விப்பவர், உற்சாகப்படுத்துபவர் சம்மதிப்பவர் – இந்த நால்வரும் ஆளுக்கு கால்பாகம் பலனை சமமாகப் பெறுவர்.

விளக்கம்:

நல்ல காரியமோ கெட்ட காரியமோ அதன் பலனில் பொறுப்பேற்பவர் நால்வர். அனைத்து புண்ணியச் செயல்களையும் தனியாக யாரும் செய்துவிட இயலாது. நற்செயல் செய்பவர்களுக்கு உதவுவது கூட புண்ணியமே! உதாரணத்திற்கு கோயில் கட்டுவதோ, சாலை அமைப்பதோ யாராவது செய்வதற்கு முன் வரும்போது அவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கும் அந்த புண்ணியத்தின் பலனில் பங்கிருக்கும்.

தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற தீய செயல்களுக்கு துணை போவதும், உரிமை சங்கங்கள் என்ற பெயரில் போராட்டங்களில் ஈடுபடுவதும் வளர்ந்துள்ளது. அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்களும் பொருளுதவி செய்பவர்களும் தர்மத்தைப் பொருத்தவரையில் குற்றவாளிகளே! இவர்களும் சமமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

நல்ல செயல்களுக்கு உதவ வேண்டும். கெட்ட காரியங்களுக்கு உதவக் கூடாது என்ற கருத்தை தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories