சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!

Published:

subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

47.  அடிப்படை வசதிகள்.

செய்யுள்:

தத்ர மித்ர ந வஸ்தவ்யம் யத்ர நாஸ்தி சதுஷ்டயம் |
ருணதாதா ச வைத்யஸ்ச ஸ்ரோத்ரிய: சுஜலா நதீ ||

ஹிதோபதேசம்

பொருள்:

ஓ நண்பா! கடன் கொடுப்பவர், மருத்துவர், புரோகிதர் (கற்றறிந்த ஆசிரியர்), நதி  இந்த நான்கு வசதிகளும் இல்லாத இடத்தில் வசிக்க வேண்டாம்.

விளக்கம்:

முன்பு நம் நாட்டில் கிராமங்கள் அனைத்தும் கிணறுகளோடும் குளங்களோடும் நீர் வளத்தோடும் விளங்கின. இப்போது கிராமங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு வந்துள்ளது. கிராமங்களில் இருந்த புரோகிதர்கள் ஆன்மீகத் தேவைகளோடு கூட கல்வியும் அளித்து வந்தார்கள். திண்ணைப் பள்ளிகளில் நூறு சதவீதம் மாணவர்கள் படித்து வந்ததாக வரலாறு கூறுகிறது. தற்போது கிராமங்களின் நிலைமை மாறிவிட்டது.

கிராமங்களிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். கிராமப்புற பணிகளை மக்கள்  விரும்பாததற்கு காரணம் என்ன? கிராமங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் என்ன?  இதற்கான பதில்கள் இந்த ஸ்லோகத்தில் உள்ளன. 

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

நிகழ்காலத்தை நோக்குங்கால் கிராமங்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இளைஞர்கள் நகரங்களுக்கும் வெளிநாட்டுக்கும் இடம் பெயர்கிறார்கள். முதியோர்களே அங்கு மீதி உள்ளார்கள். கிராமங்களில் பணிபுரிபவர்கள் கூட நகரங்களிலிருந்து வந்து செல்கிறார்கள். மருத்துவம், கல்வி போன்ற வசதிகள் இல்லாத இடத்தில் யார் தான் வசிப்பார்கள்?

சாலை வசதி, கல்வி, மருத்துவம், அவசரத் தேவைக்கு கடன் கொடுத்து உதவும் அமைப்பு,  பாதுகாப்பான குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் அனைவரும் முயற்சிக்க வேண்டும். கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள் மீண்டும் செழிக்கும். கிராமங்களை தத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த ஸ்லோகம் வழிகாட்டுகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img