சுபாஷிதம்: மனக் கட்டுப்பாடு எனும் மாமருந்து!

subhashitam
subhashitam

சுபாஷிதம்: ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

57. மனக்கட்டுப்பாடு!

சுலோகம்:

ந ஜாது காம: காமானாமுபபோகேன சாம்யதி|
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ஏவாபிவர்ததே ||
— மனுஸ்மிருதி.

பொருள்: 

போகங்களை அனுபவிப்பதன் மூலம் ஆசை அடங்காது. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அக்னியில் நெய்யும் ஹவிஸ்சும் போடுவதன் மூலம் தீ மேலும் வளருமே தவிர அணையாது அல்லவா?

விளக்கம்:

மனித இனம் முன்னேறுவதற்கு ஆசைகள் மிகவும் துணைபுரியும். மழையில் நனையாமல், வெயிலில் வாடாமல் இருக்க வேண்டும்  என்ற விருப்பத்தோடு மனிதன் குடை தயாரித்துக் கொள்கிறான். உணவு, உடை, இருப்பிடம் ஏற்பாடு செய்து கொண்ட மனிதனின் ஆசைகள் பெருகிக் கொண்டே வந்தன. தான் ஏற்படுத்திக் கொண்டவற்றுக்குத் தானே அடிமையானான்.  மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான ஆசைகள் மன அமைதியை விலக்கத் தொடங்கின. அதர்மமான கோரிக்கைகள் அனுபவித்தால் தீரக்கூடியனவா? என்று கேட்கிறது இந்த ஸ்லோகம்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

ஆசைகளை தீர்த்துக் கொள்வதை விட அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே நல்லது என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.

விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே போனால் மீண்டும் மீண்டும் ஆசைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மனிதனின் கடமை. ‘காமம் போன்றவை ஞானிக்குக் கூட எப்போதும் எதிரிகளே!’ என்கிறான் கீதையில் பகவான்.

அதனால் அறிவுக் கூர்மையால், தெளிவான சிந்தனையால் நம்மிடமுள்ள ஆசைகளை விட்டு விடுவதே நலம் பயக்கும். அவ்வாறு செய்யக் கூடியவரே  தீரர். 

வேண்டுமென்றே கடைகளுக்குச் சென்று கண்ணில் பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை இந்த சுலோகம் கண்டிக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories