சுபாஷிதம்: மனக் கட்டுப்பாடு எனும் மாமருந்து!

subhashitam
subhashitam

சுபாஷிதம்: ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

57. மனக்கட்டுப்பாடு!

சுலோகம்:

ந ஜாது காம: காமானாமுபபோகேன சாம்யதி|
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ஏவாபிவர்ததே ||
— மனுஸ்மிருதி.

பொருள்: 

போகங்களை அனுபவிப்பதன் மூலம் ஆசை அடங்காது. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அக்னியில் நெய்யும் ஹவிஸ்சும் போடுவதன் மூலம் தீ மேலும் வளருமே தவிர அணையாது அல்லவா?

விளக்கம்:

மனித இனம் முன்னேறுவதற்கு ஆசைகள் மிகவும் துணைபுரியும். மழையில் நனையாமல், வெயிலில் வாடாமல் இருக்க வேண்டும்  என்ற விருப்பத்தோடு மனிதன் குடை தயாரித்துக் கொள்கிறான். உணவு, உடை, இருப்பிடம் ஏற்பாடு செய்து கொண்ட மனிதனின் ஆசைகள் பெருகிக் கொண்டே வந்தன. தான் ஏற்படுத்திக் கொண்டவற்றுக்குத் தானே அடிமையானான்.  மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான ஆசைகள் மன அமைதியை விலக்கத் தொடங்கின. அதர்மமான கோரிக்கைகள் அனுபவித்தால் தீரக்கூடியனவா? என்று கேட்கிறது இந்த ஸ்லோகம்.

ஆசைகளை தீர்த்துக் கொள்வதை விட அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே நல்லது என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.

விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே போனால் மீண்டும் மீண்டும் ஆசைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மனிதனின் கடமை. ‘காமம் போன்றவை ஞானிக்குக் கூட எப்போதும் எதிரிகளே!’ என்கிறான் கீதையில் பகவான்.

அதனால் அறிவுக் கூர்மையால், தெளிவான சிந்தனையால் நம்மிடமுள்ள ஆசைகளை விட்டு விடுவதே நலம் பயக்கும். அவ்வாறு செய்யக் கூடியவரே  தீரர். 

வேண்டுமென்றே கடைகளுக்குச் சென்று கண்ணில் பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை இந்த சுலோகம் கண்டிக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories