சுபாஷிதம்: மனக் கட்டுப்பாடு எனும் மாமருந்து!

subhashitam
subhashitam

சுபாஷிதம்: ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

57. மனக்கட்டுப்பாடு!

சுலோகம்:

ந ஜாது காம: காமானாமுபபோகேன சாம்யதி|
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ஏவாபிவர்ததே ||
— மனுஸ்மிருதி.

பொருள்: 

போகங்களை அனுபவிப்பதன் மூலம் ஆசை அடங்காது. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அக்னியில் நெய்யும் ஹவிஸ்சும் போடுவதன் மூலம் தீ மேலும் வளருமே தவிர அணையாது அல்லவா?

விளக்கம்:

மனித இனம் முன்னேறுவதற்கு ஆசைகள் மிகவும் துணைபுரியும். மழையில் நனையாமல், வெயிலில் வாடாமல் இருக்க வேண்டும்  என்ற விருப்பத்தோடு மனிதன் குடை தயாரித்துக் கொள்கிறான். உணவு, உடை, இருப்பிடம் ஏற்பாடு செய்து கொண்ட மனிதனின் ஆசைகள் பெருகிக் கொண்டே வந்தன. தான் ஏற்படுத்திக் கொண்டவற்றுக்குத் தானே அடிமையானான்.  மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான ஆசைகள் மன அமைதியை விலக்கத் தொடங்கின. அதர்மமான கோரிக்கைகள் அனுபவித்தால் தீரக்கூடியனவா? என்று கேட்கிறது இந்த ஸ்லோகம்.

ஆசைகளை தீர்த்துக் கொள்வதை விட அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதே நல்லது என்று அறிவுறுத்தும் சுலோகம் இது.

விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டே போனால் மீண்டும் மீண்டும் ஆசைகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது மனிதனின் கடமை. ‘காமம் போன்றவை ஞானிக்குக் கூட எப்போதும் எதிரிகளே!’ என்கிறான் கீதையில் பகவான்.

அதனால் அறிவுக் கூர்மையால், தெளிவான சிந்தனையால் நம்மிடமுள்ள ஆசைகளை விட்டு விடுவதே நலம் பயக்கும். அவ்வாறு செய்யக் கூடியவரே  தீரர். 

வேண்டுமென்றே கடைகளுக்குச் சென்று கண்ணில் பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலையை இந்த சுலோகம் கண்டிக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories