சுபாஷிதம்: இன் சொல் பேசு!

Published:

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

66. இன் சொல் பேசு!

ஸ்லோகம்:

ப்ரியவாக்யப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ: |
தஸ்மாத் ததேவ தாதவ்யம் வசனே கா தரித்ரதா ||
— சாணக்கிய நீதி 

பொருள்:

அன்பாக பேசினால் அனைவரும் மகிழ்வர். ஆகையால் இனிமையாகவே பேச வேண்டும்.  அதற்கு ஏதாவது செலவாகப் போகிறதா என்ன?  பேச்சில் ஏன் தரித்திரம்? 

விளக்கம்:

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்றார் திருவள்ளுவர். பிறர் மனம் நோகாமல் இனிமையாகப் பேசுவது என்பது ஒரு கலை. மகிழ்ச்சியாக இருப்பவர்கள் கலை உணர்வோடு கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பர். இனிய பேச்சு பேச வேண்டும் என்று கூறும் சுலோகம் இது.

பிறர் மனதை நோகச் செய்வது தவறு. சிறு குழந்தையானாலும் வளர்க்கும் பிராணியானாலும் புன்னகையோடு உரையாடினால் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். விளையாட்டுக்காகக் கூட பிறரை கேலி செய்து மனதை துன்புறுத்தக் கூடாது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

சமுதாயத்தில் தனிமையில் வாழ்பவர்கள், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் யாராவது உரையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களைச் சந்தித்து சற்று நேரம் அளவளாவி வரும் சமூக நலத் தொண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இனிமையாக, அன்பாகப் பேசுவதை பழக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு பேச இயலாமல் போவது கூட ஒரு தரித்திரமே! பிறருக்கு பணம் கொடுத்து திருப்தி படுத்துவதற்கு நம்மிடம் செல்வம் இல்லாமல் போகலாம். அன்பான சொற்களுக்கு கஞ்சத்தனம் ஏன்? நன்றாக இனிய சொற்களைப் பேசுவதால் என்ன நஷ்டம் வந்து விடும்?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img