சுபாஷிதம்: இன் சொல் பேசு!

subhashitam-5
subhashitam-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

66. இன் சொல் பேசு!

ஸ்லோகம்:

ப்ரியவாக்யப்ரதானேன சர்வே துஷ்யந்தி ஜந்தவ: |
தஸ்மாத் ததேவ தாதவ்யம் வசனே கா தரித்ரதா ||
— சாணக்கிய நீதி 

பொருள்:

அன்பாக பேசினால் அனைவரும் மகிழ்வர். ஆகையால் இனிமையாகவே பேச வேண்டும்.  அதற்கு ஏதாவது செலவாகப் போகிறதா என்ன?  பேச்சில் ஏன் தரித்திரம்? 

விளக்கம்:

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்றார் திருவள்ளுவர். பிறர் மனம் நோகாமல் இனிமையாகப் பேசுவது என்பது ஒரு கலை. மகிழ்ச்சியாக இருப்பவர்கள் கலை உணர்வோடு கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பர். இனிய பேச்சு பேச வேண்டும் என்று கூறும் சுலோகம் இது.

பிறர் மனதை நோகச் செய்வது தவறு. சிறு குழந்தையானாலும் வளர்க்கும் பிராணியானாலும் புன்னகையோடு உரையாடினால் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம். விளையாட்டுக்காகக் கூட பிறரை கேலி செய்து மனதை துன்புறுத்தக் கூடாது.

சமுதாயத்தில் தனிமையில் வாழ்பவர்கள், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள் யாராவது உரையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களைச் சந்தித்து சற்று நேரம் அளவளாவி வரும் சமூக நலத் தொண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இனிமையாக, அன்பாகப் பேசுவதை பழக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு பேச இயலாமல் போவது கூட ஒரு தரித்திரமே! பிறருக்கு பணம் கொடுத்து திருப்தி படுத்துவதற்கு நம்மிடம் செல்வம் இல்லாமல் போகலாம். அன்பான சொற்களுக்கு கஞ்சத்தனம் ஏன்? நன்றாக இனிய சொற்களைப் பேசுவதால் என்ன நஷ்டம் வந்து விடும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories