சுபாஷிதம்: முட்டாளின் ஐந்து குணங்கள்!

Published:

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

73. முட்டாளின் ஐந்து குணங்கள்!

ஸ்லோகம்:

மூர்கஸ்ய பஞ்ச சிஹ்னானி கர்வீ துர்வசனீ ததா |
ஹடீ சா௨ப்ரியவாதீ ச பரோக்தம் நைவ மன்யதே ||

பொருள்:

கர்வம், தீய சொல் கூறுவது, பிடிவாதம், கடுமையாகப் பேசுவதும் வாதிடுவதும், அடுத்தவர் கூறுவதை எதிர்த்துப் பேசுவதே கொள்கையாகக் கொள்வது என்ற ஐந்து குணங்கள் முட்டாளிடம்  இருக்கும்.

விளக்கம்: 

முட்டாள்களை மகிழ்விக்க முடியாது. அவரிடம் இருந்து தூரமாக விலகி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். முட்டாள்கள் யார் என்பதை விளக்கும் சுலோகம் இது.

இந்த குணங்கள் உள்ளவர்களை தொலைவில் இருத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம். அகம்பாவத்திடம்  எப்போதுமே அறியாமை துணையிருக்கும். கர்வி எப்போதும் அடக்கம் இல்லாமல் நடந்து கொள்வான். மாறுபட்ட அபிப்ராயங்களை பொறுத்துக் கொள்ளமாட்டாள். அதன் காரணமாக பன்முகத் தன்மைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு இருக்காது. அவன் மூலம் தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் தீமையே விளையும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

அப்படிப்பட்ட தீங்கு விளைவிக்கும் புழுக்கள் தலைவர்களாக  ஆனால் தேசத்திற்கு ஆபத்து.

சிறுவயதிலிருந்தே பிள்ளைகளிடம் இது போன்ற குணங்கள் தென்பட்டால் பெரியவர்கள் திருத்த வேண்டும். இல்லாவிடில் வயது வளர்வதோடு கூட சூழலால், சகவாசத்தால் அவையும் வளரத் தொடங்கும்.

இப்படிப்பட்ட குணங்கள் நம்மில் புகுந்து விடாமல் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதுபோன்ற  குணம் உள்ளவர்களிடம் இருந்து இயன்றவரை விலகி இருக்க வேண்டும்.

நல்லவர்களை எல்லாம் கடுமையாக விமர்சித்து தானே சிறந்தவன் என்று எண்ணும் ஆசை வெறி கொண்ட தலைவன் மூர்க்கர்களுக்கு முன்னுதாரணம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img