சுபாஷிதம்: நல்ல சொற்களை எவர் சொன்னாலும் கேட்க வேண்டும்!

Published:

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

76. நல்ல சொற்களை யார் சொன்னாலும் கேட்க வேண்டும்.

ஸ்லோகம்:

யுக்தியுக்தம் வசோ க்ராஹ்யம் பாலாதபி சுகாதபி |
யுக்திஹீனம் வச: (ஸ்) த்யாஜ்யம் வ்ருத்தாதபி சுகாதபி ||
— யோகவாசிஷ்டம் 

பொருள்:

அறிவுபூர்வமான சொற்களை வயதில் சிறியவரோ பெரியவரோ அல்லது கிளியோ கூறினாலும் கேட்டுக்கொள்ள வேண்டும். விவேகமற்ற சொற்களை பெரியவர் சொன்னாலும் சாட்சாத் சுக மகரிஷி சொன்னாலும் மறுதலிக்க வேண்டும்.

விளக்கம்:

நம் நலனை விரும்பி நல்ல கருத்து, நல்ல யோசனை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று கூறும் சுபாஷிதம் இது.

இந்த சுலோகத்தில் கிளி என்ற சொல்லை கிளி என்றும் சுக மகரிஷி என்றும் இரு பொருளில் பயன்படுத்தியுள்ளார் கவி.  யாரிடமிருந்து வேண்டுமானாலும் பாடம் கற்கலாம் என்ற பொருள் இதில் மறைந்துள்ளது.  சுக மகரிஷி போன்ற பிரம்ம ஞானி,  ஸ்திதப்ரக்ஞர் மனித வாழ்க்கைக்கு எதிராக கூறுவார் என்பது  கவியின் எண்ணம் அல்ல. விவேகமற்ற நடத்தையில் ஈடுபடக் கூடாது என்ற கருத்தை ஆழமாக கூற வேண்டும் என்பதற்காகவே சுகமகரிஷியின் பெயரை உதாரணத்துக்கு கூறியுள்ளார் கவி.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img