சுபாஷிதம்: கற்றோரின் குணநலன்கள்!

Published:

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

78. கற்றோரின் குணநலன்கள்!

ஸ்லோகம்:

யதா சக்தி சிகீர்ஷந்தி யதாசக்தி ச குர்வதே |
ந கின்சிதவமன்யன்தே நரா: பண்டிதபுத்தய : ||

நாப்ரப்யமபிவாஞ்சந்தி நஷ்டம் நேச்சந்தி சோசிதும் |
ஆபத்சு ச ந முஹ்யந்தி நரா: பண்டிதபுத்தய: ||
– மஹாபாரதம்

பொருள்:

அறிஞர் தன் சக்தியை அனுசரித்து பணிபுரிய  எண்ணுவார். எண்ணியது போலவே செய்வார். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட மாட்டார். எட்டாதவற்றுக்காக  ஏங்க மாட்டார். நஷ்டத்தைக் கண்டு கலங்க மாட்டார். அபாயத்தில் கூட விவேகத்தை இழக்க மாட்டார்.

விளக்கம்:

சிலரை கற்றோராக, அறிஞராக நாம் புகழ்வதுண்டு. அவர்களின் குணநலன்கள் என்ன?

மகாபாரதத்தில் விதுரர் அறிவாளிக்கு இருக்கவேண்டிய குணங்களாக பலவற்றை குறிப்பிடுகிறார். “நரா: பண்டிதபுத்தய:” என்று மகுடத்தோடு உள்ள பல ஸ்லோகங்களைக் கூறியுள்ளார். உதாரணத்திற்கு இரண்டினை இங்கு பார்ப்போம். 

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

எந்த பணியானாலும் சிந்தித்து பின் செயலாற்றுவது அவர்களின் முக்கிய இயல்பு. ஒரே ஒரு வேலையில் இறங்கி அதிலேயே மூழ்கி இருக்க மாட்டார். நேரத்தை வீணடிக்க மாட்டார். தன்னை சுய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். சன்மானம் அளித்தால் மகிழ மாட்டார். அவமதிப்பு நேர்ந்தால் வருந்த மாட்டார்.

அதிக செல்வம், கல்வி, ஐஸ்வர்யம் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார். இந்த இயல்புகள் கொண்டவரே அறிஞர். கற்றோர் என்றால் வெறும் பட்டம் பெற்றவர் மட்டுமே அல்ல என்பதை அறியவேண்டும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img