சுபாஷிதம்: கற்றோரின் குணநலன்கள்!

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

78. கற்றோரின் குணநலன்கள்!

ஸ்லோகம்:

யதா சக்தி சிகீர்ஷந்தி யதாசக்தி ச குர்வதே |
ந கின்சிதவமன்யன்தே நரா: பண்டிதபுத்தய : ||

நாப்ரப்யமபிவாஞ்சந்தி நஷ்டம் நேச்சந்தி சோசிதும் |
ஆபத்சு ச ந முஹ்யந்தி நரா: பண்டிதபுத்தய: ||
– மஹாபாரதம்

பொருள்:

அறிஞர் தன் சக்தியை அனுசரித்து பணிபுரிய  எண்ணுவார். எண்ணியது போலவே செய்வார். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட மாட்டார். எட்டாதவற்றுக்காக  ஏங்க மாட்டார். நஷ்டத்தைக் கண்டு கலங்க மாட்டார். அபாயத்தில் கூட விவேகத்தை இழக்க மாட்டார்.

விளக்கம்:

சிலரை கற்றோராக, அறிஞராக நாம் புகழ்வதுண்டு. அவர்களின் குணநலன்கள் என்ன?

மகாபாரதத்தில் விதுரர் அறிவாளிக்கு இருக்கவேண்டிய குணங்களாக பலவற்றை குறிப்பிடுகிறார். “நரா: பண்டிதபுத்தய:” என்று மகுடத்தோடு உள்ள பல ஸ்லோகங்களைக் கூறியுள்ளார். உதாரணத்திற்கு இரண்டினை இங்கு பார்ப்போம். 

எந்த பணியானாலும் சிந்தித்து பின் செயலாற்றுவது அவர்களின் முக்கிய இயல்பு. ஒரே ஒரு வேலையில் இறங்கி அதிலேயே மூழ்கி இருக்க மாட்டார். நேரத்தை வீணடிக்க மாட்டார். தன்னை சுய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். சன்மானம் அளித்தால் மகிழ மாட்டார். அவமதிப்பு நேர்ந்தால் வருந்த மாட்டார்.

அதிக செல்வம், கல்வி, ஐஸ்வர்யம் இருந்தாலும் அடக்கத்தோடு இருப்பார். இந்த இயல்புகள் கொண்டவரே அறிஞர். கற்றோர் என்றால் வெறும் பட்டம் பெற்றவர் மட்டுமே அல்ல என்பதை அறியவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories