நள்ளிரவில் பற்றி எரிந்த டீக்கடை! சிசிடிவி பதிவு கண்டு அதிர்ந்த போலீசார்!

tea-cup
tea-cup

டீக்கடை பாக்கியை செலுத்தும்படி கேட்டதற்காக கோபத்தில் ஒரு பைக் மெக்கானிக் கடைக்கு தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஹைதராபாதில் நடந்தது.

டீக்கடை கடன் பாக்கியை செலுத்தாவிட்டால் டீ தரமாட்டேன் என்று கூறி தன்னை அனைவர் முன்னாலும் அவமதித்ததால் முதிய பெண்மணி நடத்திவரும் டீ கடை மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினான் ஒரு பைக் மெக்கானிக். இந்த சம்பவம் ஹைதராபாத் எல்பி நகர் எல்லையில் நடந்துள்ளது.

என்டிஆர் நகர் காலனியில் உள்ள சிந்தசெட்டு பஸ் ஸ்டாப் அருகில் கண்டம்மா (65) என்ற பெண்மணி சில வருடங்களாக டீக்கடை நடத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார். அங்கே அருகிலேயே பைக் மெக்கானிக் கடை நடத்திவரும் ஷப்பீர் (40)

தினமும் அந்த டீக்கடையில் டீ குடித்து வருகிறான். மெக்கானிக்காக நல்ல பெயர் எடுத்த ஷப்பீர் குடிப்பழக்கத்துக்கு ஆளானான். அந்த பின்னணியில் தினமும் கடைக்கு வந்து டீ குடித்துவிட்டு கடன் பாக்கி வைத்துள்ளான். இப்போது அது மிகவும் அதிகமாக ஆகிவிட்டதால் கண்டம்மா 10 நாட்களாக பணம் கேட்டு வருகிறார். ஆனாலும் கண்டுகொள்ளாமல் தினமும் டீ குடித்து விட்டு காசு கொடுக்காமல் சென்று வந்தான்.

இந்த மாதம் 25 ஆம் தேதி கூட டீ குடிப்பதற்கு சென்றான் ஷப்பீர். அனைவர் முன்னும் பணம் கொடுக்காமல் டீ குடிக்க வராதே என்று திட்டி உள்ளார். பாக்கி பணத்தை கொடுத்துவிட்டு டீ கேட்கலாம் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

அனைவர் முன்னும் தன்னை அவமதித்து விட்டதாக கோபம் கொண்ட ஷப்பீர் அன்று நள்ளிரவு 2 மணிக்கு குடி மயக்கத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது டீக்கடை கண்ணில் பட்டது. சுற்றிலும் யாரும் இல்லாததால் தன்னுடைய பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து கடை மீது ஊற்றி நெருப்பு பற்ற வைத்துவிட்டான். ஒரேடியாக கடை தீப்பற்றி எரிந்ததை கவனித்த அடுத்த கட்டடத்தில் உள்ள வாட்ச்மேன் கூச்சலிட்டார். சப்பீர் அதைக் கேட்டு ஓடி விட்டான்.

சில நிமிட நேரத்திலேயே டீக்கடை எரிந்து சாம்பலாகியது. பாதிக்கப்பட்ட கண்டம்மா புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்த எல்பி நகர் போலீசார் அண்மையில் உள்ள சிசிடிவி கேமராவில் சோதித்தபோது க்ளூ கிடைத்தது.

சம்பவ நேரத்தில் பரபரப்பாக அங்கு திரிந்த ஷப்பீரை அடையாளம் கண்டு கைது செய்தனர். வாட்ச்மேன் கூட அவனை அடையாளம் காட்டியதால் ஷப்பீர் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அதனால் அவன் மீது வழக்குப்பதிவு செய்து ரிமாண்டுக்கு அனுப்பினார்கள்.

சப்பீர் பயன்படுத்திய பைக் கூட ஒரு வாரத்திற்கு முன்பு சிலகலகுடாவில் திருட்டு போன பைக் என்று தெரிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories