சுபாஷிதம்: ஆபத்துக் காலத்தில் உதவும் பூர்வ புண்ணியம்!

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

83. ஆபத்துக் காலத்தில் உதவும்  பூர்வ புண்ணியம்!

ஸ்லோகம்:

வனே ரணே சத்ருஜலாக்னிமத்யே 
மஹார்ணவே பர்வதமஸ்தகே வா |
சுப்தம் ப்ரமத்தம் விஷமஸ்திதம் வா 
ரக்ஷந்தி புண்யானி புராக்ருதானி ||
பர்த்ருஹரி

பொருள்:

அடர்ந்த காடுகளில், போர்க்களங்களில், எதிரியின் நடுவில், நீரில், நெருப்பில், கடலின் நடுவில், மலை உச்சியில், ஆழ்ந்த தூக்கத்தில், உணர்வு இழந்து கிடக்கும் துயரமான நிலையில்… நம்மைக் காப்பது நாம் முற்பிறவியில் செய்த நல்வினைகளே! 

விளக்கம்

எப்போதோ நாம் செய்த புண்ணியச் செயல் நமக்குத் தேவைப்படும் பொழுது எவ்வாறு உதவும் என்பதை தெரிவிக்கும் பர்த்ருஹரி இயற்றிய ஸ்லோகம். நாம் புண்ணியச் செயல்கள் செய்வதற்கு இதைவிட  ஊக்கமளிப்பது எது இருக்கும்?

பெரிய நகரங்களில், மக்கள் கூட்டத்தில், ஆயிரக்கணக்கில் ஓடும் வாகனங்களிடம் இருந்து தப்பித்து நலமாக வீடு திரும்புகிறோம் என்றால் அது நம் பூர்வ புண்ணியத்தால்தான். உலகில் நேரும் கோர விபத்துகளில் இருந்து ஓரிருவர் தப்பிப் பிழைத்த செய்திகளைக் கேட்கும்போது அதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றும்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

எப்போதோ செய்த நற்செயல்களின் பலன் அடுத்த பிறவியில் உதவுகிறது… நம்மை காக்கிறது. இந்த ஒரு ஆறுதல் போதும் நாம் பரோபகாரம் எதற்காக செய்ய வேண்டும் என்று அறிவதற்கு. புண்ணியம் என்பது சுபமளிப்பது.     

‘பரோபகாராய புண்யாய பாபாய பரபீடனம்’ என்கிறது சாஸ்திரம். பிறருக்கு உதவுவதே புண்ணியம். பிறருக்குத் தீமை செய்வதே பாவம். இதனை விளக்கும் ஸ்லோகம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories