சுபாஷிதம்: ஆபத்துக் காலத்தில் உதவும் பூர்வ புண்ணியம்!

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

83. ஆபத்துக் காலத்தில் உதவும்  பூர்வ புண்ணியம்!

ஸ்லோகம்:

வனே ரணே சத்ருஜலாக்னிமத்யே 
மஹார்ணவே பர்வதமஸ்தகே வா |
சுப்தம் ப்ரமத்தம் விஷமஸ்திதம் வா 
ரக்ஷந்தி புண்யானி புராக்ருதானி ||
பர்த்ருஹரி

பொருள்:

அடர்ந்த காடுகளில், போர்க்களங்களில், எதிரியின் நடுவில், நீரில், நெருப்பில், கடலின் நடுவில், மலை உச்சியில், ஆழ்ந்த தூக்கத்தில், உணர்வு இழந்து கிடக்கும் துயரமான நிலையில்… நம்மைக் காப்பது நாம் முற்பிறவியில் செய்த நல்வினைகளே! 

விளக்கம்

எப்போதோ நாம் செய்த புண்ணியச் செயல் நமக்குத் தேவைப்படும் பொழுது எவ்வாறு உதவும் என்பதை தெரிவிக்கும் பர்த்ருஹரி இயற்றிய ஸ்லோகம். நாம் புண்ணியச் செயல்கள் செய்வதற்கு இதைவிட  ஊக்கமளிப்பது எது இருக்கும்?

பெரிய நகரங்களில், மக்கள் கூட்டத்தில், ஆயிரக்கணக்கில் ஓடும் வாகனங்களிடம் இருந்து தப்பித்து நலமாக வீடு திரும்புகிறோம் என்றால் அது நம் பூர்வ புண்ணியத்தால்தான். உலகில் நேரும் கோர விபத்துகளில் இருந்து ஓரிருவர் தப்பிப் பிழைத்த செய்திகளைக் கேட்கும்போது அதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றும்.

எப்போதோ செய்த நற்செயல்களின் பலன் அடுத்த பிறவியில் உதவுகிறது… நம்மை காக்கிறது. இந்த ஒரு ஆறுதல் போதும் நாம் பரோபகாரம் எதற்காக செய்ய வேண்டும் என்று அறிவதற்கு. புண்ணியம் என்பது சுபமளிப்பது.     

‘பரோபகாராய புண்யாய பாபாய பரபீடனம்’ என்கிறது சாஸ்திரம். பிறருக்கு உதவுவதே புண்ணியம். பிறருக்குத் தீமை செய்வதே பாவம். இதனை விளக்கும் ஸ்லோகம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories