சுபாஷிதம்: ஆபத்துக் காலத்தில் உதவும் பூர்வ புண்ணியம்!

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

83. ஆபத்துக் காலத்தில் உதவும்  பூர்வ புண்ணியம்!

ஸ்லோகம்:

வனே ரணே சத்ருஜலாக்னிமத்யே 
மஹார்ணவே பர்வதமஸ்தகே வா |
சுப்தம் ப்ரமத்தம் விஷமஸ்திதம் வா 
ரக்ஷந்தி புண்யானி புராக்ருதானி ||
பர்த்ருஹரி

பொருள்:

அடர்ந்த காடுகளில், போர்க்களங்களில், எதிரியின் நடுவில், நீரில், நெருப்பில், கடலின் நடுவில், மலை உச்சியில், ஆழ்ந்த தூக்கத்தில், உணர்வு இழந்து கிடக்கும் துயரமான நிலையில்… நம்மைக் காப்பது நாம் முற்பிறவியில் செய்த நல்வினைகளே! 

விளக்கம்

எப்போதோ நாம் செய்த புண்ணியச் செயல் நமக்குத் தேவைப்படும் பொழுது எவ்வாறு உதவும் என்பதை தெரிவிக்கும் பர்த்ருஹரி இயற்றிய ஸ்லோகம். நாம் புண்ணியச் செயல்கள் செய்வதற்கு இதைவிட  ஊக்கமளிப்பது எது இருக்கும்?

பெரிய நகரங்களில், மக்கள் கூட்டத்தில், ஆயிரக்கணக்கில் ஓடும் வாகனங்களிடம் இருந்து தப்பித்து நலமாக வீடு திரும்புகிறோம் என்றால் அது நம் பூர்வ புண்ணியத்தால்தான். உலகில் நேரும் கோர விபத்துகளில் இருந்து ஓரிருவர் தப்பிப் பிழைத்த செய்திகளைக் கேட்கும்போது அதற்குக் காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றும்.

எப்போதோ செய்த நற்செயல்களின் பலன் அடுத்த பிறவியில் உதவுகிறது… நம்மை காக்கிறது. இந்த ஒரு ஆறுதல் போதும் நாம் பரோபகாரம் எதற்காக செய்ய வேண்டும் என்று அறிவதற்கு. புண்ணியம் என்பது சுபமளிப்பது.     

‘பரோபகாராய புண்யாய பாபாய பரபீடனம்’ என்கிறது சாஸ்திரம். பிறருக்கு உதவுவதே புண்ணியம். பிறருக்குத் தீமை செய்வதே பாவம். இதனை விளக்கும் ஸ்லோகம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories