February 13, 2025, 11:39 AM
25.6 C
Chennai

மருத்துவ வசதி இன்றி யாரும் மரணிக்கக் கூடாது! முதிய பெண்மணிக்கு தெலங்காணா ராஜ்பவனில் விருந்து!

dr-tamilisai-soundarrajan
dr-tamilisai-soundarrajan

சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் மகனையும் பேத்தியையும் மருமகனையும் இழந்த முதிய பெண்மணி. மனம் வருந்திய கவர்னர் 50 ஆயிரம் ரூபாய் பண உதவி.

பாம்பு கடித்து மற்றும் பிற அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் தேவையான சந்தர்ப்பங்களில் துரதிருஷ்டவசமான மரணங்களை தடுப்பதற்கு கிராமிய முதலுதவி சிகிச்சை மையங்கள் (பிஹெச்சி)  தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் ஆன்டிவெனம் இன்ஜெக்ஷன், மெடிக்கல் கிட் இவற்றோடு கூட பயிற்சி பெற்ற ஊழியர்கள் கைவசம் இருக்க வேண்டும் என்று தெலங்காணா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஏழைகள்,  பொருளாதார மற்றும் சமூகத்தில் பின்தங்கிய  வர்க்க மக்களுக்கு  கிராமங்களில் அத்தியாவசிய மருத்துவ  வசதிகளுக்கு தடை இருக்கக்கூடாது. தேவையான போது அத்தியாவசிய மருத்துவம் பெறுவதற்கு பொருளாதார, சமூக, பின்தங்கிய நிலைமை குறுக்கே வரக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு ஏழை தலித் முதிய பெண்மணியின்  அவஸ்தையை அறிந்து கொண்டு மனம் வருந்திய கவர்னர் அவரை புதன்கிழமை ராஜ்பவனுக்கு வரவேற்று மதிய உணவு  அளித்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கு போதுமான நித்யாவசிய சாமான்களோடு ரூ.50,000 பொருளுதவியும் செய்தார்.

ஜனகாம் மாவட்டம் பாலக்குர்த்தி மண்டலம் லக்ஷ்மி நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பண்டிபெல்லி ராஜம்மா (75) இருக்க இடமில்லாமல்  சாலைகளில் மரங்களின் கீழ் வசித்து வருகிறார்.

சரியான நேரத்தில் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் ஆரோக்கியமின்றி அவருடைய மகனும்  பாம்பு கடித்ததால் பேத்தியும் இறந்துபோனார்கள். பேத்திக்கு சரியான நேரத்தில் பாம்பு கடி மருந்து கொடுக்க வேண்டிய  இன்ஜக்ஷன் கொடுக்காததால் அவர் மரணித்தார். உடல் நலமின்றி  ராஜம்மாவின் மருமகன் கூட சரியான மருத்துவ வசதி இல்லாமல் மரணித்தார்.

இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு கவர்னர் மிகவும் வருந்தினார். மிகவும் ஏழையான முதிய பெண்மணி, அவர் மேல் ஆதாரப்பட்ட உடல் ஊனமுற்ற மகன் ஆகியோரின் நலனை கவனிக்க வேண்டுமென்று ஜனகாம் மாவட்டம் அதிகாரிகளோடு கூட உள்ளூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பிரதிநிதிகளையும் கவர்னர் உத்தரவிட்டார்.

கவர்னர் அழைப்பின் பேரில் ராஜ்பவனில் விருந்து உண்டேன் என்று ராஜம்மா மகிழ்ச்சியோடு கண்ணீர் விட்டார்.

ராஜம்மாவுக்காக வீடு கட்டித் தருவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நன்கொடை சேகரிப்பதோடு கூட தன் சொந்த உதவியாக ரூ80,000 நிதிஉதவி அளித்த பாலகுர்த்தி எஸ்ஐ கண்ட்ரதி சதீஷ் செய்த உதவியை கவர்னர் பாராட்டினார்.

ராஜம்மாவுக்குத் துணையாக நின்ற அந்த கிராம முன்னாள் சர்பஞ்ச் மணியம்மாவுக்கு கவர்னர் சன்மானம் செய்தார். டாக்டர் பி கிருஷ்ணா, தன்னார்வத் தொண்டர் மஹிந்தர் ஆகியோரின் முயற்சியை கவர்னர் பாராட்டினார். அவர்களிருவரும் முதிய பெண்மணிக்குத் துணையாக ராஜ்பவனுக்கு வந்திருந்தார்கள்.

முதிய பெண்மணிக்கு பொருளாதார உதவி அளித்த எஸ்ஐக்கு அந்த பணத்தை கவர்னர் தமிழிசை திரும்ப அளித்தது சிறப்பான விஷயம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories