மருத்துவ வசதி இன்றி யாரும் மரணிக்கக் கூடாது! முதிய பெண்மணிக்கு தெலங்காணா ராஜ்பவனில் விருந்து!

dr-tamilisai-soundarrajan
dr-tamilisai-soundarrajan

சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் மகனையும் பேத்தியையும் மருமகனையும் இழந்த முதிய பெண்மணி. மனம் வருந்திய கவர்னர் 50 ஆயிரம் ரூபாய் பண உதவி.

பாம்பு கடித்து மற்றும் பிற அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் தேவையான சந்தர்ப்பங்களில் துரதிருஷ்டவசமான மரணங்களை தடுப்பதற்கு கிராமிய முதலுதவி சிகிச்சை மையங்கள் (பிஹெச்சி)  தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் ஆன்டிவெனம் இன்ஜெக்ஷன், மெடிக்கல் கிட் இவற்றோடு கூட பயிற்சி பெற்ற ஊழியர்கள் கைவசம் இருக்க வேண்டும் என்று தெலங்காணா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஏழைகள்,  பொருளாதார மற்றும் சமூகத்தில் பின்தங்கிய  வர்க்க மக்களுக்கு  கிராமங்களில் அத்தியாவசிய மருத்துவ  வசதிகளுக்கு தடை இருக்கக்கூடாது. தேவையான போது அத்தியாவசிய மருத்துவம் பெறுவதற்கு பொருளாதார, சமூக, பின்தங்கிய நிலைமை குறுக்கே வரக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு ஏழை தலித் முதிய பெண்மணியின்  அவஸ்தையை அறிந்து கொண்டு மனம் வருந்திய கவர்னர் அவரை புதன்கிழமை ராஜ்பவனுக்கு வரவேற்று மதிய உணவு  அளித்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கு போதுமான நித்யாவசிய சாமான்களோடு ரூ.50,000 பொருளுதவியும் செய்தார்.

ஜனகாம் மாவட்டம் பாலக்குர்த்தி மண்டலம் லக்ஷ்மி நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பண்டிபெல்லி ராஜம்மா (75) இருக்க இடமில்லாமல்  சாலைகளில் மரங்களின் கீழ் வசித்து வருகிறார்.

சரியான நேரத்தில் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் ஆரோக்கியமின்றி அவருடைய மகனும்  பாம்பு கடித்ததால் பேத்தியும் இறந்துபோனார்கள். பேத்திக்கு சரியான நேரத்தில் பாம்பு கடி மருந்து கொடுக்க வேண்டிய  இன்ஜக்ஷன் கொடுக்காததால் அவர் மரணித்தார். உடல் நலமின்றி  ராஜம்மாவின் மருமகன் கூட சரியான மருத்துவ வசதி இல்லாமல் மரணித்தார்.

இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு கவர்னர் மிகவும் வருந்தினார். மிகவும் ஏழையான முதிய பெண்மணி, அவர் மேல் ஆதாரப்பட்ட உடல் ஊனமுற்ற மகன் ஆகியோரின் நலனை கவனிக்க வேண்டுமென்று ஜனகாம் மாவட்டம் அதிகாரிகளோடு கூட உள்ளூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பிரதிநிதிகளையும் கவர்னர் உத்தரவிட்டார்.

கவர்னர் அழைப்பின் பேரில் ராஜ்பவனில் விருந்து உண்டேன் என்று ராஜம்மா மகிழ்ச்சியோடு கண்ணீர் விட்டார்.

ராஜம்மாவுக்காக வீடு கட்டித் தருவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நன்கொடை சேகரிப்பதோடு கூட தன் சொந்த உதவியாக ரூ80,000 நிதிஉதவி அளித்த பாலகுர்த்தி எஸ்ஐ கண்ட்ரதி சதீஷ் செய்த உதவியை கவர்னர் பாராட்டினார்.

ராஜம்மாவுக்குத் துணையாக நின்ற அந்த கிராம முன்னாள் சர்பஞ்ச் மணியம்மாவுக்கு கவர்னர் சன்மானம் செய்தார். டாக்டர் பி கிருஷ்ணா, தன்னார்வத் தொண்டர் மஹிந்தர் ஆகியோரின் முயற்சியை கவர்னர் பாராட்டினார். அவர்களிருவரும் முதிய பெண்மணிக்குத் துணையாக ராஜ்பவனுக்கு வந்திருந்தார்கள்.

முதிய பெண்மணிக்கு பொருளாதார உதவி அளித்த எஸ்ஐக்கு அந்த பணத்தை கவர்னர் தமிழிசை திரும்ப அளித்தது சிறப்பான விஷயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories