மருத்துவ வசதி இன்றி யாரும் மரணிக்கக் கூடாது! முதிய பெண்மணிக்கு தெலங்காணா ராஜ்பவனில் விருந்து!

Published:

dr-tamilisai-soundarrajan
dr-tamilisai-soundarrajan

சரியான நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்காமல் மகனையும் பேத்தியையும் மருமகனையும் இழந்த முதிய பெண்மணி. மனம் வருந்திய கவர்னர் 50 ஆயிரம் ரூபாய் பண உதவி.

பாம்பு கடித்து மற்றும் பிற அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் தேவையான சந்தர்ப்பங்களில் துரதிருஷ்டவசமான மரணங்களை தடுப்பதற்கு கிராமிய முதலுதவி சிகிச்சை மையங்கள் (பிஹெச்சி)  தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் ஆன்டிவெனம் இன்ஜெக்ஷன், மெடிக்கல் கிட் இவற்றோடு கூட பயிற்சி பெற்ற ஊழியர்கள் கைவசம் இருக்க வேண்டும் என்று தெலங்காணா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஏழைகள்,  பொருளாதார மற்றும் சமூகத்தில் பின்தங்கிய  வர்க்க மக்களுக்கு  கிராமங்களில் அத்தியாவசிய மருத்துவ  வசதிகளுக்கு தடை இருக்கக்கூடாது. தேவையான போது அத்தியாவசிய மருத்துவம் பெறுவதற்கு பொருளாதார, சமூக, பின்தங்கிய நிலைமை குறுக்கே வரக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு ஏழை தலித் முதிய பெண்மணியின்  அவஸ்தையை அறிந்து கொண்டு மனம் வருந்திய கவர்னர் அவரை புதன்கிழமை ராஜ்பவனுக்கு வரவேற்று மதிய உணவு  அளித்தார். இரண்டு மூன்று மாதங்களுக்கு போதுமான நித்யாவசிய சாமான்களோடு ரூ.50,000 பொருளுதவியும் செய்தார்.

ஜனகாம் மாவட்டம் பாலக்குர்த்தி மண்டலம் லக்ஷ்மி நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பண்டிபெல்லி ராஜம்மா (75) இருக்க இடமில்லாமல்  சாலைகளில் மரங்களின் கீழ் வசித்து வருகிறார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

சரியான நேரத்தில் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் ஆரோக்கியமின்றி அவருடைய மகனும்  பாம்பு கடித்ததால் பேத்தியும் இறந்துபோனார்கள். பேத்திக்கு சரியான நேரத்தில் பாம்பு கடி மருந்து கொடுக்க வேண்டிய  இன்ஜக்ஷன் கொடுக்காததால் அவர் மரணித்தார். உடல் நலமின்றி  ராஜம்மாவின் மருமகன் கூட சரியான மருத்துவ வசதி இல்லாமல் மரணித்தார்.

இந்த விஷயங்களை தெரிந்துகொண்டு கவர்னர் மிகவும் வருந்தினார். மிகவும் ஏழையான முதிய பெண்மணி, அவர் மேல் ஆதாரப்பட்ட உடல் ஊனமுற்ற மகன் ஆகியோரின் நலனை கவனிக்க வேண்டுமென்று ஜனகாம் மாவட்டம் அதிகாரிகளோடு கூட உள்ளூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பிரதிநிதிகளையும் கவர்னர் உத்தரவிட்டார்.

கவர்னர் அழைப்பின் பேரில் ராஜ்பவனில் விருந்து உண்டேன் என்று ராஜம்மா மகிழ்ச்சியோடு கண்ணீர் விட்டார்.

ராஜம்மாவுக்காக வீடு கட்டித் தருவதற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நன்கொடை சேகரிப்பதோடு கூட தன் சொந்த உதவியாக ரூ80,000 நிதிஉதவி அளித்த பாலகுர்த்தி எஸ்ஐ கண்ட்ரதி சதீஷ் செய்த உதவியை கவர்னர் பாராட்டினார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ராஜம்மாவுக்குத் துணையாக நின்ற அந்த கிராம முன்னாள் சர்பஞ்ச் மணியம்மாவுக்கு கவர்னர் சன்மானம் செய்தார். டாக்டர் பி கிருஷ்ணா, தன்னார்வத் தொண்டர் மஹிந்தர் ஆகியோரின் முயற்சியை கவர்னர் பாராட்டினார். அவர்களிருவரும் முதிய பெண்மணிக்குத் துணையாக ராஜ்பவனுக்கு வந்திருந்தார்கள்.

முதிய பெண்மணிக்கு பொருளாதார உதவி அளித்த எஸ்ஐக்கு அந்த பணத்தை கவர்னர் தமிழிசை திரும்ப அளித்தது சிறப்பான விஷயம்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img