செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழியும் விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை!

redcloth-devotees1
redcloth-devotees1


விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை  செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிகிறது. ஜகத் ஜனனி கனகதுர்க்கை அம்மனின் தீட்சையில் இருக்கும்  ‘பவானிகள்’ அம்மனை தரிசித்து கொண்டு தீட்சையை முடித்துக் கொள்வதற்காக திரண்டு வந்தார்கள்.  நேற்றிலிருந்து ஐந்து நாட்கள் பவானி தீட்சையை நிறைவு செய்வதற்காக துர்காமல்லேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

மகா மண்டபம் எதிரில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் காலை 6:50 மணிக்கு கோவில் மண்டபத்தில் கோவில் கமிட்டியின் தலைமையில் புரோகிதர்கள் அக்னி பிரதிஷ்டை செய்ததோடு பவானி தீட்சை நிறைவு மகோத்ஸவங்கள் தொடங்கின. அக்னி குண்டங்களோடு கூட இருமுடி சமர்ப்பிப்பதற்கு இருபது கௌண்டர்களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

ஆலய பாலகமண்டலி சேர்மன் பைலா சோமிநாயுடு, ஈஓ சுரேஷ்பாபு, கோவில் ஸ்தானாச்சாரியார்  சிவப்பிரசாத சர்மா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள்.
 விநாயகர் ஆலயத்தில் இருந்து  அம்மன் சன்னதி வரை க்யூவரிசையில் பக்தர்கள் செவ்வாடை அணிந்து தலை மீது இருமுடி சுமந்து “ஜெய் பவானி!” நாம உச்சாரணத்தோடு துர்கா தேவியை தரிசித்து கொள்வதற்கு வரிசையாக நின்று இருந்தார்கள்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
redcloth-devotees
redcloth-devotees

தினமும் காலையில் நான்கு மணியிலிருந்து இரவு 8 மணி வரை தீட்சையை நிறைவு செய்வதற்காக வரும் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். தினமும் 10 ஆயிரம் பேர் பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு அளிக்கிறார்கள். ஆன்லைனில் டிக்கெட்டை  முன்பாகவே புக் செய்து கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

கோவிட் நிபந்தனைகளை கணக்கில் கொண்டு கிரி பிரதட்சிணம், ஸ்நான கட்டங்களில் ஸ்நானங்கள் ஆகியவற்றை தடை செய்துள்ளார்கள். கோவில் சுற்றுப்புறத்தில் முடி இறக்கும் வாய்ப்பு கிடையாது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது தாண்டிய முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தரிசனம் தடை விதித்துள்ளார்.

redcloth-devotees2
redcloth-devotees2

க்யூ வரிசைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சமுதாய இடைவெளியை கடைபிடிப்பதோடு கூட மாஸ்க் அணிய வேண்டும் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.
 தரிசனத்திற்குப் பின் மலையின் கீழ் மகா மண்டபம் அருகில் இருமுடி, ஹோம குண்டங்களின் ஏற்பாடு உள்ளது. தீட்சை முடிக்கும் சந்தர்ப்பமாக போலீசார் கட்டுதிட்டமான பந்தோபஸ்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.

பவானி தீட்சை மகோத்ஸவங்களில்  சுமார் 2 லட்சம் பேர் பவானி அம்மனை தரிசித்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளார்கள்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories