December 5, 2025, 3:17 PM
27.9 C
Chennai

செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழியும் விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை!

redcloth-devotees1
redcloth-devotees1


விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை  செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழிகிறது. ஜகத் ஜனனி கனகதுர்க்கை அம்மனின் தீட்சையில் இருக்கும்  ‘பவானிகள்’ அம்மனை தரிசித்து கொண்டு தீட்சையை முடித்துக் கொள்வதற்காக திரண்டு வந்தார்கள்.  நேற்றிலிருந்து ஐந்து நாட்கள் பவானி தீட்சையை நிறைவு செய்வதற்காக துர்காமல்லேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்துள்ளது.

மகா மண்டபம் எதிரில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் காலை 6:50 மணிக்கு கோவில் மண்டபத்தில் கோவில் கமிட்டியின் தலைமையில் புரோகிதர்கள் அக்னி பிரதிஷ்டை செய்ததோடு பவானி தீட்சை நிறைவு மகோத்ஸவங்கள் தொடங்கின. அக்னி குண்டங்களோடு கூட இருமுடி சமர்ப்பிப்பதற்கு இருபது கௌண்டர்களை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

ஆலய பாலகமண்டலி சேர்மன் பைலா சோமிநாயுடு, ஈஓ சுரேஷ்பாபு, கோவில் ஸ்தானாச்சாரியார்  சிவப்பிரசாத சர்மா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள்.
 விநாயகர் ஆலயத்தில் இருந்து  அம்மன் சன்னதி வரை க்யூவரிசையில் பக்தர்கள் செவ்வாடை அணிந்து தலை மீது இருமுடி சுமந்து “ஜெய் பவானி!” நாம உச்சாரணத்தோடு துர்கா தேவியை தரிசித்து கொள்வதற்கு வரிசையாக நின்று இருந்தார்கள்.

redcloth-devotees
redcloth-devotees

தினமும் காலையில் நான்கு மணியிலிருந்து இரவு 8 மணி வரை தீட்சையை நிறைவு செய்வதற்காக வரும் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். தினமும் 10 ஆயிரம் பேர் பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு அளிக்கிறார்கள். ஆன்லைனில் டிக்கெட்டை  முன்பாகவே புக் செய்து கொண்டவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.

கோவிட் நிபந்தனைகளை கணக்கில் கொண்டு கிரி பிரதட்சிணம், ஸ்நான கட்டங்களில் ஸ்நானங்கள் ஆகியவற்றை தடை செய்துள்ளார்கள். கோவில் சுற்றுப்புறத்தில் முடி இறக்கும் வாய்ப்பு கிடையாது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது தாண்டிய முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தரிசனம் தடை விதித்துள்ளார்.

redcloth-devotees2
redcloth-devotees2

க்யூ வரிசைக்குள் நுழையும் ஒவ்வொருவரும் சமுதாய இடைவெளியை கடைபிடிப்பதோடு கூட மாஸ்க் அணிய வேண்டும் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.
 தரிசனத்திற்குப் பின் மலையின் கீழ் மகா மண்டபம் அருகில் இருமுடி, ஹோம குண்டங்களின் ஏற்பாடு உள்ளது. தீட்சை முடிக்கும் சந்தர்ப்பமாக போலீசார் கட்டுதிட்டமான பந்தோபஸ்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.

பவானி தீட்சை மகோத்ஸவங்களில்  சுமார் 2 லட்சம் பேர் பவானி அம்மனை தரிசித்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories