February 11, 2025, 5:27 AM
24.6 C
Chennai

மகர சங்கராந்தி நாளில்… நாம் இந்த முறை வேண்டுவது இதைத்தான்!

makara-sankaranthi-day-wishes-2
makara-sankaranthi-day-wishes-2

பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

சுபங்கள் வந்து சேரட்டும்!

சனாதன தர்மத்தில் ‘சங்க்ரமண காலம்’ என்பது மிகவும் பவித்திரமான பருவநிலை. அதிலும் ‘மகர சங்க்ரமணம்’ என்பது தெய்வீகமான ஒரு பருவ காலம்.

பயிர்களின் பண்டிகையாக மட்டுமின்றி சூரியனை வழிபட்டு, நற்செயல்களால், நல்ல சங்கல்பங்களால் மனம் உறுதிபெறும் சுபவேளை இது.

ஸ்நானம், தானம், பித்ரு தர்ப்பணம், பூஜை முதலிய அனைத்தும் அதிக அளவில் பலனளிக்கும் புண்ணியகாலம் இது.

சுமார் ஓராண்டாக உலகை அச்சுறுத்தும் நோய்த் தொற்று சில நாடுகளில் குறைந்து வந்தாலும் சில இடங்களில் பயங்கரமாக பெருகி வருகிறது. புதிய மருந்துகள் மட்டுமே இதற்குத் தீர்வு என்று நவீன மருத்துவம் கூறும் சொற்கள் மீது ஆசையை வளர்த்துக் கொண்டு எதிர்பார்த்து இருக்கிறது உலகு.

நோயைத் தடுப்பதாகவும் வந்த பின்னரும் நிவாரணம் அளிப்பதாகவும் உள்ள ஔஷதங்களை நிரூபித்து ஆதாரங்களோடு வெற்றிகரமாக அளித்து வரும் ஆயுர்வேதம், ஹோமியோ மருந்துகளை அனைவரும் பயன்படுத்தி நற்பலன்களைப் பெற முடியும். ஆனால் மருத்துவம் என்றால் அலோபதியே என்ற முற்றிய எண்ணமும், வியாபார நோக்கமும் பெருகிவிட்டதால் மருந்து தொழிற்சாலைகளின் லாபத்திற்காக தேசிய வைத்திய முறைகளை அலட்சியப்படுத்துகிறார்கள். ‘ஆயுர் மந்த்ராலயம்’ மூலம் ஆயுர்வேத, ஹோமியோ மருத்துவ விவரங்களும் வெற்றிகளும் தெரியவந்தாலும் தகுந்த விதத்தில் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படவில்லை.

உலகிலேயே முதல் அறுவை சிகிச்சை செய்த (சுஸ்ருதர்) ஆயுர்வேதம் அன்று பயன்படுத்திய கருவிகளையே இன்றைக்கும் நவீன மருத்துவம் பயன்படுத்துகிறது. முதல் அறுவை சிகிச்சை செய்த ஆயுர்வேதத்தில் இன்றும் திறமையுள்ளவர்கள் உள்ளனர். ஆயுர்வேதம் மூலம் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்தது.

samavedam 1
samavedam 1

ஆனால் அறுவை சிகிச்சையை முதன்முதலில் செய்த சாஸ்திரத்தின் மீது புழுதி வாரி இறைத்து ஆயுர்வேதம் அறுவை சிகிச்சையில் ஈடுபடக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபடும் நவீன மருத்துவர்கள், ஆயுர்வேதம் பிறந்த நம் தேசத்திலேயே அதனை தடுக்கிறார்கள். அகம்பாவத்திற்கும் ஆவேசத்திற்கும் அடையாளமே இந்த போராட்டங்கள். வரலாற்றையே மறந்து விடும் இந்த அறியாமைக் கூட்டம் கண் திறப்பது எப்போது?

எது எப்படி ஆனாலும் கடவுளின் அருள் பாரததேசத்தின் ஆரோக்கியத்தின் மீது ஆசைகளை ஏற்படுத்தியுள்ளது. நாம் நம்முடையதான புராதான வழிமுறைகளுக்கு மதிப்பளிப்பது நம் கடமை என்பதை உணர்ந்து, அவற்றைக் கற்றறிந்து, அவற்றில் பயிற்சி பெற்று, நம் தேசிய மருத்துவ முறைகளை காப்பாற்ற வேண்டும்.

பாரதிய மருத்துவ முறைகளனைத்தும், சிறிதும் பரிசோதித்துப் பார்க்காத அரைகுறை மேதாவிகளால் கற்பிக்கப்பட்ட பொய் மூட்டைகளால் கண் காணாமல் மறைந்து போகும் அபாயமான நிலையில் உள்ளது.

ஆரோக்கியம் அளிக்கும் சூரிய பகவான் மகர ராசியில் சங்கமிக்கும் பருவகாலம் இது. இன்றிலிருந்து சௌரமான காலண்டர்படி உத்தராயணம் தொடங்குகிறது. சகல தேவதைகளின் ஓர் வடிவான சூரியனின் கிருபையால் நம் முயற்சிகள் பலன் பெறுவதோடு வெற்றிக்கான கதவுகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இறைவனை சரணடைவோம்!

அசுர சக்திகளின் அழிவுக்கும், சகல மங்களங்கள் ஏற்படுவதற்கும், ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும், உத்தமமான ஆதித்யனை ‘அகஸ்திய உபதேச’ த்தோடு சரணடைந்த ஸ்ரீராமனே நமக்கு ஆதரிசம்.

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் போன்ற பாராயணங்களோடும் சூரிய நமஸ்காரம், ஜபம், தியானம் ஆகியவற்றோடும் இந்த சூரிய பருவ காலத்தில் உலக நன்மைக்கு உபாசனை செய்வோம்!

நம் க்ஷேத்திரங்கள் அனைத்தும் பிறர் வசத்தில் அநியாயமாக அழிவுபடாமல் நலமாக இருக்க வேண்டும் என்றும் பரிபூரணமான பாதுகாப்பு நிலைபெற வேண்டும் என்றும் இந்த புண்ணிய வேளையில் குலதெய்வங்களை வேண்டுவோம்!

ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களால் வரவேற்று, இனிப்புகளைப் பகிர்ந்து, நல்ல பரிணாமங்களை விரும்பும் சுபவேளை இது. அந்த விருப்பங்களின் வலிமையால் ஆரோக்கியம் கிடைக்கட்டும்!

பூமியில் பயிர்களின் பசுமையும், வானில் ஆதித்யனின் பிரகாசமும் இயற்கையையும், இயற்கையை மதிப்பவர்களையும் காக்கட்டும்!

வரவிருக்கும் காலம் அனைவருக்கும் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யங்களை அருளட்டும்!

நோயற்ற வாழ்க்கையில் மக்கள் நிலைக்கட்டும்!

இறைவனைச் சரணடைவோம்! சுகங்கள் வந்து சேரட்டும்!

சக்தி நிறைந்த நல்ல மாற்றமே சங்கிரமணம். அது சனாதன தர்மத்திற்கும் பாரத தேசத்திற்கும் வசீகரத்தை அளிக்க வேண்டும் என்றும் நம் புராதன மருத்துவத்தின் பயனறியும் தலைமுறை உருவாக வேண்டும் என்றும் அதன் மூலம் ருஷிகளின் விஞ்ஞானம் வேண்டும் மறுவாழ்வு பெற வேண்டும் என்றும் பிரார்த்திப்போம்!

நோயற்ற ஆரோக்கியமான உயிர்களாக வாழ விரும்புவோம்!

நமோ மித்ராய பானவே ம்ருத்யோர்மாம் பாஹி !
ப்ராஜிஷ்ணவே விஸ்வ ஹேதவே நம: !

த்ருதபத்மத்வயம் பானும் தேஜோமண்டல மத்யகம் !
சர்வாதிவ்யாதி சமனம் சாயாஸ்லிஷ்டதனும் பஜே !!

மகரசங்கராந்தி நல்வாழ்த்துக்கள்!

Source: ருஷிபீடம் – ஜனவரி 2021 தலையங்கம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories