சுபாஷிதம்: நிரந்தர நட்பின் சவால்கள்!

subhashitam_1-5-696x392-3
subhashitam_1-5-696×392-3

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

103. நிரந்தர நட்பின் சவால்கள்! 

ஸ்லோகம்:

சர்வதா சுகரம் மித்ரம் துஷ்கரம் ப்ரதிபாலனம் !

அனித்யத்வாத்து சித்தானாம் ப்ரீதிரப்யத்ர பித்யதே !!

– வால்மீகி ராமாயணம்.

பொருள்:

நண்பனைப் பெறுவது எளிது. ஆனால் அந்த நட்பை பாதுகாத்துக் கொள்வது மிகக் கடினம். ஏனென்றால் மனித மனம் மாறிக் கொண்டே இருக்கும். சின்ன விஷயங்களில் வேறுபாடு வந்தால் கூட நட்பில் விரிசல் ஏற்பட்டு விடும்.

விளக்கம்:

நட்பை நிலைத்திருக்க செய்வது கடினம் என்று கூறும் ராமாயண சுலோகம் இது.

சுக்ரீவன் ராமனுடைய நட்பைப் பெற்ற பிறகு சீதையைத் தேடும் செயலில் நடந்த தாமதத்தைக் கண்டு கோபமடைந்த ராமன், தன் தம்பி லட்சுமணனை சுக்ரீவனிடம் அனுப்பினான். லட்சுமணன் மிக ஆக்ரோஷத்துடன் சுக்ரீவனிடம் சென்றான். சுக்ரீவன் கவலையும் வருத்தமுமாக தன் அமைச்சர்களோடு உரையாடிய போது கூறிய சொற்கள் இவை.

நண்பனுக்கு கோபம் வராதபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை இந்த ஸ்லோகத்தில் உள்ளது. 

தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடும் கட்சிகள் கூட்டணி அரசை அமைப்பதும், தலைவர்களிடையே ஏற்படும் சின்னச்சின்ன பூசல்களால் அந்த கூட்டணி அரசு உடைவதும் நாம் பார்த்து வருகிறோம். ஆதரவு அளித்த சிறு கட்சிகளுக்கு ஆத்திரம் வராமல் சமரசம் செய்துகொண்டு,  பல வரங்களை அளித்து அரசு நடத்தும் கட்சிகளையும் பார்க்கிறோம்.

நட்பை நிலைநிறுத்திக் கொள்வது சிரமமான பணி. முயற்சி எடுத்து கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைக்கும் ஸ்லோகம் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories