மத்திய அரசின் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தில் வேலை!

Published:

employment career opportunities - 2026
#image_title

என்.பி.சி.ஐ.எல்., எனும் இந்திய அணுசக்தி கழகம் ஸ்டைபென்டியரி டிரெய்னி (ST/TN) ஆபரேட்டர், பராமரிப்பாளர் (Maintainer) என 279 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விண்ணப்பக்க கடைசி தேதி செம்டம்பர் 11ம் தேதி.

மத்திய அரசின் நிறுவனமாக என்பிசிஐஎல் எனும் இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation Of India) செயல்பட்டு வருகிறது.

இதன் தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்தில் ஸ்டைபென்டியரி டிரெய்னி (ST/TN) ஆபரேட்டர், பராமரிப்பாளர் (Maintainer) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி என்ன?

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு?

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ. 21700. விண்ணப்பக்க கடைசி தேதி செம்டம்பர் 11ம் தேதி.

விண்ணப்பிப்பது எப்படி?

https://www.npcilcareers.co.in/ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Related articles

Recent articles

spot_img