ஆன்மீக கேள்வி பதில்- தினமும் கணபதியை துதிப்பதற்கு உகந்த நாமம், ஸ்லோகம் எது?

karpagavinayaka - 2026

ஸ்காந்த புராணத்தில் கணேச கண்டம் என்று ஒரு பகுதி உள்ளது. அதிலும் மற்றும் கணேச புராணத்திலும் பிரம்ம வைவர்த்த புராணத்திலும் கூறப்பட்டுள்ள மந்திரம் ‘ஸ்ரீ கணேசாய நமஹ”.

இதனை சிரத்தையோடு ஜபம் செய்தால் அனைத்து நற்பலன்களையும் பெறலாம்.

இதன் மகிமை சாதனை செய்வதால் தெரியவரும். இது மகாமந்திரம்.

இதிலுள்ள ‘க’ காரத்திற்கு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது.

ஸ்ரீ யோடு சேர்த்து இந்த மந்திரத்தை தினமும் ஜபம் செய்யலாம்.

ஆயிரம் எண்ணிக்கையில் ஜபம் செய்தால் அற்புதமான பலன் பெறலாம்.

பெரிய பெரிய மந்திரங்களைப் படிக்க வேண்டும் என்பதல்ல.

இந்த மந்திரத்தை சிரத்தையோடு ஜபம் செய்ய முடிந்தாலே போதும்.

இதன் தத்துவம் அறிந்து செய்தால் இன்னும் நல்லது.

அனேக தத்துவம் ‘கணம்’ எனப்படுகிறது. ஏகத்துவம் இறைவன்.

vinayaka peruman - 2026

பிரபஞ்சம் அனைத்தும் அனேகமாக காணப்படுகிறது. எனவே பிரபஞ்சம் அநேகம். அனேகமான பிரபஞ்சத்திற்கு இறைவன் என்பது ஒருவனே. “ஏகம் அத்விதீயம் ப்ரம்மா” அதுவே கணேச!

விஸ்வம், விஸ்வபதி இரண்டும் இந்த நாமத்திலே உள்ளது.

பிரம்ம ஞானம் அளிக்கக்கூடிய இந்த நாமத்தின் மகிமையை அறிந்து கொண்டு “ஸ்ரீ கணேசாய நமஹ” என்று ஜெபம் செய்யவேண்டும்.

முக்கியமான கணபதி ஸ்லோகங்கள் நிறைய உள்ளன. மந்திரத்திற்கு ஈடான ஸ்லோகம் இது. சாட்சாத் பிரம்மதேவர் செய்த ஸ்தோத்திரம். இதில் ‘வக்ர துண்ட’ மஹா மந்திரம் உள்ளது.

கேட்பதற்கு எளிதான சுலோகமாக காணப்படுகிறதே தவிர பக்தியோடு சாதனை செய்தால் பலன் சீக்கிரமாகவும் சம்பூர்ணமாகவும் கிடைக்கும்.

” வக்ரதுண்ட மஹாகாய கோடி சூர்ய சமப்ரப !
நிர்விக்னம் குரு மே தேவா ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”

கடினமான ஸ்லோகங்களை தேடிப் படிக்க வேண்டும் என்பதல்ல.

நமக்குத் தெரிந்தவற்றுள் உள்ள சிறப்பை அறிந்து கொண்டு அதனைப் படித்து வந்தாலே போதும்.

ருஷிகள் நம்மீது கருணையோடு இந்த ஸ்லோகங்களை பழக்கப்படுத்தி உள்ளார்கள்.

இந்த மந்திரத்தையும் இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கணபதியின் கிருபை சீக்ரம் கிடைக்கும்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories