December 5, 2025, 8:33 PM
26.7 C
Chennai

ஒரு வேளாள பக்தர் பெரியவாளிடம் கேட்டார் .”நான்…..காயத்ரி மந்த்ரம் சொல்லலாமா?

ஒரு வேளாள பக்தர் பெரியவாளிடம் கேட்டார் .”நான்…..காயத்ரி மந்த்ரம் சொல்லலாமா?..” என்று.

ரொம்பவே தர்மசங்கடமான கேள்வி! “சொல்லலாம் அல்லது கூடாது” என்று எந்த பதிலை சொன்னாலும் எதிர்ப்பு வரும்.

2012-பதிவு
–ரொம்பவே தர்மசங்கடமான கேள்வி! “சொல்லலாம் அல்லது கூடாது” என்று எந்த பதிலை சொன்னாலும் எதிர்ப்பு வரும். சனாதன தர்மத்தின் ஆணிவேர் பாரதம் என்றாலும், அது கப்பும் கிளையுமாக உலகம் பூரா பரவி, இப்போது கிளைகள் சின்னதானாலும், வேரின் இடம் மாராமல்தானே இருக்கிறது! ஸ்ரீமடம் எப்போதும் சாஸ்திர விரோதமான கார்யத்துக்கு துணை போகாது! ஆனால், எதிர்ப்பு எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் இருக்கும்தானே! ஆனால், என்ன தர்மசங்கடமான நிலைமையும், தர்மதேவதையான பெரியவாளிடம் தன் வாலை சுருட்டிக் கொண்டுவிடுமே!

பக்தரின் கேள்விக்கு நேரடியாக எந்த பதிலும் வரவில்லை. “ஒனக்கு எத்தனை கொழந்தேள்?…”

சளைத்தவரில்லை அந்த உண்மையான பக்தர்…”பெரியவங்க க்ருபையால, மூணு பொண்ணுங்களை பெத்திருக்கேன்….மூணும் சின்னக் கொழந்தைங்க…..அஞ்சு வயசு, மூணு வயசு, கடேசி ஆறு மாசம்……”

“ரொம்ப சரி. ஒரு பொண்ணுக்கு காயத்ரீ…ன்னு பேர் வை! இன்னொண்ணுக்கு சந்த்யா; மூணாவது ஸாவித்ரி! முக்யமா ஒண்ணு கேட்டுக்கோ! மூணு பொண்களையும் அழகா அந்தந்த முழுப்பேரையுமே சொல்லிக் கூப்டு! பேபி…லில்லி….பில்லி…ன்னெல்லாம் கூப்டாதே!……புரிஞ்சுதா? இப்டி, காயத்ரீ, சந்த்யா, ஸாவித்ரீ….ன்னு சொல்லிண்டிருந்தாலே, காயத்ரி ஜபம் பண்ணின புண்யம் ஒனக்கு கெடைச்சுடும்! க்ஷேமமா இருங்கோ!”

பக்தரின் உள்ளும்,புறமும் ஆனந்தம் பொங்கியது. சம்பிரதாய விரோதமானது என்றாலும், அவருக்கு ஆசை. அதை பெரியவா வெகு அழகாக தீர்த்து வைத்துவிட்டார்!—————————
குழந்தைகளுக்கு பகவானின் நாமங்களை வைப்பதே அவர்களை கூப்பிடும் சாக்கில் நம் நாக்கிலும், வீட்டிலும் பகவானின் நாமம் ஒலிக்கும் என்பதால்தான். நாராயணன் என்பதை நாணா, நாணு…என்றோ, லக்ஷ்மி என்பதை லக்கு என்றோ, தண்டபாணி என்பதை தண்டு அல்லது பாணி என்றோ நம் பக்கத்தில் வழக்கத்தில் உள்ள ஒன்று. இனியாவது திருத்திக்கொள்ளுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories