“கா…கா….ங்கிறா…அப்படீன்னா என்ன அர்த்தம்?”(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)

“கா…கா….ங்கிறா…அப்படீன்னா என்ன அர்த்தம்?”

(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)

(அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-142
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு பக்தையுடைய கவலை மிகவும் விநோதமாக இருந்தது.

“காக்கை nஉபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும்போது தலையில்வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படியே நடக்கிறது . மனசுக்கு ரொம்ப வேதனையாயிருக்கு.”

நடுத்தர வயது அம்மையாரின் இந்த சொற்களை கேட்டு மௌனமாக இருந்தார்கள் பெரியவாள்.

“ஒரு பெண் கல்யாணத்துக்கு இருக்கா.. ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா.. அநாதையாப் போயிடுமோன்னு கவலையாயிருக்கு..”

பெரியவாள் சொன்னார்கள்;

“தினமும் காக்கைக்கு சாதம் போடணும்.. தினமும் நல்லெண்ணெய் விளக்குப் போடணும். சனிக்கிழமையன்று சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணணும்..”

நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார்.

பிறகு தொண்டர்களிடம் பெரியவாள் விஸ்தாரமாகப் பேசினார்கள்.

“நம்ம மடத்துக்கு யானை,பசு,பூனை,சில சமயம் நாய்,பெருச்சாளி,எலி,குருவி, குரங்குன்னு எல்லாப் பிராணியும் வருது. ஆனால் காகம் மட்டும் வரதில்லே!”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 20 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார்;

“பெரியவா பரமேசுவர ஸ்வரூபம்.அதனால் சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்! தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லே!”

பெரியவா புன்முறுவல் பூத்து பிறகு சொன்னார்கள்;

“அகத்திலே காக்காக்குச் சாதம் போடுகிற போது காக்காய்,காக்காய்….காகம்,காகம்…வா வா -ன்னு கூப்பிடறதில்லே, அப்படீத்தானே?”

“ஆமாம்..”

“என்ன சொல்றா?”

“கா….கா….ங்கிறா…”

“அப்படீன்னா என்ன அர்த்தம்?”

எல்லாரும் விழித்தார்கள்.

“காக்கா…சாப்பிட வா..ன்னு அர்த்தம்” என்று ஒரு தொண்டர் கூறினார்.

“அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! வேற விசேஷ அர்த்தம் உண்டோன்னு கேட்டேன்.”

எல்லாரும் மௌனமாக நின்றார்கள்.

“கா….கா…ன்னா…காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம். பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.

கா…கா…ன்னா…பித்ருக்களே! எங்களை ரட்சியுங்கள் என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”

தொண்டர்கள் பிரமித்து நின்றார்கள்.

“அது மட்டுமில்லே. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவா இருக்கான் .காக்கையிடமும் இருக்கத்தானே செய்வான்?  பகவானுக்கு நைவேத்யம் பண்ணினால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியல்லே. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு ஜீவன்.. வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு – நமக்குள்ளே இருக்கிற அதே ஆத்மாவுக்கு – ஸ்வரூபம் வேறே -சாதம் போடுகிறோம்.இது அத்வைதம் தானே?”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 22 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களிலமட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.

“காக்கை, குருவி எங்கள் ஜாதி!” பாரதி, ஓர் அத்வைதி,பரமஞானி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories