“கா…கா….ங்கிறா…அப்படீன்னா என்ன அர்த்தம்?”(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)

“கா…கா….ங்கிறா…அப்படீன்னா என்ன அர்த்தம்?”

(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)

(அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-142
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்

ஒரு பக்தையுடைய கவலை மிகவும் விநோதமாக இருந்தது.

“காக்கை nஉபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும்போது தலையில்வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படியே நடக்கிறது . மனசுக்கு ரொம்ப வேதனையாயிருக்கு.”

நடுத்தர வயது அம்மையாரின் இந்த சொற்களை கேட்டு மௌனமாக இருந்தார்கள் பெரியவாள்.

“ஒரு பெண் கல்யாணத்துக்கு இருக்கா.. ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா.. அநாதையாப் போயிடுமோன்னு கவலையாயிருக்கு..”

பெரியவாள் சொன்னார்கள்;

“தினமும் காக்கைக்கு சாதம் போடணும்.. தினமும் நல்லெண்ணெய் விளக்குப் போடணும். சனிக்கிழமையன்று சிவன் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணணும்..”

நிம்மதியாகச் சென்று விட்டார் அம்மையார்.

பிறகு தொண்டர்களிடம் பெரியவாள் விஸ்தாரமாகப் பேசினார்கள்.

“நம்ம மடத்துக்கு யானை,பசு,பூனை,சில சமயம் நாய்,பெருச்சாளி,எலி,குருவி, குரங்குன்னு எல்லாப் பிராணியும் வருது. ஆனால் காகம் மட்டும் வரதில்லே!”

பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டர் சொன்னார்;

“பெரியவா பரமேசுவர ஸ்வரூபம்.அதனால் சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழையக் கூட பயம்! தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லே!”

பெரியவா புன்முறுவல் பூத்து பிறகு சொன்னார்கள்;

“அகத்திலே காக்காக்குச் சாதம் போடுகிற போது காக்காய்,காக்காய்….காகம்,காகம்…வா வா -ன்னு கூப்பிடறதில்லே, அப்படீத்தானே?”

“ஆமாம்..”

“என்ன சொல்றா?”

“கா….கா….ங்கிறா…”

“அப்படீன்னா என்ன அர்த்தம்?”

எல்லாரும் விழித்தார்கள்.

“காக்கா…சாப்பிட வா..ன்னு அர்த்தம்” என்று ஒரு தொண்டர் கூறினார்.

“அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! வேற விசேஷ அர்த்தம் உண்டோன்னு கேட்டேன்.”

எல்லாரும் மௌனமாக நின்றார்கள்.

“கா….கா…ன்னா…காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம். பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.

கா…கா…ன்னா…பித்ருக்களே! எங்களை ரட்சியுங்கள் என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”

தொண்டர்கள் பிரமித்து நின்றார்கள்.

“அது மட்டுமில்லே. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவா இருக்கான் .காக்கையிடமும் இருக்கத்தானே செய்வான்?  பகவானுக்கு நைவேத்யம் பண்ணினால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியல்லே. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு ஜீவன்.. வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு – நமக்குள்ளே இருக்கிற அதே ஆத்மாவுக்கு – ஸ்வரூபம் வேறே -சாதம் போடுகிறோம்.இது அத்வைதம் தானே?”

அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களிலமட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.

“காக்கை, குருவி எங்கள் ஜாதி!” பாரதி, ஓர் அத்வைதி,பரமஞானி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories