“பேபி – லில்லி – பில்லி-ன்னு கூப்பிடாதே!”

“பேபி – லில்லி – பில்லி-ன்னு கூப்பிடாதே!”

( தர்மசங்கடமான ஒரு கேள்விக்கு சாதுர்யமாகவும் திருப்தியாகவும் பதில் அளித்த பெரியவா)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

(முன்பு படித்தது ஆனால் இது சற்று விரிவான கட்டுரை)

ஒரு வேளாள பக்தர் “நான் காயத்ரீ மந்திரம் சொல்லலாமா?” என்று கேட்டார்.

தர்மசங்கடமான கேள்வி!

“சொல்லலாம்; கூடாது” என்று எதைச் சொன்னாலும் அதற்கு சாதக – பாதகமான விமரிசனங்கள் வந்துவிடும்.

ஸ்ரீமடத்தின் பணி சநாதன தர்மங்களைப் பேணிப் பாதுகாப்பது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பாரதம் எதிர்கொண்ட தாக்குதல்கள் ஏராளம். அவைகளைத் தாங்கிக் கொண்டு,சில சமயங்களில் நாணல் போல் வளைந்து கொடுத்துக் கொண்டு,பின்னர் புயல்-காற்று நின்றதும் நிமிர்ந்து நின்று,தன் வேர்களைக் காப்பாற்றிக் கொள்ளும் தனித் திறமை,பாரத சமுதாயத்துக்கு உண்டு.

ஆனால்,ஒவ்வொரு மாற்றத்திலும் ஸ்ரீமடம் தலையிட்டுத்தான் ஆகவேண்டுமா? அதன் பங்கு எவ்வளவு? இன்றைய சிந்தனை நாளைக்கே பழசாகிப் போய் விடுகிறது; ஒதுக்கித் தள்ளப்படுகிறது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 21 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அணையை உடைத்துக் கொண்டு வரும் வெள்ளப் பெருக்கின் சீற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது, என்றாலும், வெள்ளம் ஒரு நாள் வடிந்து ஆற்றின் நீரோட்டம் சீராக அமையத்தானே செய்கிறது.

இப்படியெல்லாம், பெரியவாளுக்கு சிந்தனை உண்டா? என்பதை அறிந்தவர் யாருமிலர்!

ஆனால், எந்த ஓர் இக்கட்டான நிலயையும் தளர்த்தி இயல்பான போக்கில் விடும் தனியாற்றல் பெரியவாளுக்கு உண்டு.

பக்தரின் அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை.”உனக்கு எத்தனை குழந்தைகள்?” என்று கேட்டார்கள்.

அவரிடமிருந்து ஆச்சரியமான பதில் வந்தது.

“உங்க கிருபையால், மூணு பெண்களைப் பெத்திருக்கேன். சின்னக் குழந்தைகள்,அஞ்சு வயது,மூணு வயது, ஆறு மாசம்..”

“ஒரு பெண்ணுக்குக் காயத்ரீ-ன்னு பேர் வை. இன்னொன்று ஸந்த்யா,மூணாவது சாவித்திரி மூணு பெண்களையும் அந்தந்த பேரைச் சொல்லியே  கூப்பிடு. ‘பேபி – லில்லி – பில்லின்னு கூப்பிடாதே!”

“இப்படி காயத்ரீ -ஸந்த்யா – ஸாவித்ரீ ன்னு சொல்லிக் கொண்டிருந்தாலே காயத்ரீ ஜபம் செய்த புண்ணியம் உனக்குக் கிடைச்சுடும்.

பக்தரின் முகத்தில் ஆனந்தவெள்ளம் பொங்கியது.  சம்பிரதாய விரோதமான ஒரு காரியத்தை  செய்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த அவருக்கு  சிந்தனைத் தெளிவை அனுக்ரஹித்து விட்டார்கள்  பெரியவா.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 22 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பெரியவாளிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு  மகிழ்ச்சியோடு சென்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories