கார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்!

Published:

aiyappan maalai - 2026

இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.

கார்த்திகை முதல் தேதி இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் விளக்கு ஏற்றப் பட்டு, மண்டல பூஜை முறைப்படி தொடங்கப் பட்டது. இதை முன்னிட்டு இன்று காலை முதலே, பல்வேறு இடங்களிலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து செல்வதற்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

குருசாமிகளின் ஆசியுடன், துளசி மணி மாலை அணிந்து, 41 நாள் மண்டல காலங்களில் பூஜை செய்து, விரதம் இருந்து, மண்டல பூஜைக் காலத்தில் சபரிமலை ஐயப்ப ஸ்வாமியை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img