December 7, 2025, 3:33 AM
24.5 C
Chennai

கோபத்தை வெல்வதெப்படி? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar 1 - 2025

ஒரு சிஷ்யர் ஆச்சார்யாளிடம் கோபத்தை வெல்வது எப்படி என கேட்டதற்கு ஜேஷ்ட மகாசன்னிதானம் கூறிய அருளுரை

கேள்வி: கோபத்தை எப்படி வெல்வது?

ஆச்சார்யாள்: இதனால் எனக்கு எவ்வித பிரயோஜனம் இருக்கப்போவதில்லை மற்றொருவன் என்னை திட்டுகிறான். அதனால் எனக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படுகிறதா? ஒன்றுமில்லையே அதனால் நான் ஏன் கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் இவ்வாறு நினைத்தால் கோபம் அடங்கிவிடும்.

கேள்வி: இவ்வாறு நினைப்பது மட்டும் போதுமா

ஆச்சார்யாள்: இல்லை மேற்கொண்டு யோசிக்க வேண்டும் இப்பொழுது நான் கோபத்தினால் ஒருவனை திட்டி விட்டேன் என்றால் நான் பெரிய காரியத்தை சாதித்து விட்டதாக தோன்றலாம். உண்மையில் நான் என் கோபத்திற்கு அடிமையாகி விட்டேன் அல்லவா. ஒரு எதிரியை வெல்ல சென்று விட்டு இன்னொரு பெரிய எதிரியால் வெல்லப்பட்டு விட்டேன். கோபம் என்னை நாசம் செய்கிறது என் புத்தியை கெடுத்துவிடுகிறது. எதை நான் செய்யக் கூடாது அதை செய்யத் தூண்டுகிறது. கோபத்திற்கு நான் ஏன் அடிமையாக வேண்டும்? மற்றொருவனை திட்டியதால் ஏற்படும் திருப்தியை விட கோபத்தை அடக்கியதால் திருப்பியும் அதிகமாக கிடைக்கும். இம்மாதிரி சிந்திக்கவேண்டும். கோபம் வருவதற்கு முன்பே சற்று கவனத்துடன் பார்த்தால் கோபம் வருகிறது என்று தெரியும். இதை தெரிந்து கொண்டால் அதன் பின் கோபத்தை அடக்க முயற்சி செய்யலாம். இம்மாதிரி தெரிந்த மறுகணமே பாதி கோபம் அடங்கிவிடும். பல மக்களுக்கு கோபம் வந்த பிறகே தெரியும். அவர்கள் வருமுன் அறிந்து கொண்டு நான் பொறுமைக்கு இடம் கொடுத்தால் எனக்குத்தான் ஸ்ரேயஸ். மேலும் கோபம் தேவையா? இவனை மன்னித்தால் நான் கோபத்தை வென்றது போல் ஆகும் அதுவே உத்தமமானது என்று சிந்திக்கலாம். அவ்வாறு சிந்திப்பதன் மூலம் கோபம் இறங்கிவிடும்.

கேள்வி: கோபத்தினால் ஆன்மீக வாழ்விற்கு இடையூறுகள் ஏற்படுமா?

ஆச்சார்யாள்: காமம் கோபம் லோபம் இவை மூன்றும் பகவான் பகவத்கீதையில் நரகத்தின் கதவுகள் ஆக கூறுகிறார். கோபம் வந்தவன்தான் என்ன செய்கிறான் என்று யோசிக்க மாட்டான். விபரீதமான செயல்களை செய்து விடுகிறான். அதனால் அவனுக்கு பாவம் ஏற்படுகிறது. பாவம் மூலமாக கோபம் ஒருவனை நாசமாக்கி விடுகிறது. ஆதலால் கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

கேள்வி: கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றால் பிறரை கண்டிப்பதற்காக சத்தம் போடக்கூடாது என்று அர்த்தமா?

ஆச்சார்யாள்: கட்டளைகளை எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கலாம். அப்படி இல்லாவிட்டால் அலுவகங்களில் காரியங்கள் கோபம் வர வேண்டாம் என்று சொன்னால் மனதில் இவனை நான் துன்புறுத்த வேண்டும் பழிவாங்க வண்டும் என்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. முதலில் சாந்தமாக சொல்ல வேண்டும் அவ்வாறு நடக்காவிட்டால் கண்டிப்பாக இப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் மனதிற்கு கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories