கோபத்தை வெல்வதெப்படி? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar 1 - 2026

ஒரு சிஷ்யர் ஆச்சார்யாளிடம் கோபத்தை வெல்வது எப்படி என கேட்டதற்கு ஜேஷ்ட மகாசன்னிதானம் கூறிய அருளுரை

கேள்வி: கோபத்தை எப்படி வெல்வது?

ஆச்சார்யாள்: இதனால் எனக்கு எவ்வித பிரயோஜனம் இருக்கப்போவதில்லை மற்றொருவன் என்னை திட்டுகிறான். அதனால் எனக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படுகிறதா? ஒன்றுமில்லையே அதனால் நான் ஏன் கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் இவ்வாறு நினைத்தால் கோபம் அடங்கிவிடும்.

கேள்வி: இவ்வாறு நினைப்பது மட்டும் போதுமா

ஆச்சார்யாள்: இல்லை மேற்கொண்டு யோசிக்க வேண்டும் இப்பொழுது நான் கோபத்தினால் ஒருவனை திட்டி விட்டேன் என்றால் நான் பெரிய காரியத்தை சாதித்து விட்டதாக தோன்றலாம். உண்மையில் நான் என் கோபத்திற்கு அடிமையாகி விட்டேன் அல்லவா. ஒரு எதிரியை வெல்ல சென்று விட்டு இன்னொரு பெரிய எதிரியால் வெல்லப்பட்டு விட்டேன். கோபம் என்னை நாசம் செய்கிறது என் புத்தியை கெடுத்துவிடுகிறது. எதை நான் செய்யக் கூடாது அதை செய்யத் தூண்டுகிறது. கோபத்திற்கு நான் ஏன் அடிமையாக வேண்டும்? மற்றொருவனை திட்டியதால் ஏற்படும் திருப்தியை விட கோபத்தை அடக்கியதால் திருப்பியும் அதிகமாக கிடைக்கும். இம்மாதிரி சிந்திக்கவேண்டும். கோபம் வருவதற்கு முன்பே சற்று கவனத்துடன் பார்த்தால் கோபம் வருகிறது என்று தெரியும். இதை தெரிந்து கொண்டால் அதன் பின் கோபத்தை அடக்க முயற்சி செய்யலாம். இம்மாதிரி தெரிந்த மறுகணமே பாதி கோபம் அடங்கிவிடும். பல மக்களுக்கு கோபம் வந்த பிறகே தெரியும். அவர்கள் வருமுன் அறிந்து கொண்டு நான் பொறுமைக்கு இடம் கொடுத்தால் எனக்குத்தான் ஸ்ரேயஸ். மேலும் கோபம் தேவையா? இவனை மன்னித்தால் நான் கோபத்தை வென்றது போல் ஆகும் அதுவே உத்தமமானது என்று சிந்திக்கலாம். அவ்வாறு சிந்திப்பதன் மூலம் கோபம் இறங்கிவிடும்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

கேள்வி: கோபத்தினால் ஆன்மீக வாழ்விற்கு இடையூறுகள் ஏற்படுமா?

ஆச்சார்யாள்: காமம் கோபம் லோபம் இவை மூன்றும் பகவான் பகவத்கீதையில் நரகத்தின் கதவுகள் ஆக கூறுகிறார். கோபம் வந்தவன்தான் என்ன செய்கிறான் என்று யோசிக்க மாட்டான். விபரீதமான செயல்களை செய்து விடுகிறான். அதனால் அவனுக்கு பாவம் ஏற்படுகிறது. பாவம் மூலமாக கோபம் ஒருவனை நாசமாக்கி விடுகிறது. ஆதலால் கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

கேள்வி: கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றால் பிறரை கண்டிப்பதற்காக சத்தம் போடக்கூடாது என்று அர்த்தமா?

ஆச்சார்யாள்: கட்டளைகளை எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கலாம். அப்படி இல்லாவிட்டால் அலுவகங்களில் காரியங்கள் கோபம் வர வேண்டாம் என்று சொன்னால் மனதில் இவனை நான் துன்புறுத்த வேண்டும் பழிவாங்க வண்டும் என்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. முதலில் சாந்தமாக சொல்ல வேண்டும் அவ்வாறு நடக்காவிட்டால் கண்டிப்பாக இப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் மனதிற்கு கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories