எது ஆத்மா? ஆச்சார்யாள் அருளுரை!

bharthi theerthar
bharthi theerthar

ஸீலோகத்தில் “தேஹ வாஸனை” யைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. தேஹ வாஸனையும் மூன்று விதமாகும்.

தேஹே ஆத்மத்வப்ராந்தி:
தேஹே குணாதானப்ராந்தி:
தேஹே தோஷாபனயப்ராந்தி:
இதில் முதலாவதான “தேஹே ஆத்மத்வ ப்ராந்தி” யைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சார்வாகர்கள் உடலையே ஆத்மா என்று கருதுகிறார்கள். உடலிலிருந்து வேறுபட்ட ஆத்மா கிடையாது என்பது அவர்களது மதம். ஆனால், அது மிகவும் தவறானது என்று மற்ற தார்சனீகர்கள் அவ்வளவு பேரும் விளக்கிவிட்டனர்.

சரீரமே ஆத்மா என்றால் பிறந்தவுடன் குழந்தைக்கு தான் பாலைச் சாப்பிட வேண்டும் என்னும் நினைவு எவ்வாறு ஏற்படுகிறது? நினைவு இப்போது வர வேண்டுமானால், பாலைச் சாப்பிட்டால் பசி அடங்கும் என்ற அனுபவம் முந்தைய பிறவியில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆகவே, இப்போதைய அறிவு முந்தைய அனுபவத்திலிருந்துதான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நாம் என்றாவது ஒருவரைப் பார்த்திருந்தால்தான் அவரை இப்போது நமக்கு ஞாபகம் வரும். பார்த்திருக்காவிட்டால் அவரை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது? முன்பு ஒருவரைப் பார்த்த நபரும் இப்போது அவரை ஞாபகப்படுத்திக்கொள்ளும் நபரும் ஒருவராகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொருவர் பார்த்த ஒன்றை இன்னொருவர் எப்படி ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழும்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆகவே, குழந்தையானது பாலைக் குடிக்க வேண்டும் என்று அறிவதற்கு அதற்கு முந்தைய பிறவி ஒன்று இருந்திருக்க வேண்டும். இதைப் போன்ற பல விதமான யுக்திகளைக் காட்டி சார்வாகர்களின் கொள்கையை மற்ற தர்சனங்களைச் சேர்ந்தவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே, தேஹ வாஸனையில் முதல் விதமான “தேஹமே ஆத்மா” என்ற எண்ணம் மிகத் தவறானதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories