April 28, 2025, 8:56 AM
28.9 C
Chennai

மஹாதேவஷ்டமி: சிவநாமாவல்யஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

sivan
sivan

ஆதிசங்கரர் அருளிய சிவநாமாவல்யஷ்டகம்
1.ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!
பூதேச பீதபயஸ¨தன மாமநாதம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே. மகேசனே. சம்போ. பூதங்களின் தலைவரே. பயந்தவர் பயம் களைபவரே. ஸம்ஸாரம் என்ற துன்பக்காட்டிலிருந்து அநாதனான என்னைக் காத்தருளும்.

2.ஹேபார்வதீஹ்ருதயவல்லப சந்த்ரமௌலே
பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப!
ஹேவாமதேவ பவ ருத்ர நிநாகபாணே
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹே பார்வதீகாந்த!ச்ந்த்ரமௌலே!வாமதேவ!பிரமதநாதனே!மேருவை வில்லாகக் கொண்டவரே. பவனே. ருத்ரனே. பிநாகத்தை வில்லாகக் கொண்டவரே. ஸமமஸாரமாகிய து:கப்பிடியிலிருந்து என்னைக் காப்பாயாக.

3.ஹேநீலககண்டவ்ருஷபத்வஜ பஞ்சவர்த்ர
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ I
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹே நீலகண்டனே. காளைக்கொடியோனே. ஐந்துமுகங்கள் கொண்டவனே. உலகக் கடவுளே. ஆதிசேஷனை வளையாகக் கொண்டவனே. ப்ரமதத்தலைவனே. சர்வனே. ஜடாபாரம் தாங்கியவனே. பசுபதியே. கிரிஜாபதியே. என்னை உலகியல் து:க்கத்திலிருந்து காத்தருள்வாயாக!

ALSO READ:  சபரிமலையில் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகல தொடக்கம்!

4.ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச I
பாணேச்வராந்தரியோ ஹரலோக நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹே விசிவநாத, சிவ. சங்கர. தேவ தேவ. கங்காதர. பிரமத நாயக. நந்திக்கு ஈசனே. பாணாஸுரன், அந்தகாஸுரன் ஆகியோரை அழித்தவரே. ஹரனே உலக நாதனே என்னை ஸம்ஸாரதுக்கத்திலிருந்து காத்தருள்வீராக!

5.வாராணஸீபுரபதே மணிகர்ணிகேச
விரேச தக்ஷமககால விபோ கணேச!
ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

வாராணஸீ நகரத்தின் நாயகநே!மணிகர்ணிகைத் தலைவனே. வீரர்களின் தலைவனே. தக்ஷயாகத்தை குலைத்தவனே. விபோ. ப்ரமத கணங்களின் தலைவனே. எல்லாம் அறிந்தவனே. எல்லோர் ஹ்ருதயத்திலும் குடி கொண்டவனே. நாதனே என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருளவேணுமே.

6.ஸ்ரீமன்மஹேச க்ருபாமய ஹேதயாலோ
ஹேவ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத!
பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஸ்ரீ மஹாதோவ, கருணையே உருவானவரே. ஆகாயத்தைக் கேசமாகக் கொண்டவரே. நீலகண்டரே, கணங்களுக்கு நாதரே. விபூதி பூசியவரே. மண்டையோடு மாலையணிந்தவரே. என்னை ஸம்ஸாரத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.

7.கைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ!
நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ALSO READ:  பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!

கைலாயமலையில் வாழும் ஹே சிவபிரானே. யமனை வென்றவனே. முக்கண் உடையானே. மூவுலகிலும் வாழ்பவனே. விஷ்ணுவின் அன்பனே. செருக்கு களைபவனே. சக்தியின் நாதனே. என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருள வேண்டுமே!

8.விச்வேச விச்வபவநாசக விச்வரூப
விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச!
ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!

ஹே உலக நாயகனே. உலகில் பிறப்பதை நீக்குபவனே உலகே உருவானவனே. மூவுலகிலும் குணம்மிக்கவரில் மேலானவனே ஹேவிச்வநாத. கருணையுருவானவனே. எளியோருக்குப் பங்காளனே. என்னை உலகியல் துன்பத்திலிருந்து காத்தருள வேண்டுமே!

9.கௌரீவிலாஸபவனாய மஹோச்வராய
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய!
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்யது:கதஹநாய நம:சிவாய!!

பார்வதியின் கேளிக்கையிடமேயான மஹேச்வரனுக்கு சிவனுக்கு நமஸ்காரம். அவர் ஐந்து முகமுடையவர், சரணம் என்று வந்தவருக்கு கல்பகமரம் போன்றவர். அகில உலகுக்கும் தலைவர். அவர். ஏழ்மை, துன்பங்களைக் களைபவரும் அவரே.

சிவநாமாவல்யஷ்டகம் முற்றிற்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories