இன்பதுன்பம்: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

சில சந்தர்ப்பங்களில் சில விசேஷ குணங்கள் மனிதனுக்கு இன்றியமையாதவை ஆகின்றன. உதாரணமாக கஷ்டதசையில் தைரியம், செல்வத்துக்கு நடுவில் எளிமை, யுத்த களத்தில் வீரம், வித்தையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம், பொது மக்களுக்கு முன் பிரசங்கம் செய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பொதுவாக மனித வாழ்க்கையில் நல்ல காலமும், கெட்ட காலமும் மாறி மாறி வருகின்றன. மனிதன் கஷ்டங்களை எதிர்கொள்ளும்பொழுது அவன் தன் நல்ல காலம் முடிந்து விட்டதாக ஒருபொழுதும் நினைக்கக்கூடாது.

இரவுக்குப் பின் பகல் வருவது மாதிரி கெட்ட காலத்துக்குப்பின் நல்ல காலம் நிச்சயமாக வரும். இந்த தீவிர நம்பிக்கை இருந்தால்தான் மனிதன் வாழ்க்கையில் எந்தவிதமான கஷ்ட நிலைமையையும் எதிர்கொள்ள முடியும்.

ராமாயணத்தில் ஸ்ரீராமரும் மஹாபாரதத்தில் தர்மபுத்ரரும் வனவாசம் புரிய வேண்டி இருந்தது. ஆனால் அவர்கள் தைரியத்தை இழக்காமல் வனவாசம் செய்து கடைசியில் சுகத்தை பெற்றார்கள்.

அதே மாதிரி ஒரு மனிதன் நிறைய பணத்தை சம்பாதித்தாலும் அவன் பகவத் கிருபையால் தான் பணம் கிடைத்தது என்று எண்ண வேண்டும்.

மேலும் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அவன் கர்வமடைந்து தப்பான காரியங்களை செய்ய தொடங்கினால் கடைசியில் அவன் கஷ்டப்பட வேண்டி வரும்.

ராவணனும் துரியோதனனும் ஐஸ்வர்யத்தை பெற்றார்கள். ஆனால் அகங்காரத்தினால் பாவ காரியங்களைச் செய்தார்கள். இது அவர்களை கடைசியில் அழியவைத்தது நமக்கு தெரியும்.

யுத்த களத்தில் இறங்கும் வீரனுக்கு அவனுடைய வீரம் தலைதூக்கி நிற்கும் குணமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு சண்டையினால் ஏற்படப்போகும் கஷ்டத்தை எண்ணி அவன் சண்டை போட தயங்கக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் அவன் நிமிர்ந்து நின்று அச்சமின்றி தைரியமாக யுத்தம் புரிய வேண்டும்

மேலும் மனிதன் சந்துஷ்டி அடையக் கூடாத ஒரு துறை இருக்கிறது. அதுதான் புலமை பெறுதல் என்பது. கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மனிதனுக்கு மேலும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் வேண்டும்.

சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் சத்சங்களுக்குச் சென்று அறிவைப் பெருக்கிக் கொள்வது நிச்சயம் நன்மை பயக்கும்.

அதே மாதிரி பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது கேட்பவர்களின் மனதை மகிழ்விக்கும் படி பேச முடிய வேண்டும்.

தொடர்ந்து பயிற்சி செய்தால் இவை மனிதனின் வாழ்க்கையை நிஜமாக மாற்றிவிடும் குணங்களில் சிலவாகும்

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories