இன்று தன்வந்திரி ஜெயந்தி!

images 50 1 - 2026

ஐப்பசி மாதம் தேய்பிறை திரியோதசி அன்று தன்வந்திரி பகவான் பூமியில் அவதரித்த நாளாக சொல்லப்படுகிறது.இதை தன்வந்திரி பகவானின் பிறந்தநாள் என்றும் சொல்லுவார்கள். இந்த தன்வந்திரி ஜெயந்தியானது இன்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை மாலை 6.00 மணி வரை இருக்கின்றது.சில இடங்களில் மாலை 5.49மணிவரை திரியோதசி இருக்கும்.

அக்22 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கே தொடங்கக்கூடிய இந்த தன்வந்திரி ஜெயந்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு முடிவடைகிறது.இந்த நாளில் நோய் நொடி தீர நாம் தன்வந்திரி பகவானே எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சுலபமான வழிபாட்டினை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.இன்று மாலை 6.00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்துக் கொள்ளலாம்.

வழக்கம்போல பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் தன்வந்திரி பகவானின் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பெருமாளின் படத்தின் முன்பு இந்த வழிபாட்டை செய்யலாம்.ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை பூஜை அறையில் வைத்துவிட்டு, அந்த டம்ளர் தண்ணீரில் ஒரே ஒரு துளசி இலை போட்டுக் கொள்ளுங்கள். உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்கள் எந்த தண்ணீரை குடிப்பார்களோ சுடு தண்ணீர், பச்சை தண்ணீர் எது வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். எந்த டம்ளரில் வேண்டும் என்றாலும் தண்ணீரை வைத்து கொள்ளுங்கள். சுவாமிக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.தன்வந்திரி பகவானை மனதார வேண்டி, நோய் நொடி தீர வேண்டும் மருந்து மாத்திரை சாப்பிடுவது குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான் மந்திரம்

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம!

இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.பின்பு சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து விட்டு பூஜையை நிறைவு செய்துவிட்டு, இந்த தண்ணீரை நோய் நொடி உள்ளவர்கள் குடித்து விட வேண்டும்.

உங்களுடைய வீட்டில் உங்களுடைய உறவினர்களுக்கு யாருக்கேனும் தீராத நோய் உள்ளது. படுத்த படுக்கையாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்காக, நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு இந்த தண்ணீரை ஒரு சொட்டு அவர்களுக்கு கொடுத்தால் கூட போதும். தீராத நோய் படிப்படியாக தீர தொடங்கும்.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ம வினையால் நோய் நொடியால் அவதிப்பட்டருபவர்கள் என்று எவ்வளவு பெரிய வியாதியால் கஷ்டப்பட்டு வருபவர்களையும் குணப்படுத்தக் கூடிய சக்தி இந்த தன்வந்திரி வழிபாட்டிற்கு உண்டு. இந்த தன்வந்தி பகவானை மருத்துவ கடவுள் என்றே சொல்லுவார்கள். இவ்வளவு அற்புதம் வாய்ந்த இந்த நாளில் தன்வந்திரி பகவானை கோயிலில் சென்று தரிசனம் செய்ய முடியாமல் போனாலும் இருந்த இடத்தில் பிரார்த்தனை செய்து ஆசி பெறலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் தன்வந்திரி பகவானை தினமும் நினைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories