இன்று தன்வந்திரி ஜெயந்தி!

images 50 1 - 2026

ஐப்பசி மாதம் தேய்பிறை திரியோதசி அன்று தன்வந்திரி பகவான் பூமியில் அவதரித்த நாளாக சொல்லப்படுகிறது.இதை தன்வந்திரி பகவானின் பிறந்தநாள் என்றும் சொல்லுவார்கள். இந்த தன்வந்திரி ஜெயந்தியானது இன்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை மாலை 6.00 மணி வரை இருக்கின்றது.சில இடங்களில் மாலை 5.49மணிவரை திரியோதசி இருக்கும்.

அக்22 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கே தொடங்கக்கூடிய இந்த தன்வந்திரி ஜெயந்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு முடிவடைகிறது.இந்த நாளில் நோய் நொடி தீர நாம் தன்வந்திரி பகவானே எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சுலபமான வழிபாட்டினை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.இன்று மாலை 6.00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்துக் கொள்ளலாம்.

வழக்கம்போல பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் தன்வந்திரி பகவானின் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பெருமாளின் படத்தின் முன்பு இந்த வழிபாட்டை செய்யலாம்.ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை பூஜை அறையில் வைத்துவிட்டு, அந்த டம்ளர் தண்ணீரில் ஒரே ஒரு துளசி இலை போட்டுக் கொள்ளுங்கள். உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்கள் எந்த தண்ணீரை குடிப்பார்களோ சுடு தண்ணீர், பச்சை தண்ணீர் எது வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். எந்த டம்ளரில் வேண்டும் என்றாலும் தண்ணீரை வைத்து கொள்ளுங்கள். சுவாமிக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.தன்வந்திரி பகவானை மனதார வேண்டி, நோய் நொடி தீர வேண்டும் மருந்து மாத்திரை சாப்பிடுவது குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான் மந்திரம்

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம!

இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.பின்பு சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து விட்டு பூஜையை நிறைவு செய்துவிட்டு, இந்த தண்ணீரை நோய் நொடி உள்ளவர்கள் குடித்து விட வேண்டும்.

உங்களுடைய வீட்டில் உங்களுடைய உறவினர்களுக்கு யாருக்கேனும் தீராத நோய் உள்ளது. படுத்த படுக்கையாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்காக, நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு இந்த தண்ணீரை ஒரு சொட்டு அவர்களுக்கு கொடுத்தால் கூட போதும். தீராத நோய் படிப்படியாக தீர தொடங்கும்.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ம வினையால் நோய் நொடியால் அவதிப்பட்டருபவர்கள் என்று எவ்வளவு பெரிய வியாதியால் கஷ்டப்பட்டு வருபவர்களையும் குணப்படுத்தக் கூடிய சக்தி இந்த தன்வந்திரி வழிபாட்டிற்கு உண்டு. இந்த தன்வந்தி பகவானை மருத்துவ கடவுள் என்றே சொல்லுவார்கள். இவ்வளவு அற்புதம் வாய்ந்த இந்த நாளில் தன்வந்திரி பகவானை கோயிலில் சென்று தரிசனம் செய்ய முடியாமல் போனாலும் இருந்த இடத்தில் பிரார்த்தனை செய்து ஆசி பெறலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் தன்வந்திரி பகவானை தினமும் நினைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories