ஆன்மிக கேள்வி-பதில்: யோகாசனம் செய்து வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?

Published:

samavedam 1pic e1528681369149 - 2026
கேள்வி:- யோகாசனங்கள் செய்து கொண்டே வந்தால் எத்தனை நாட்களில் யோகி ஆகலாம்?

பதில்:- யோக வித்யை வேறு. யோகாசனங்கள் வேறு. யோகாசனங்கள் செய்வதால் மட்டும் யோகியாகிவிட இயலாது. முறை தவறாமல் யோகாசனம் செய்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். அவ்வளவே. ‘யோகஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ” எங்கிறார் பதஞ்சலி. சித்தத்தின் அலைச்சல்களை அடக்குவதன் மூலம் பரமாத்மாவோடு ஏற்படும் சம்யோகமே ‘யோகம்’ எனப்படுகிறது.

மன அடக்கத்தின் வழியாக தெய்வத்தோடு ஐக்கியமாவது இதன் முக்கிய உத்தேசம். அதற்கு அஷ்டாங்க யோகம் ஆதாரம். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு வித வழிமுறைகள் இதில் கூறப்பட்டுள்ளன. அவை உணவு, நடத்தை போன்றவற்றில் நியமத்துடன் புலனடக்கத்தோடு செய்ய வேண்டிய சாதனைகள்.

**

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img