நிலக்கல் டூ பம்பை… பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்க ஐயப்ப சேவா சமாஜம் ஏற்பாடு!

sabarimala - 2026

sabarimala - 2026சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஒரு முடிவினை அறிவித்திருக்கிறது. சபரிமலை குறித்த விவகாரம் கொழுந்து விட்டு எரியும் சூழலில், மாநில அரசு சபரிமலை பயணத்துக்கு பல்வேறு முட்டுக் கட்டைகளை ஏற்படுத்தி வருகிறது.

சபரிமலை பக்தர்களிடம் இருந்து பெருமளவில் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டு வளம் கொழிக்கும் தேவஸ்தானம், தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இந்நிலையில், நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அரசு பேருந்துகளையே பக்தர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு வசூலிக்கப் படும் கட்டணம் மிக அதிகம்.  மேலும், பேருந்துகள் பற்றாக்குறை என்பதால், கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் செல்ல வேண்டிய சூழல்!

இந்நிலையில், அந்த பேருந்து இயக்கத்தை தாங்களே இலவசமாக செய்து தருவதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவருக்கு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் எழுதியுள்ள கடிதத்தில்…

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

கேரள அரசுப் பேருந்துகள் நிலக் கல்லில் இருந்து பம்பைக்கு விடப்படுபவற்றில், மிக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப் படும் விவகாரம் மற்றும் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகவும், இது சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களை பெரிதும் வருத்தப்படச் செய்ததாகவும் கூறப்பட்டது

இந்த வகையில் சபரிமலை ஐயப்ப சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்ததாகவும், அதன்படி அண்டை மாநிலங்களில் உள்ள தனியார் பேருந்து இயக்குபவர்கள் மற்றும் தனி நபர்களிடம் கேட்டு, நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு இயக்க குறைந்தபட்சம் நூறு பேருந்துகளையும் ஓட்டுநர்களையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு வழங்குவதாகவும், அதை சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாகவே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கும் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கும் அழைத்துச் சென்று விடுவதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான செலவினங்களை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் கூறி ஒரு கடிதத்தை வழங்கியிருக்கிறார்கள் .

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச் செயலர் ஈரோடு என்.ராஜன் பெயரில் இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

sabarimalai aiyappa seva samajam letter - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories