“சோமாஸ் செய்து கொண்டு வா”

64520374 1423295954478186 8382675164105539584 n - 2026“சோமாஸ் செய்து கொண்டு வா”

(குழந்தைத்தனமாகக் கனவில் கேட்ட பெரியவா பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவியிடம்) ( பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா அவர்களின் மனைவி மாதுஸ்ரீ பிரதோஷம் மாமி அவர்கள் நேற்று ஸ்ரீமகாபெரியவா திருவடிகளை அடைந்தார்கள் ) 20-06-2019

(வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது)

கட்டுரை ஆசிரியர்-ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மகா பெரியவாள், தன்னுடைய பக்தர்களின் கனவில் தோன்றி அருள்பாலிப்பது உண்மை என்பதை அனுபவப் பூர்வமாக பல பக்தர்கள் அறிந்த விஷயம்.

“மீளா அடிமை” என்னும் பிரதோஷ மாமா, மகா பெரியவாளை சாட்சாத் சந்திர மௌலீஸ்வரராகவ நினைப்பவர். அவரது மனவியும் கணவருக்கு சற்றும் சளைத்தவர் அல்ல..அவருக்கு வந்த கனவு அலாதியானது.

மகாபெரியவா ஆகாரம் என்று ஏற்றுக் கொள்வது வெறும் பொரி மற்றும் வாழைக்காய் மாவு இவைகளே. இதுவும் ஓரிரு பிடிதான். இப்படி, உண்டு தான் உயிர்வாழ்வதாக உலகத்தோரை ஏமாற்றும் எம்பிரான், மீளா அடிமையின் துணைவியாரின் கனவில் தோன்றி,

“சோமாஸ் செய்து கொண்டு வா” என்று குழந்தைத்தனமாகக் கேட்டு இருக்கிறார்.

அந்த மாதரசிக்கு ஒரே பூரிப்பு….பகவான் நம்மிடம் கேட்டு விட்டாரே என்று மட்டற்ற மகிழ்ச்சி.

காலையில் எழுந்தவுடன் “சோமாஸ்” செய்து கொண்டு நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்க விரைகிறார்.

அங்கே தான் அதிசயம் காத்துக்கொண்டு இருக்கிறது.

“நான் தான் கேட்டேன்” என்று அந்தப் பெண்மணியிடம் சொல்லி முதல் அதிர்ச்சியைக் கொடுத்தார்.

“கொண்டு வந்ததை வேத பாடசாலை பசங்களுக்கெல்லாம் கொடு” என்றார் பெரியவா.

மகானின் சார்பில் மாதரசி பிள்ளைகளுக்கு விநியோகம் செய்தார். வேத பாடசாலை பிள்ளைகளுக்காக மாமியின் கனவில் தோன்றி சோமாஸ் கேட்ட இந்த தெய்வம் உலகத்திற்கல்லவா படியளந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories