December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

ஆழ்வார் அமுதம்: பொய் ஞானம்; பொல்லாத ஒழுக்கு; அழுக்கு உடம்பு! 

nammazvar800x566 e1523155698797 - 2025

சுவாமி நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் முதல் பாசுரம்

ஆழ்வார், நமக்காக வேண்டுகிறார். நம் இயல்பைச் சொல்லி, நம் நிலையைச் சொல்லி, நமக்காக இறைவனிடம் வேண்டும் ஆசார்யராக, குருவாக இவ்வாறு வேண்டுகிறார்.

“பொய்ந் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்,
இந் நின்ற நீர்மை இனியாம் உறவாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்! இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே”

“கடவுளைக் கண்டவன் எவன் இருக்கிறான்?” என்று நாத்திகம் பேசும் மக்கள் சிலர். “இத்தனை நாட்களாக கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கி வருகிறேன். ஆனால் இன்னும் கடவுள் கண்ணைத் திறந்து பார்க்கவில்லை. என் கஷ்டத்தைப் போக்கவில்லை”” என்று புலம்புபவர் பலர். இவர்களுக்கு கோடிட்டுக் காட்டும் விதத்தில், இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார் ஆழ்வார்.

மனிதனிடம் பொய் நிறைந்த ஞானம் உள்ளது. பொல்லாத ஒழுக்கம் உள்ளது. நல்லொழுக்கம் அவனிடம் இல்லை. அழுக்கேறிய உடல்தான் உள்ளது. சுத்தமான உடல் இல்லை. – இப்படிப்பட்ட மனிதப் பிறவியை வைத்துக்கொண்டு கடவுளைக் காண இயலவில்லை. எனவே அவன் “கடவுள் இல்லை’ என்று சொல்வது எவ்வளவு அபத்தம்.

எனவேதான் ஆழ்வார், “வானவர்களின் தலைவனே! இறைவனே! உலகினைக் காத்து அருளும் நீ, பல வகைப் பிறப்புகளை எடுக்கிறாய். நாங்களோ பொய்யே நிலைபெற்ற அறிவும் (ஞானமும்), தீய நடத்தையும், அழுக்குப் பதிந்த உடம்பும் கொண்ட மனிதப் பிறவியில் உழல்கிறோம். இப்படிப்பட்ட பிறவி அமையாதபடி நீதான் அருள வேண்டும்” என்று வேண்டுகிறார்.

டி.வி.க்களில் தோன்றும், அல்லது மேடைகளில் பேசும் சில சாமியார்களைப் பார்த்திருக்கிறேன்… நானே கடவுள் என்பது போல் பேசுவார்கள்… ஆனால் அப்படி நாம் தொடர்புபடுத்த முடியுமா? அதனால்தான் ஆழ்வார் ஒப்பிடுகிறார்… பெருமானின் பெருமை என்னே…! நம் சிறுமை என்னே… ! என்று.

இந்தப் பாசுரத்தில், மாபெரும் தவ யோகியான நம் ஆழ்வார், தன்னையும் இந்த மனிதக் கூட்டத்தில் ஒருவராக இருத்தி, பெருமானிடம் நமக்காக பிரார்த்தனையை நடத்துகிறார்…

நித்யசூரிகளின் தலைவனே.. உலகத்து உயிர்களைக் காக்க நீயே விருப்பமுடன் பலவகைப் பிறப்புகளை எடுக்கிறாய்… ஆனால் நாங்களோ பொய்யே நிலை பெற்ற அறிவு பெற்றிருக்கிறோம். தீய நடத்தை கொண்டுள்ளோம். அழுக்கு பதிந்த உடம்பைப் பெற்று மனிதப் பிறவியில் அழுந்தியுள்ளோம். இவ்வாறு நாங்கள் பிறவி அடையாதபடி, நீயே அருள் செய்ய வேண்டும். அடியேனின் இந்த விண்ணப்பத்தை செவி சாய்த்து அருள்வாய் பெருமானே…! என்று நமக்காக விண்ணப்பம் செய்கிறார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories