ருஷி வாக்கியம் (91) – பரம்பரைக்கு விட்டுச் செல்ல வேண்டியது பதவியை அல்ல! தர்மத்தை!!

rv - 2026

உலகில் அனைவரும் தமக்காகத்தான் வாழ்கிறார்கள். அது இயல்புதான். தான் சுகப்பட வேண்டும். அதேபோல் தம்மவர்களை சுகப்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ள உணர்வு!

அதுமட்டுமல்ல. தாம் மட்டுமே அன்றி தம் பிள்ளைகள் கூட அதிக சுகத்தோடு வாழ வேண்டும் என்ற தாபத்ரயத்தோடு தாம் சம்பாதித்த செல்வத்தை அவர்களுக்காக சேர்த்து வைப்பதோடு தமக்குப் பின் ஆட்சி அதிகாரம் கூட தம் பிள்ளைகளுக்கே வர வேண்டும் என்று விரும்புபவர்கள் தென்படுகிறார்கள்.

முன்பு முடியாட்சியில் இதுபோன்ற குணம் இருந்தது. ஏனென்றால் தம் பிள்ளைகள் ராஜாக்களாக வேண்டும் என்று விரும்புவது முடியாட்சியில் சகஜமமே!

“யஸ்ய ஜீவந்தி தர்மேண புத்ரா மித்ராணி பாந்தவா:
சபலம் ஜீவிதம் தஸ்ய நாத்மார்தே கோஹி ஜீவதி !”

“ஒவ்வொருவரும் தனக்காகத்தான் வாழ்வார்களே தவிர தர்மத்திற்காக வாழ்பவர்கள் எத்தனை பேர்? தான் மட்டுமேயன்றி தன்னை அண்டியுள்ள புத்தர், மித்திரர், உறவுகள் கூட தர்மத்தோடு வாழும்படி யார் செய்வார்களோ அவர்கள் மட்டுமே பிறவி எடுத்த பயனை அடைந்தவர்கள்”.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அதாவது நாம் தர்மத்தோடு கூடிய அரசாட்சி நடத்தினால்தான் பிறருக்கு ஆதர்சமாக விளங்க முடியும். அரசாட்சி மட்டுமே அல்ல. வாழ்க்கை வழிமுறையில் கூட ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தவரை ஸ்வதர்மத்தை கடைபிடித்து பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். அப்படியின்றி நாம் தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் நீ கடைபிடி என்று கூறினால் பிள்ளைகள் கேட்கமாட்டார்கள். நாம் போதிக்கும் தர்மம் கடைபிடிக்கப்படுவதை பார்த்தால்தான் அது அடுத்த தலைமுறையின் மீது தாக்கம் ஏற்படுத்தும்.

எனவே மனிதன், தான் தர்மத்தோடு வாழ்ந்து தர்ம எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை எடுத்துக் காட்டாக காண்பித்து பிறரின் மேல் பிரபாவம் ஏற்படுத்தும் விதமாக வாழ வேண்டும். நாம் தர்மத்தைக் கடைப்பிடித்தால் மட்டும் போதாது. நாம் கடைப்பிடிக்கும் தர்மம் பிறருக்கும் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஸ்பூர்த்தியையும் ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். இது மிகச் சிறந்த அம்சம்.

இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்தால் முழு சமுதாயமும் தர்மத்தோடு கூடியதாக விளங்கும். ஒருபுறம் போதனைகள் செய்தாலும் வாழ்க்கை வழிமுறையில் கூட தம்முடையவர்கள் அனைவருக்கும் தர்ம மயமான ஸ்பூர்த்தியை அளிக்கக்கூடியவனாக தலைவன் விளங்க வேண்டும்.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அவ்வாறு ஸ்பூர்த்தியை அளிக்கக்கூடிய உத்தம ஜீவிதம் அனைவருக்கும் சாத்தியமல்ல. சிலரே அவ்வாறு வாழ்வர். அவர்கள் மகாத்மாக்கள் ஆவதோடு தம் குடும்பம் முழுவதும் தர்மத்தோடு வாழும்படி செய்வார்கள். தமக்குப் பிற்பாடு வரும் சந்ததிக்கு செல்வமும் பதவியும் அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பதல்ல தலைமை லட்சணம்.
தர்ம மயமான வாழ்க்கையை அளிக்க பிரயத்தனம் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர் சிறந்த தலைவர் ஆவார்.

தர்மபுத்திரன் தான் மட்டும் தார்மீகராக இருக்காமல் தன் சகோதரர்களையும் தார்மீகர்களாகச் செய்தார். ஒருபுறம் அர்ஜுனனும் பீமனும் பராக்கிரமத்தையும் ஆவேசத்தையும் காண்பித்த போது கூட அவர்களின் வீரத்தை புகழ்ந்தபடியே அவர்களின் ஆவேசத்தை மெச்சி கொண்டபடியே தர்மத்தின் திசையைக் காட்டினார். அந்த பராக்கிரமமும் ஆவேசமும் தர்மத்திற்காக தகுந்த நேரத்தில் வெளிப்பட வேண்டுமே தவிர நமக்கு ஏதோ அநியாயம் நடந்து விட்டது என்பதற்காக துள்ளக் கூடாது என்று கூறி அவர்களை கட்டுப்படுத்தினார். அதனால் தர்மபுத்திரரோடு கூட அவர் மனைவி, தம்பிகள், பிள்ளைகள், குடும்பம் முழுவதும் கூட தர்ம மய ஜீவிதம் வாழ்ந்தார்கள்.

ALSO READ:  ‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

அதேபோல் ராமச்சந்திர மூர்த்தியும் தான் மட்டுமின்றி தன் சகோதரர்களையும் தர்மத்தோடு கூடிய வாழ்க்கையும் ஆட்சியும் நடத்தச் செய்தார்.

பிறருக்கும் தனக்கும் தார்மீக ஸ்பூர்த்தி அளிக்கக்கூடியவரின் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை! என்று கூறியருளிய ருஷிகளுக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories