“அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?”

295603 479182172136829 1054166438 n - 2026

“அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?”

(வேதவித்துக்கள் உண்ட உச்சிஷ்டத்தை சாப்பிட்டு,
பாவமெல்லாம் போய்,அடுத்த பிறவியில் நல்ல
வேதியர்களாகப் பிறந்து ஆனந்தமாக இருக்கத்தான்,
இப்படிச் செய்யறது…”-பெரியவா.)

சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கும்பகோணம் மடத்து தெருவிலுள்ள ஸ்ரீ காஞ்சி
காமகோடி பீடம் மடத்தில், ஒரு சமயம் ஏராளமான
வைதிக சிரேஷ்டர்களுக்கு சமாராதனை ஏற்பாடிகி-
-யிருந்தது.அப்போது, வைதிகர்களுக்கு நானும்
பரிமாறுவேன்.

மகாசுவாமிகள்,என்னைத் தனியே கூப்பிட்டார்.
“இன்னிக்கு,இலைக்கு பட்சணம் லட்டு!
தெரியுமோல்லியோ?”

“தெரியும்”–நான்

“நீ தானே பரிமாறுவே?..அவர்கள் வேண்டாம்,வேண்டாம்
என்று கையைக் கொண்டு வந்து மறுத்தாலும், நீ பாட்டுக்கு
ஒவ்வொருத்தருக்கும் லட்டு ரெண்டு,மூணுன்னு
போட்டுண்டே போ! அவாளெல்லாம் உன்னைத் திட்டுவா.
எறியும்படி வைக்கிறானே? என்று கோபப்படுவா,
காது கொடுக்காதே”

சுமார் அறுபது வைதிக சிரோன்மணிகள் போஜனப் பந்தியில்
உட்கார்ந்திருந்தார்கள்.அவர்களுக்குப் பரிமாறியதில்
நூற்றைம்பது லட்டுகளைக் காலி செய்து விட்டேன்!

பெரியவா சொன்னது போல,என் காதுபடவே என்னைத்
திட்டினார்கள். இந்தத் திட்டுகளுக்கு மேல் உயர்ந்து
பெரியவாளின் கருணை இருந்தது.!

அப்போதெல்லாம், ஒரு இரட்டை மாட்டுவண்டி மடத்துக்
கொல்லைப்புறத்தில் இருக்கும். பெரியவா அந்த வண்டியை
கழுவச் சொன்னார்கள்.ஆசனம் கொண்டு வரச் சொன்னார்கள்.
அதில் உட்கார்ந்து கொண்டார்கள்.

வைதிகர்கள் உணவருந்தி முடிந்தவுடன் எச்சில் இலைகளை
கொல்லையில் கொண்டு வந்து போட்டார்கள்,சிப்பந்திகள்.
அப்போது ஓடி வந்தார்கள்,ஐம்பது நரிக்குறவர்கள்.ஆண் – பெண்
-குழந்தைகளாய். ஏக சந்தோஷம்,அவர்களுக்கு.அவர்கள்
பாஷையில் காச்சு மூச்சென்று ஒரு இரைச்சல்,ஒரு கும்மாளம்!
இலைகளில் மிகுந்திருந்த பண்டங்களை அள்ளி அள்ளிச்
சாப்பிட்டார்கள். லட்டுகளைப் பொறுக்கி மூட்டை கட்டிக்
கொண்டார்கள்.

பெரியவா,வண்டியிலிருந்தபடியே,இந்த ஆனந்த அமர்க்களத்தை
மனம் நெகிழப் பார்த்து மகிழ்ச்சியுடன் ரஸித்துக்
கொண்டிருந்தார்கள்.

“நீ போய், போஜனம் செய்து விட்ட வைதிகர்களை
அழைச்சிண்டு வா.”

வந்தார்கள் வைதிகர்கள். நரிக்குறவர்களின் முகத்தில்
பேரானந்தத்தைக் கண்டார்கள்.

“தியாகுவை கோபித்துக் கொண்டீர்களே! நீங்களே பாருங்கள்.
இவர்களுக்கு இப்படிச் சாப்பிடத்தான் பிடிக்கும். நேராக கையில்
லட்டைக் கொடுத்தால் கூட இவ்வளவு சந்தோஷம் வராது.”

“நமக்கும்,நேரடியாகத் தரும் பழக்கம் இல்லை.”
(நேரடியாகக் கொடுத்தால்,சமையற் கட்டில் மீதமிருக்கும்
லட்டுகள் சேஷமாக-மடி,ஆசாரம் பார்ப்பவர்கள் உண்ணத்
தகாததாகப் போய்விடும்.)

இப்படி இலையில் போட்டு, மிகுந்து எறியப்பட்டதை
நரிக்குறவர்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு என்ன மேன்மை?

..இந்தக் கேள்விக்குப் பெரியவா கொடுத்த பதில்,
நெஞ்சம் உள்ள எல்லோரையும் நெகிழச் செய்யும்.

“ஏதோ, முன்வினைக் கொடுமையால் நரிக்குறவர்களா
ஜன்மம் எடுத்து,குப்பைத் தொட்டியில் போட்ட எச்சில்
உணவுப் பண்டங்களை சாப்பிடும் துர்பாக்கியம் அவர்களுக்கு.
இன்று வேதவித்துக்கள் உண்ட உச்சிஷ்டத்தை சாப்பிட்டு,
பாவமெல்லாம் போய்,அடுத்த பிறவியில் நல்ல
வேதியர்களாகப் பிறந்து ஆனந்தமாக இருக்கத்தான்,
இப்படிச் செய்யறது…”

பெரியவாளின் விளக்கத்தைக் கேட்டவர்களுக்கெல்லாம்
உடம்பில் மின்னலைப் பரவினாற்போலிருந்தாம்.கரூணை
என்றால்,இதுவல்லாவா, கருணை.

அந்த நரிக்குறவர்களுக்குத்தான் எவ்வளவு பெரும் பேறு?

வேத பண்டிதர்கள் எல்லோரும் பெரியவாளின் அவ்யாஜ
கருணையை எண்ணி, அசந்து போனார்கள்.அப்போது
பந்தியில் சாப்பிட்ட வைதிகர்களில் ஒன்றிரண்டு பேர்கள்
இன்னமும் சென்னையில் உள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories