கேரள மக்கள் இன்று கொண்டாடிய விஷூ, அறுவடைத் திருநாள்…

கேரளாவில் மக்கள் கொரோனா தொற்றின் அச்சத்தில் இருந்து
மெல்ல மெல்ல வெளியேறி வரும் நிலையில், இந்த ஆண்டு கேரள மக்கள் வெள்ளிக்கிழமை விஷூ, அறுவடைத் திருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளின் பயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் விஷு உள்ளிட்ட பாரம்பரிய பண்டிகைகளின் கொண்டாட்டத்தை தடுத்தது. இந்து குடும்பங்கள் விஷு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பண்டைய பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளை பின்பற்றி இந்த ஆண்டு விஷூ பண்டிகையை கொண்டாடினர்.
பாரம்பரியத்தை கடைபிடித்து, இந்து இல்லங்களில் மக்கள் அதிகாலையில் ‘விசுக்கனி’ பார்க்க எழுந்தனர், இது நம்பிக்கை மற்றும் செழிப்பைக் குறிக்கும் பித்தளை பாத்திரங்களில் அடுக்கப்பட்ட அரிசி, பழங்கள், தங்கம் மற்றும் பூக்கள் போன்ற மங்களகரமான பொருட்களைப் பார்க்கும் வழக்கமான பாரம்பரிய சம்பிரதாயம் இன்று கேரளாவில் கிராமத்தில் கூட கொண்டாடப்பட்டது.வீட்டுக்கு வீடு வாசல்களில் கொன்றை மலர் அலங்கரித்தது.விஷு பணீடிகையின் ஒரு பகுதியாக பெரியவர்கள் விஷூ கைநீட்டம் பிரசாதமாக குழந்தைகளுக்கு பணம் நாணயங்களை வழங்கி மகிழ்ந்தனர்.

வடக்கு கேரளாவில் உள்ள மலபார் பகுதியில், மக்கள் அதிகாலையில் பட்டாசுகளை வெடித்து புத்தாடைகள் அணிந்து விஷூவைக் கொண்டாடினர். இன்றைய தினம் மலபார் பகுதியில் உள்ள பல கோவில்களில் ”விசு விளக்கு” வைத்து வழிபாடு செய்து விஷூ மங்கள விழாக் காலத்தின் தொடக்கத்தைக் குறித்தது. வெள்ளரிக்காய், மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்ற பருவகால விளைபொருட்களால் செய்யப்பட்ட வழக்கமான இன உணவு வகைகளை உள்ளடக்கிய “விஷு சத்யா” என்று அழைக்கப்படும் ஒரு ஆடம்பரமான விருந்து, கேரளாவில் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் விஷு கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக இருந்தது.

கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், சபரிமலை ஐயப்பன் கோயில் ,குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இன்று காணப்பட்டது.அருகில் உள்ள தமிழகத்தில் தென்காசி குமரி கோவையில் விஷூ விழா இன்று கொண்டாடப்பட்டது

விஷூ பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்வர் பினராய் விஜயன் கவர்னர் ஆரிப்முகம்மதுகான் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

india kerala vishu 01 - 2026
vishu c - 2026
kerala sadya - 2026
1650013126815 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories