உறவுகளை வலுப்படுத்தும் பெரிய கும்பிடு திருவிழா..

1809493 kumpidu - 2026

உறவுகளை வலுப்படுத்தும் பெரிய கும்பிடு திருவிழா உடுமலை அருகே புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் திருக்கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் திருக்கோவில். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் குறிப்பிட்ட வருட இடைவெளிக்கு ஒருமுறை சுள்ளார் குலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் பெரிய கும்பிடு திருவிழா விமர்சையாக நடைபெறும்.

வழக்கம் போல் இந்த வருடமும் பெரியகும்பிடு திருவிழா புதுப்பாளையம் பகுதியில் களைகட்டியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஸ்ரீ பூமிநீளா சமேத ஒவுல்ராயப் பெருமாள் கோவில் பகுதியில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான சுள்ளார்குல மக்கள் பாரம்பரிய வழக்கப்படி உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று தேர்ந்தெடுக்கபட்ட மைதானத்தில் ஒன்று கூடினர்.

பின்னர் பூமியில் முகம்பதித்து படுக்க மூத்த பூசாரிகள் சிறப்பு பூஜை செய்யபட்ட புனித நீரை தெளித்தும் பிரம்பால் மேலே தொட்டு ஆசிர்வாதம் வழங்கியும் வழிபாடு செய்தனர். மைதானத்திலிருந்து கைகளை பிரியாமல் கோவிலை வந்தடைந்தவர்களுக்கு பாலில் கைகளை நனைத்து பூசாரிகள் பிரித்துவிட்டனர். தொடர்ந்து தொன்று தொட்டு நடத்தபடும் பாரம்பரிய வழிபாடுகள் நடத்தப்பட்டது.

இது பற்றி சுள்ளார் குல மக்கள் கூறுகையில், உறவுகளுக்குள் புரிதல்கள் இல்லாமல் பல்வேறு மன கசப்புகள் அதிகமாகும் இக்காலத்தில் உறவுகளுக்குள் பிணைப்பை ஏற்படுத்தி வலுப்படுத்த இத்திருவிழா நடத்தபடுகிறது.பெரிய கும்பிடு விழாவிற்கு அழைக்கசெல்லும் போது என்ன சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மனதில் வைக்காது கட்டாயம் உறவுகளுக்கு அழைப்பு விடுப்பதும், அவர்களும் மறுக்காமல் சீர் வரிசைகளோடு விழாவிற்கு வந்து விடுவதால் ஒற்றுமை ஏற்படுகிறது. மேலும் சில குடும்பத்தினருடன் தொடங்கிய குலம் இன்று பல ஆயிரம் பேர்களுடன் பரவியிருப்பதால் அனைவரையும் அறிந்து கொள்ள இந்த பெரியகும்பிடு திருவிழா உதவுகிறது என்றனர்.

உறவுகளை ஒன்றிணைக்கவும், புதிய உறவுகளை அறிந்து கொள்ளவும் ஏற்படுத்தபட்ட பெரிய கும்பிடு விழா திருப்பூர் மாவட்ட மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories