
நாமம் எனப்படும், (திருமண்+ ஸ்ரீ சூர்ணம்(சிகப்பு சாந்து) இடுவதின், விஞ்ஞான விளக்கம்; :
ஊர்த்த்வரேதம் இது நாராயண ஸுக்தத்தில் கடைசியா வரும் வார்த்தை. இதுக்கும் நாம் இட்டுக்கொள்ளும் திருமண் காப்பிற்கும் நிறைய சம்மந்தம் உண்டு. அது எப்படி அப்படினா. இந்த திருமண் காப்பிற்கு ஊர்த்த்வபுன்ட்றம் என்று பெயர். சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். அப்படினா இந்த திருமண் காப்பை ஹரிபாத த்வயம் னு குறிப்பிடுவர். ஹரினா ஸ்ரீமன் நாராயணன் த்வயம் என்றால் இரண்டு பாதம் தெரியும். ஸ்ரீமன் நாராயணனின் இரடண்டு பாதங்கள் நெற்றியில் அணிதல் வெறுமையாக அணிந்தால் எப்படி இருக்கும்,பாதத்தை வெறுமனே வைக்க முடியுமா, முடியாதே ஸ்வாமி,இப்போ ஒரு உயர்ந்த வஸ்து இருக்கு அதாவது வைரம் இருக்கு அந்த வைரத்தை அப்படியே கீழே வைப்போமா மாட்டோம் ஒரு வெல்வட்டு வஸ்திரத்தில் வெப்போம்,
ஆத்துல பெருமாள் இருக்கார் அவரை கீழ ஏள பன்றோம் திருவாராதனம் பன்ன அப்படியே பண்ணுவோமா என்ன ஒரு தட்டு, ஒரு ஆசனம் கொடுத்து மரியாதை கொடுத்து ஏள பன்றோம், (வைக்கிறோம்)
இப்போ ஆசாரியன் ஏளிருக்கார் அவரை அப்படியே கீழ ஒக்கார வெப்போமா இல்லை ஆசனம் கொடுக்கிறோம்.
அதேபோல் உயர்ந்த திருவடி உலகத்தை அளந்த திருவடி கங்கையை உலகிற்்கு கொண்டு வந்த திருவடி. பிரம்மனால் பாத பூஜை செய்த திருவடி. அந்த திருவடியை அப்படியே வைக்க முடியுமா முடியாது ஆக அதற்கு ஒரு ஆசனம் தருகிறோம் அதுதான் கமல பீடம் அல்லது பாதம் அல்லது சேஷச பீடம் அல்லது பாதம் என்று கீழே நாசி மூலத்தில் ஒரு சின்ன கொடு போன்ற வட்டம் உள்ள ஒரு பாதம் இடுகிறோம். இது எம்பெருமானார் கத்யத்ரயத்தில் வருகிறது, நாசி மூலத்தில் இருந்து இடப்படும் திருமண் என்று வர்ணிப்பர். நாசி மூக்கு மூலம் என்றால் அடி மூக்கிற்கு அடியேதுன்னா மூக்கும் நெற்றிக்கும் இடைப்பட்ட பகுதி அல்லது மூக்கு ஆரம்பிக்கும் பகுதி அந்த இடத்தில் ஆசனம் இட்டு திருமண் இரண்டு ஹரி பாதங்களையும் மேலே இழுத்து மெல் நோக்கி செல்லுதல்.
இப்போதான் ஊர்த்வ என்ற பொருள் இங்கே சொல்லப்படும். ஊர்த்வ என்றால் மேல் நோக்கி செல்லுதல் அல்லது உயரே என்று பொருள்.
ஆத்மா ஜோதி மயமானவர். ரேதம் என்றால் ஒளி ஆத்மா ஒளி வடிவம் கொண்டவர். ஊர்த்த்வ ரேதம் ஆத்மாவான ஒளி மேல் நோக்கி செல்லும். இப்போ திரி போட்டு விளக்கு ஏற்றுகிறோம் ,அந்த திரிய தலை கிழே பிடிங்கோ சுடரானது மேல் நோக்கித்தான் செல்லும் ,அது போன்றே இந்த ஆத்மா மேல் நோக்கித்தான் செல்லும் ,உள்ளே இருக்கும் இந்த ஆத்ம விளக்கு மேல் நோக்கி சென்று உயரே சென்று எம்பெருமானின் திருவடியை அடைகிறார். எப்போ சப்த குணம் அதிகம் இருந்தால் தான் திருவடியை அடைய முடியும் அதனால் தான் திருமண் வெள்ள வேஷ்டி வெள்ளை சப்த குணத்தை வெள்ளை என்று நிறத்தால் குறுப்பிடுவது ,ஒரு ஒரு குணத்திற்கும் ஒரு நிறம் உண்டு என்று கீதையில் சொல்லப்பட்டு உள்ளது. அப்படியாக சத்வ குணத்தை வளர்த்து பெருமாளை அடைகிறது இந்த ஒளி வடிவ ஆத்மா.
திருமண் இட்டுக்கும் போது மேல் நோக்கி இழுக்க வேண்டும் கீழ் நோக்கி இழுக்க கூடாது. ஆத்மா ஆனவர் மேல் நோக்கி போக வேண்டும் என்கிற மேன்மை தத்துவத்தை உணர்த்தும் திருமண்.
திருமண் காப்பு என்று என் கூறுகிறார்கள் என்றால் இந்த திரு மண்ணானது சூரியனில் இருந்து வரும் எதிர்மறை கதிர்களை தடுத்து நம் மூளையில் உள்ள நரம்பு மண்டலத்தை தாக்காமல் காத்து கொடுப்பதால் இது திருமண் காப்பு என்கிறோம்.
இப்போ திருமண் காப்பினை இடும் ஊர்த்தவரேதம் என்று நினைவு படுத்தியே இட்டுக்கொள்ள வேண்டும். இதை பெரிய நம்பிகள் இராமானுருக்கு பஞ்ச சம்ஸ்க்காரம் பண்ணும் பொழுது திருமண் எப்படி கீழே பீடம் இட்டு இட வேண்டும் ,அவ்வாறு இடுவதால் ஆத்ம யோகத்தில் 7 சக்கரம் வழியே மேல் வந்து ஆதிசேனை போல் வெளியே படம் எடுத்து நிற்க வேண்டும் என்று உபதேசித்து,பஞ்ச ஸம்ஸ்க்காரம் பண்ணிவித்தார்.
ஆஹ திருமண் இடும் பொழுது ஊர்த்தவரேதம் என்று நினைவில் கொண்டு இட்டுக்கொள்ள வேண்டும்.
ஊர்த்த்வரேதம் விரூபாக்ஷம் விச்வரூபாய வை நம:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்



