திருப்புகழ் கதைகள்: அருணகிரிநாதர்!

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள்: பகுதி – 275
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

எந்தத் திகையினும் – சுவாமி மலை
அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் ஒரு திண்டிமக் கவி என்பது தெரிகிறது. திண்டிமம் என்பது ஒரு வகை கைப்பறை. இப்பறையை முழக்கிக் கொண்டே ஆசு கவியாக அதாவது உடனுக்குடன் செய்யுளை சந்தக் குழிப்புடன் இயற்றி பாட வல்ல புலவராக இவர் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. திருப்புகழ் பாடல்களைக் கூட இப்படி இவரே இயற்றி இவரே திண்டிமத்தில் தாளத்தை முழக்கி முருகப்பெருமானின் கோயில்தோறும் பாடி இருக்கிறார் என்றும் தெரிகிறது. இதனைப் பகழிக்கூத்தர் என்கிற மற்றொரு முருகனடியாரின் பிள்ளைத்தமிழ் பாடல்களால் அறிகிறோம். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் வரிகள் சில இதற்குச் சான்று பகர்கின்றன. அவை வருமாறு:

பண்தரு பெருங்கவிப் புலமைக்கு நீசொன்ன

படிதிண் டிமம் முழக்க – சப்பாணிப்பருவம் (2)

பாவாணர் மங்கலக் கவிவாழி பாடிப்

பரிந்து திண்டிம முழக்க – சிறுபறை (4)

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

திண்டிமக் கவியான இவர் இயல்பாகவே ஆசுகவியாக சந்தங்களில் பாடினாலும் திருஞானசம்பந்தரைப் போல சிறப்பாக சந்தப் பாக்களில் பாட வேண்டும் என்ற விருப்பம் உடையவர் என்பது அவரது பாடல்களில் தெரிகிறது. இதையே இவரது வழிபடும் தெய்வமான முருகனிடம் வேண்டி இருக்கிறார்.

புமியதனிற் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல

அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே

என்ற பாடல் வரிகள் சான்று.

திருஞானசம்பந்தர் 16,000 பதிகங்கள் பாடியதாக நம்பியாண்டார் நம்பி கூறுகிறார். அது போல தாமும் பாட வேண்டும் என்று மேற்பாடலில் வேண்டியவர் திருஞானசம்பந்தரைப் போலவே 16,000 திருப்புகழ் பாடியதாகக் கூறுவர். இதை மேற்பாடல் ஒன்றினாலேயே ஊகிக்க வேண்டி இருக்கிறது என்றாலும் இது ஏற்றுக் கொள்ளத் தக்கது என்றே கூறலாம். இந்த 16,000 திருப்புகழ் பாடல்களில் இன்று நம்மிடையே நிலவுவது 1311 பாடல்கள் தான் (வாரியார் சுவாமிகள் பதிப்பின் படி). தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் மேலும் சில பாடல்கள் கிடைத்துள்ளன என்று அவற்றைக் கூட்டிப் பதிப்பித்திருக்கிறார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

அத்துடன், திருப்புகழ் பாடல்களிலும், கந்தரலங்காரம், கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் சேவல் விருத்தம் போன்ற இவர் பாடியருளிய நூல்களிலும் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு அருணகிரியாரின் வரலாற்றுச் செய்திகளைத் தணிகைமணி அவர்கள் தொகுத்துத் தந்திருக்கிறார். இந்த வரலாறு முழுமையானதாக இல்லை என்றாலும் முற்றிலும் ஆதாரங்களுடன் உள்ளவை எனலாம்.

arunagirinathar - 2026

அருணகிரிநாதர் காலத்தில் திருவண்ணாமலைப் பகுதியை பிரபுடதேவன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான் என்பதை முன்னரே பார்த்தோம். முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதர் மீது மட்டற்ற பக்தியும் அன்பும் பூண்டு அவரை உபசரித்து மகிழ்ந்திருந்தான்.

அதே நேரத்தில் சம்பந்தாண்டான் என்னும் பெயருடைய பெரும் தமிழ்ப் புலவனும் மன்னரின் அபிமானத்திற்கு உரியவனாக இருந்தான். சம்பந்தாண்டான் மிகச்சிறந்த புலவன் மட்டுமல்ல, பெரும் தேவி உபாசகன். தன் மந்திர உச்சாடன பலத்தால் காளியின் அருளுக்குப் பாத்திரமானவன். இதுவே அவனது அகந்தைக்குக் காரணமாயிற்று. தனக்கு நிகர் இந்தப் பூமியில் எவனுமிலன் என்று செருக்கோடு மிடுக்காய் உலாவி வந்தான்.

மன்னன் தன்மீது காட்டும் அன்புக்கும் மரியாதைக்கும் இணையாக அருணகிரியாரையும் போற்றி வருவது கண்டு அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது.  மன்னனைத் தவிர அருணகிரியாருக்கு வெளியிலும் இருந்த புகழைக் கண்டு மனம் குமைந்தான். எப்படியாவது மன்னர் முன்பு அருணகிரியாரை மட்டம் தட்டி மண் கவ்வச் செய்ய வேண்டும் என்று முனைந்து ஒருநாள் அரசர்முன் அருணகிரியாருக்கு சவால் ஒன்று விடுத்தான்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

என்ன அந்தச் சவால்? நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories