பரமன் அளித்த பகவத் கீதை (13): வியாச பகவானின் வானவியல் அறிவு

bhagavat githa series - 2026

பகவத்கீதை பகுதி 13
மகாபாரதக் கதை

வியாச பகவானின் வானவியல் அறிவு (தொடர்ச்சி)

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

அர்ஜுனனுடன் தொடர்பு கொண்ட பல்குனி நட்சத்திரம்

         அர்ஜுனனின் பத்து பெயர்களில் பல்குனன் என்ற பெயர் மிகவும் முக்கியம் வாய்ந்தது.இது அவனுடைய நட்சத்திரம். பூர்வ பல்குனி மற்றும் உத்தர பல்குனி என்று அழைக்கப்படும் பூரம் மற்றும் உத்தர நட்சத்திரங்கள் சிம்ம ராசி மற்றும் கன்யா ராசியில் உள்ளன. இவற்றுக்கு நேர் எதிரில் 180 டிகிரியில் உள்ள அவிட்ட நட்சத்திர அதிபதியான வசுவான பீஷ்மரை அர்ஜுனன் குறி பார்த்து அடித்தான். வசுக்கள் காக்கும் பசு அடையும் துன்பம் போல பீஷ்மர் துன்பம் அடைந்தார்! மாசி மாதம் என்றாலே பசுக்களுக்கு நோய் வரும் மாதம்.

நண்டைக் குறிக்கும் கடக ராசியில் உள்ள தாய் நண்டு குஞ்சு நண்டு பிறக்கும் போது தன் உயிரை விட்டு அடையும் துன்பம் போல பீஷ்மரும் உயிரை விடும் துன்பத்தை அடைந்தார். கடகம் மற்றும் மகர ராசி 180 டிகிரியில் நேர் எதிராக உள்ளன! இந்தப் பொருள் அனைத்தையும் உள்ளடக்கித் தான் மேலே கூறிய செய்யுளை வியாஸர் இயற்றினார். அதன் உண்மைப் பொருளை விநாயகர் தேர்ந்து பின் மேலே எழுதத் தொடங்கினார்.

பத்து நாட்கள் போர் மர்மம்

         இத்துடன் இந்த செய்யுளின் ஆழ்ந்த பொருள் நின்று விடவில்லை. மஹாபாரதப் போரில் முதல் பத்து நாட்களுக்குத் தலைமை ஏற்று நடத்திய பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் வீரர்களை அழிப்பேன் என்று வீர சபதம் செய்து அதன் படியே செய்தார் தியோ என்ற வசுவுக்கு மார்த்தாண்டன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. மார்த்தாண்டன் என்றால் சூரியன்.

தீபிகா என்ற ஜோதிட நூல், ‘சூர்யான் உச்சான்’ என்று தொடங்கி ‘நீசான் சுநீசான்’ என்று முடியும் நான்கு அடிகளில் சூரியனுக்கு பத்து நாட்கள் மட்டுமே அதிக வலிமை உண்டு என்று வலியுறுத்துகிறது. பத்தாயிரம் சூரிய வீரர்களான நாராயணி சேனாவுடன் பீஷ்மர் போரிட்டதை மஹாபாரதம் விளக்குகிறது ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்தமனத்தின் போது பத்தாயிரம் ராக்ஷஸர்கள் அழிகின்றனர் என்று ரிக் வேதம் (I-35.10) கூறுகிறது. பத்தாயிரம் கதிர்களுடன் காலை பவனி வரும் சூரியன் போல பீஷ்மர் ஓவ்வொரு நாளும் போரில் நாராயணி சேனாவுடன் புகுந்தார்.

         சூரியன் வடக்கே நகரத் தொடங்கிய நாள் முதலாக ஒவ்வொரு நாளும் வலிமை பெறுகிறான். அதாவது நாள் பொழுது அதிகரிக்கிறது. இரவுப் பொழுது குறைகிறது. ஆறு மாதம் கழித்து அவன் தெற்கே செல்லும் போது அவன் வலிமை குறைகிறது. அதாவது நாள் பொழுது குறைகிறது.

இரவுப் பொழுது அதிகரிக்கிறது. பாரதப் போரில் தக்ஷணாயனத்தில் சூரியன் வலிமை குன்ற மார்த்தாண்டனான பீஷ்மர் வலி குன்றுகிறார். மகாபாரத யுத்த காலத்தில் சப்த ரிஷி மண்டலத்திற்கு சமீபத்தில் மக நட்சத்திரத்தின் அருகே வான ரேகை சென்றது. இந்த நட்சத்திரத் தொகுதிக்கு சிகண்டி மண்டலம் என்று பெயர்.

சிகண்டி என்றால் மயில் என்று பொருள்! பூரம் உத்தர நட்சத்திரங்களுக்கு முன்னே சித்ர சிகண்டி மண்டலம் வருகிறது. சிகண்டியைக் கண்ட பீஷ்மர் போர் புரிய மறுத்து போர் புரிவதை நிறுத்துகிறார்.சூரியன் மக நட்சத்திரத்தில் இணையும் போது அவிட்ட நட்சத்திரம் மேற்கே மறைகிறது! வானவியல் படி 180 டிகிரி நேர் எதிரே இருப்பதால் இந்த மறைவு ஏற்படுகிறது.

          மாசி மாதம் பசுக்களுக்கு நோய் வரும் மாதம், தாய் நண்டு பிரசவிக்கும் போது இறந்து படும் வேளையில் அடையும் துயரம், மார்த்தாண்டனான பீஷ்மர் என்னும் வசு பல்குனனால் சிகண்டி மண்டலத்தை முன்னிட்டு அடிக்கப்படும் போது வீழ்ந்து பட்டான் என்ற அனைத்தையும் உள்ளடக்கி இந்த ஒரே ஒரு செய்யுளில் வியாஸர் விளக்கும் மகாபாரதப் போரின் ஒரு பெரும் பகுதியைப் போல இன்னொரு செய்யுள் உலக இலக்கியத்தில் எங்கேனும் உள்ளதா? எனக் கேட்டால், இல்லை என்பதே மறுமொழி!

அறிவியலும் புராணமும் இணையும் அற்புத நட்சத்திரங்களாக பல்குன நட்சத்திரமும் அவிட்ட நட்சத்திரமும் திகழும் அதிசயத்தைப் பார்க்கும் போது நட்சத்திர மர்மம் அவிழ்கிறது. புரியாத ஆழ்ந்த பொருளும் புரிகிறது, இல்லையா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories