ஆதீனங்கள், மடாதிபதிகள் அரசியலில் தலையிடக்கூடாது- கர்நாடக ஜீயர் சுவாமிகள்..

1798669 kanyakumari - 2026

ஆதீனங்களும், மடாதிபதிகளும் அரசியலில் தலையிடக்கூடாது.ராமானுஜரின் போதனைகள் நாடு முழுவதும் சிறந்து வளர்ந்து ஓங்கி வருகிறது. ஆன்மீகவாதிகளும் மடாதிபதிகளும் சுதந்திரமாக கர்நாடகத்தில் செயல்படுகின்றனர் என்று கர்நாடக ஜீயர் சுவாமிகள் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்

கர்நாடக மாநிலம் மேல்கோட்டை ஸ்ரீ யதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ யது கிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர்சுவாமிகள் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமானுஜரின் போதனைகள் நாடு முழுவதும் சிறந்து வளர்ந்து ஓங்கி வருகிறது. அவர் சமூகங்களுக்கு இடையே எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்று விரும்பினார். ராமானுஜர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 முறை பாதயாத்திரை மேற்கொண்டார். காஷ்மீரில் அழிக்கப்பட்ட பண்டிட்டுகளுடைய நூல்களை மீட்டெடுத்து அவைகளை டிஜிட்டல் முறையில் கணினி மயமாக்கும் முயற்சி நடை பெற்று வருகிறது.

ராமானுஜருக்கு காஷ்மீரில் சிலை நிறுவப்பட்டுஉள்ளது. அதனை தொடர்ந்து குஜராத்திலும் தற்போது கன்னியாகுமரியிலும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூரி ஜெகநாத்தில் ராமானுஜரின் சிலை அமைக்கப்படும். ஆன்மீகவாதிகளும் மடாதிபதிகளும் சுதந்திரமாக கர்நாடகத்தில் செயல்படுகின்றனர். தமிழ்நாடு பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. காசியில் நடைபெறும் தமிழ் சங்கம விழாவிற்கு கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தற்போது இந்தியா முழுவதும் ஆன்மீகம் தலை தூக்கி வளர்ந்து வருகிறது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆதீனங்களும், மடாதிபதிகளும் அரசியலில் தலையிடக் கூடாது. ஆன்மீகத்துடன் அரசியலை இணைக்க கூடாது. நாங்கள் சன்னியாசிகள் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories