ஆதீனங்கள், மடாதிபதிகள் அரசியலில் தலையிடக்கூடாது- கர்நாடக ஜீயர் சுவாமிகள்..

1798669 kanyakumari - 2026

ஆதீனங்களும், மடாதிபதிகளும் அரசியலில் தலையிடக்கூடாது.ராமானுஜரின் போதனைகள் நாடு முழுவதும் சிறந்து வளர்ந்து ஓங்கி வருகிறது. ஆன்மீகவாதிகளும் மடாதிபதிகளும் சுதந்திரமாக கர்நாடகத்தில் செயல்படுகின்றனர் என்று கர்நாடக ஜீயர் சுவாமிகள் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்

கர்நாடக மாநிலம் மேல்கோட்டை ஸ்ரீ யதுகிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ யது கிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர்சுவாமிகள் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமானுஜரின் போதனைகள் நாடு முழுவதும் சிறந்து வளர்ந்து ஓங்கி வருகிறது. அவர் சமூகங்களுக்கு இடையே எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்று விரும்பினார். ராமானுஜர் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 3 முறை பாதயாத்திரை மேற்கொண்டார். காஷ்மீரில் அழிக்கப்பட்ட பண்டிட்டுகளுடைய நூல்களை மீட்டெடுத்து அவைகளை டிஜிட்டல் முறையில் கணினி மயமாக்கும் முயற்சி நடை பெற்று வருகிறது.

ராமானுஜருக்கு காஷ்மீரில் சிலை நிறுவப்பட்டுஉள்ளது. அதனை தொடர்ந்து குஜராத்திலும் தற்போது கன்னியாகுமரியிலும் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூரி ஜெகநாத்தில் ராமானுஜரின் சிலை அமைக்கப்படும். ஆன்மீகவாதிகளும் மடாதிபதிகளும் சுதந்திரமாக கர்நாடகத்தில் செயல்படுகின்றனர். தமிழ்நாடு பற்றி எனக்கு அதிகமாக தெரியவில்லை. காசியில் நடைபெறும் தமிழ் சங்கம விழாவிற்கு கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுத்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். தற்போது இந்தியா முழுவதும் ஆன்மீகம் தலை தூக்கி வளர்ந்து வருகிறது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஆதீனங்களும், மடாதிபதிகளும் அரசியலில் தலையிடக் கூடாது. ஆன்மீகத்துடன் அரசியலை இணைக்க கூடாது. நாங்கள் சன்னியாசிகள் இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories