கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

Published:

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம்
 கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில்வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இராப்பத்து பகல் பத்து உற்சவம் நடைபெற்றது ,  நிறைவு நாளாக ஸ்ரீ ஆண்டாள் கல்யாணத் துடன் விழா சிறப்பாக முடி வுற்றது. மாலை மாப்பிளை அழைப்பு மாலை மற்று வைபவம் ஊஞ்சல், திருமாங்கல்யதாரணம், நலுங்கு ஆகியன பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் நடை பெற்றது   ஸ்ரீ ராம பஜன மண்டலியினர் கல்யாண் உற்சவ கீர்த்தனை பாடல்கள் பாடி நடத்தினர். பெண்கள் பக்தியுடன் கோலாட்டம், கும்மி போன்றவை அடித்து இறைவனை மகிழ்வித்தனர்.யாஹம், வேள்வி, ஜெபம் இவைகளுக்கு வயப்பட மாட்டேன். ஆனால் எங்கு பக்தியோடு எனது  கீர்த்தனைகள் பாடபடுகிறதோ அங்கு நான் நித்யவாசம் செய்கிறேன் என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்  கூற்று.அதற்கேற்ப  பன்னிரு ஆழ்வார்கள் பாடிய திவ்யபிரபந்த சேவை மற்றும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா ப்ரேமி சுவாமிகள் 108 திவ்ய தேசத்தில் பெருமாளை கண்ட அனுபவத்தின் வாயிலாக வந்த  கீர்த்தனாவளி பாடல்கள் இக்கோவிலில் பாடப்பட்டன.மேற்படி உத்சவம் ஸ்ரீ ஸ்ரீ சிருங்கேரி சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா ப்ரேமி சுவாமிகள் ஆகியோரின்  அனுகிரகதுடன் கிராம மக்களால் அர்ச்சகர் ரவி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடை பெற்றது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img