மித்யை: ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

“அப்படியென்றால் உலகம் என்று நாம் பார்ப்பது மாயையா? இந்த உபன்யாசம் என்பது உண்மையில்லையா? நாங்கள் கேட்பது உண்மையில்லையா?” என்று பல கேள்விகள் எழும்.

அதற்கு, “அப்படியில்லை, ப்ரஹ்ம ஸத்யம் ஜகன்மித்யா என்றால் அதை ‘பிரஹ்மம் உண்மை, உலகம் உண்மையில்லை’ என்று பொருள் கொள்ளக் கூடாது” என்பதே பதில்.

ஒரு பொருளின் இயல்பை ஸத், அஸத் என இரண்டு வகையாக வர்ணிக்கலாம். ஸத் என்றால் எக்காலத்திலும் இருப்பது. அது மாறுதலுக்குட்பட்டதென்று, நிச்சயமாக உலகம் அப்படிப்பட்டது இல்லை.

அதனால் நாம் பார்க்கும் இவ்வுலகத்தை “ஸத்” என்று சொல்ல முடியாது. எது எக்காலத்திலும் இருந்ததில்லையோ, அது “அஸத்” எனப்படும். உதாரணமாக, முயல் கொம்பை எவனாவது பார்த்திருக்க முடியுமா? முடியாது.

ஏனெனில், அது என்றுமே இருந்ததில்லை. எனவே, முயல் கொம்பு உண்மையில்லை. அதைப் போன்றே இந்த உலகமும் உண்மையில்லையா என்றால், அப்படி இல்லை. நாம் உலகத்தை கண்களால் பார்க்கிறோம்.

அவ்வாறே எல்லா உயிர்களும் பிறக்கின்றன. பின்பு இறக்கின்றன. இந்த ஒரு காரணத்தால், உலகம் நிலையானது மற்றும் அழிவில்லாதது என்று சொல்லிவிட முடியாது.

அதனாலே உலகம் உண்மையோ பொய்யோ அல்ல. அப்படியானால் அவை இரண்டும் சேர்ந்தது எனலாமா? அதுவும் முடியாது. ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பொருட்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது.

உதாரணமாக, வெளிச்சமும் இருட்டும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்காது. எனவே, இவ்வுலகத்தை “இப்படித்தான் உள்ளது” என்று அறுதியிட்டு உறுதியாக விவரிக்க முடியாது.

அது உண்மையோ பொய்யோ அல்ல. அதை மித்யை என்றே கூறுகின்றனர். மித்யை என்றால் அநிர்வசனீயம் (விவரிக்க முடியாதது) என்று பொருள்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories