December 6, 2025, 10:57 PM
25.6 C
Chennai

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஏழாம் பாசுரம்!

thiruppavai7 - 2025

ஏழாம் பாசுரம் I – ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே, நஞ்சீயர் தண்டனிட்டு நிற்க, ” பகவத் விஷயத்தில் ருசி நமக்கு பிறந்ததில்லை காணும்” என்று அருளிச் செய்ய “உம்மைப்போல் ஆசாரியர்வான்கள் உண்டோ! இங்ஙனே அருளிச் செய்வான் என்”, என்ன பகவத் விஷயத்தில் மெய்யே ருசி உண்டு என்று இருக்கையாவது பாகவதர்களைக் கண்டால் உகக்கும் அன்று காணும் ..என்றருளிச் செய்தார். நாலாயிரப்படி.

ஆண்டாள் நாச்சியார் ஆறாம் பாசுரம் முதல் 15 ம் பாசுரம் வரை பல பாக்வதப் பெண்களை எழுப்பி கூடியிருந்து குளிர அழைக்கிறாள்.இதிலிருந்து பாகவதப் பிரபாவம் வெளிப்படுகிறது.

ஒரு முறை நஞ்சீயர் ஆட்கொண்டவில்லி ஜீயரை வணங்கி நிற்கையில், ஆட்கொண்டவில்லி ஜீயர், உண்மையாக எம்பெருமான் விஷயத்தில் ஈடுபாடு உடையவன் தான் இல்லை என்று தெரிவிக்க, ஸ்ரீ நஞ்சீயரும், இப்பேர்ப்பட்ட உத்தமமான நீர் இப்படி சொல்வதேன்? என்று கேட்க, அதற்கு எம்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்களைக் கண்டால் என்றைக்கு உகப்பு ஏற்படுகிறதோ அன்றுதான் எம்பெருமானுடைய விஷயத்தில் ஈடுபாடு பூர்த்தியாகும் என்று பதிலிறுத்தார்.

இங்கு டாக்டர் எம் ஏ வி ஸ்வாமியின் குறிப்பு நோக்கத்தக்கது. ஆட்கொண்டவில்லி ஜீயரை தண்டனிட்டு நஞ்சீயர் நிற்க, பதிலுக்கு அவரை ஆட்கொண்டவில்லி ஜீயர் வணங்க்வில்லை.
நஞ்சீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அடியாரை தாம் வணங்காததால் தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ஈடுபாடு இல்லை என்று அவர் சொன்னதாகக் கொள்ளலாம் என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.

II விடிவோர மாளிகையில் சென்று எழுப்புவாரும் கவி சொல்லுவாரும், வம்சாவளி ஒதுவாரமாக எழுந்திருக்க கடவ, இவர் பக்‌ஷிகளுக்கு முன்னே உணரும்படி ஆவதே என்ன தர்மஹானி என்று ஆய்த்தான் அருளிச் செய்தார் .. ஈராயிரப்படி.

அதாவது பறவைகள் ஒலியைக் கொண்டு திருப்பாவையில் விடிந்தமைக்கு அடையாளம் உணர்த்தப்படுகிறது. இப்படி சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரான் காட்டிலே எழுந்தருளியிருக்கும்போது காலை விடிந்த அடையாளம் பறவை ஒலிகொண்டு தெரிவிக்கப்படுகிறது.

அப்போது ஆய்த்தான் என்பவர், ராஜாவான ஸ்ரீராமபிரான் காலையில் எழுந்திருக்கையில் இனிய பாடல்கள் பாடுவார்களும், பல்லாண்டு பாடியும், அவர் குலப் பெருமையயென்ன, வம்சம் என்ன என்று சொல்லி எழுப்ப வேண்டி இருக்க, இப்படி காட்டிலே பறவை ஒலிக் கொண்டு எழுந்திருக்க வேண்டி ஆகிவிட்டதே! என்று வருத்தப்பட்டாராம்.

  • வானமாமலை பத்மநாபன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories