திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஏழாம் பாசுரம்!

thiruppavai7 - 2026

ஏழாம் பாசுரம் I – ஆட்கொண்டவில்லி ஜீயர் எழுந்தருளா நிற்கச் செய்தே, நஞ்சீயர் தண்டனிட்டு நிற்க, ” பகவத் விஷயத்தில் ருசி நமக்கு பிறந்ததில்லை காணும்” என்று அருளிச் செய்ய “உம்மைப்போல் ஆசாரியர்வான்கள் உண்டோ! இங்ஙனே அருளிச் செய்வான் என்”, என்ன பகவத் விஷயத்தில் மெய்யே ருசி உண்டு என்று இருக்கையாவது பாகவதர்களைக் கண்டால் உகக்கும் அன்று காணும் ..என்றருளிச் செய்தார். நாலாயிரப்படி.

ஆண்டாள் நாச்சியார் ஆறாம் பாசுரம் முதல் 15 ம் பாசுரம் வரை பல பாக்வதப் பெண்களை எழுப்பி கூடியிருந்து குளிர அழைக்கிறாள்.இதிலிருந்து பாகவதப் பிரபாவம் வெளிப்படுகிறது.

ஒரு முறை நஞ்சீயர் ஆட்கொண்டவில்லி ஜீயரை வணங்கி நிற்கையில், ஆட்கொண்டவில்லி ஜீயர், உண்மையாக எம்பெருமான் விஷயத்தில் ஈடுபாடு உடையவன் தான் இல்லை என்று தெரிவிக்க, ஸ்ரீ நஞ்சீயரும், இப்பேர்ப்பட்ட உத்தமமான நீர் இப்படி சொல்வதேன்? என்று கேட்க, அதற்கு எம்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்களைக் கண்டால் என்றைக்கு உகப்பு ஏற்படுகிறதோ அன்றுதான் எம்பெருமானுடைய விஷயத்தில் ஈடுபாடு பூர்த்தியாகும் என்று பதிலிறுத்தார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

இங்கு டாக்டர் எம் ஏ வி ஸ்வாமியின் குறிப்பு நோக்கத்தக்கது. ஆட்கொண்டவில்லி ஜீயரை தண்டனிட்டு நஞ்சீயர் நிற்க, பதிலுக்கு அவரை ஆட்கொண்டவில்லி ஜீயர் வணங்க்வில்லை.
நஞ்சீயர் என்னும் ஸ்ரீவைஷ்ணவ அடியாரை தாம் வணங்காததால் தனக்கு பகவத் விஷயத்தில் உண்மையான ஈடுபாடு இல்லை என்று அவர் சொன்னதாகக் கொள்ளலாம் என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.

II விடிவோர மாளிகையில் சென்று எழுப்புவாரும் கவி சொல்லுவாரும், வம்சாவளி ஒதுவாரமாக எழுந்திருக்க கடவ, இவர் பக்‌ஷிகளுக்கு முன்னே உணரும்படி ஆவதே என்ன தர்மஹானி என்று ஆய்த்தான் அருளிச் செய்தார் .. ஈராயிரப்படி.

அதாவது பறவைகள் ஒலியைக் கொண்டு திருப்பாவையில் விடிந்தமைக்கு அடையாளம் உணர்த்தப்படுகிறது. இப்படி சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரான் காட்டிலே எழுந்தருளியிருக்கும்போது காலை விடிந்த அடையாளம் பறவை ஒலிகொண்டு தெரிவிக்கப்படுகிறது.

அப்போது ஆய்த்தான் என்பவர், ராஜாவான ஸ்ரீராமபிரான் காலையில் எழுந்திருக்கையில் இனிய பாடல்கள் பாடுவார்களும், பல்லாண்டு பாடியும், அவர் குலப் பெருமையயென்ன, வம்சம் என்ன என்று சொல்லி எழுப்ப வேண்டி இருக்க, இப்படி காட்டிலே பறவை ஒலிக் கொண்டு எழுந்திருக்க வேண்டி ஆகிவிட்டதே! என்று வருத்தப்பட்டாராம்.

  • வானமாமலை பத்மநாபன்
ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories