தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா!

sa vs ind odi - 2026

இந்தியா தென் ஆப்பிரிக்கா – இரண்டாவது ஒருநாள் போட்டி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

போட்டியையும் தொடரையும் வென்றது தென் ஆப்பிரிக்கா!

பார்ல் விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது முறையாக நடந்த (இரண்டாவது) ஒருநாள் போட்டியில் இரண்டாவது முறையாக இந்தியா தோல்வியைச் சந்தித்தது. பூவாதலையா வென்ற இந்திய அணியின் தலைவர் கே.எல். ராகுல் மட்டையாட முடிவுசெய்தார். இந்திய அணியின் தொடக்க ஜோடி தவான் மற்றும் ராகுல் 11 ஓவர் வரை ஆடினர்.

சுமாரான ஆட்டம்தான். அவர்கள் இருவராலும் அதிரடியாக ஆடமுடியவில்லை. ஸ்பின்னர்கள் பந்துகளை தடுத்து ஆடிக்கொண்டிருந்தனர். 12ஆவது ஓவரில் தவான் (29) ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதுவும் ஸ்பின்னர் பந்துவீச்சில், மிக எளிதான கேட்ச் கொடுத்தார்.

இது ஒருநாள் போட்டிகளில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பூஜ்யம் ரன்; ஒருநாள் போட்டிகளில் 14ஆவது முறையாக டக் அவுட். அவுட் ஆனதிற்காக அவர் முகத்தில் ஒரு கோபமோ, வருத்தமோ இல்லை; பழைய கோலியாக இருந்தால் தன்னைத்தானே திட்டிகொண்டாவது வருவார்.

இன்று அதுகூட இல்லை. அடுத்த விக்கட்டுக்கு பந்த்தும் ராகுலும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இடையில் ராகுல் இரண்டு முறை அவுட்டாக இருந்தார். ஒருமுறை ரன் அவுட் ஆக இருந்தார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் ராகுல், பந்த் இருவரைவிட அதிகமாக சொதப்பியதால் ராகுலின் விக்கட் பிழைத்தது.

இருந்தாலும் ராகுலின் 79 பந்துகளில் 55 ரன் என்பது பாராட்டக்கூடிய விஷயமே அல்ல. ராகுலும் பந்த்தும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாயினர். ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் இருவரும் சொல்லிக்கொள்ளும் படி ஆடவில்லை.

ஷர்துல் தாகூர் (40), அஸ்வின் (25) இருவரும் நன்றாக ஆடியதாலும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் 17 வைட் பால் போட்டதாலும் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் என்பது முதல் ஓவரில் இருந்தே தெரிந்தது. அந்த அணியின் மலான் (91), டி காக் (78), பவுமா (35), மர்க்ராம் (37), டுஸ்ஸென் (37) மிகச் சிறப்பாக விளையாடி 48.1 ஓவரில் வெற்றியை பெற்றனர். பும்ரா தவிர அனைத்து பவுலர்களும் சரியாக பந்து வீசவில்லை.

கேப்டன் ராகுலுக்கு அதிர்ஷ்டம் இல்லை. பந்த் மிகவும் அதிர்ஷ்டசாலி. ஒருவேளை அடுத்த கேப்டன் அவர்தானோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories