IPL 2022: மும்பையின் ஐந்தாவது தொடர் தோல்வி

ipl 2022 - 2026

ஐபிஎல் 2022 – பஞ்சாப் vs மும்பை
மும்பையின் ஐந்தாவது தொடர் தோல்வி

-K.V. பாலசுப்பிரமணியன்

நேற்று, ஏப்ரல் பதிமூன்றாம் நாள் பஞ்சாப், மும்பை அணிகளுக்கிடையே புனே கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 23ஆவது போட்டி நடந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி (5 விக்கெட்டுக்கு 198 – தவான் 70, அகர்வால் 52, ஜிதேஷ் 30*, தம்பி 2-47) மும்பை இந்தியன்ஸ் அணியை (9 விக்கெட்டுக்கு 186 – பிரெவிஸ் 49, சூர்யகுமார் 43, வர்மா 43, ஸ்மித் 4-30, ரபாடா 2-29) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பேட்டிங்கில் தாங்கள் வலுவாக இருப்பதால் மும்பை அணி தங்கள் பந்துவீச்சை வலுப்படுத்தியிருந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் இரண்டு முறை T20யின் இமாலயத் தவறுகளைச் செய்தது. திலக் வர்மா, போலார்ட் இருவரும் ரன்-அவுட் ஆனது டி-20 ஆட்டத்தின் மன்னிக்க முடியாத தவறுகள்.

மும்பை டாஸ் வென்றது. இந்த ஐபிஎல்லில் டாஸ் வென்ற அணிகள் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்வது வழக்கம். அது போல மும்பை அணியும் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தலைவரும் தொடக்க வீரருமான மயங்க் அகர்வால் இந்தப் போட்டியில் இதுவரை மூன்று தொடர்ச்சியான ஒற்றை இலக்க ஸ்கோர்களை எடுத்திருந்தார்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

இந்த ஆட்டத்தில் அகர்வாலும் (52 ரன், 32 பந்துகள்) தவானும் (70 ரன் 50 பந்துகள்) பவர்ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோரான 65 ரன்களைப் பெற்றனர். இது இந்த சீசனின் நான்காவது அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் மற்றும் புனே மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோரும் ஆகும். அகர்வால் பத்தாவது ஓவரிலும் தவான் 17ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தார்கள்.

இருபது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்திருந்தது. மும்பையின் பந்துவீச்சாளர்களால் ரன்ரேட்டையும் கட்டுப்படுத்த முடியவில்லை; விக்கட்டும் எடுக்க முடியவில்லை. மெதுவாக பந்து வீசியதற்காக ரோஹித் ஷர்மாவிற்கு ரூ 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பஞ்சாப் அணியில் தமிழக வீரர் ஷாருக் கான் தனது பங்கைச் செய்தார், கடைசி ஓவரில் பசில் தம்பியின் பந்தில் இரண்டு நேரான சிக்ஸர்களை விளாசினார்.

மும்பை அணியில் ஆறு சரியான பேட்டர்கள் மட்டுமே இருந்தனர் மற்றும் உனத்கட் 7வது இடத்தில் இருந்தார். இருப்பினும், டாப் ஆர்டர் கூடுதல் கவனத்துடன் பேட் செய்யவில்லை. ஆனால் தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் ப்ரீவிஸ் ஒரே ஓவரில் பஞ்சாப் அணிக்கு தோல்வி பயத்தைக் காட்டினார்.

ஆரம்பத்தில் ப்ரீவிஸ் பதட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் விரைவில் என்ன வரப்போகிறது என்பதை யாரும் ஊகித்திருக்க முடியாது. ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்தில் ப்ரீவிஸ் ஸ்டிரைக்கில் வந்தபோது, மும்பைக்கு 71 பந்துகளில் 135 ரன்கள் தேவைப்பட்டது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

அந்த ஓவர் முடிந்ததும், சமன்பாடு 66 இல் 107 ஆக இருந்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பில் மும்பையின் வெற்றி நிகழ்தகவு 13.3% இல் இருந்து 48.5% ஆக உயர்ந்தது. சாஹார் வீசிய ஒன்பதாவது ஓவரில் முதல் பந்தில் திலக் வர்மா ஒரு ரன் எடுத்து மறுபுறம் சென்றார். அடுத்த பந்தினை 18 வயதே ஆகும் ப்ரீவிஸ் பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த நான்கு பந்துகளும் சிக்சருக்குப் பறந்தன.

ஒன்பது, 10 மற்றும் 11ஆவது ஓவர்களில் மும்பை அணி 53 ரன்கள் எடுத்தது. இந்த கட்டத்தில் ப்ரெவிஸ் ஆட்டமிழந்தார். மும்பை அணிக்கு கடைசி 48 பந்துகளில் 79 ரன்கள் தேவைப்பட்டது. இது பொதுவாக பேட்டிங் அணிக்கு சாதகமானது. சூர்யகுமாரும் பொலார்டும் 14, 15 மற்றும் 16 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தனர். பொல்லார்ட் ரன் அவுட் ஆனபோது, மும்பை அணிக்கு 23 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்டது.

சாதாரணமாக இந்த நிலையில் மும்பை அணி வெற்றி பெறக்கூடியது. 17வது ஓவரில் அரோரா வீசிய அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர் அடித்து, சூர்யகுமார் அவர்களின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார், ஆனால் அவரால் 18வது ஓவரின் இரண்டு பந்துகளுக்கு மட்டுமே ஸ்ட்ரைக் எடுக்க முடிந்தது, அர்ஷ்தீப் ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் யார்க்கர் மற்றும் வைட் யார்க்கர்களின் கலவையுடன் ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

சூர்யகுமாரை 19வது ஓவரில் ரபாடா வெளியேற்றினார். மும்பைக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் உனத்கட் ஒரு சிக்ஸர் அடித்தார். அது அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. ஆனால் ஒடியன் ஸ்மித், ரவுண்ட் தி விக்கெட்டுக்கு மாறி, மூன்றாவது பந்தில் உனத்கட்டை ஆட்டமிழக்கச் செய்தார், நாலாவது பந்திலும் ஆறாவது பந்திலும் மேலும் இருவர் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஒன்பது ரன் கொடுத்து மூன்று விக்கெட் எடுத்து ஸ்மித் அந்த ஓவரை முடித்தார். ஐந்து ஆட்டங்களில் ஐந்து தோல்விகளுடன் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories