IPL 2022: லக் இல்லையே லக்னோவுக்கு..!

ipl 2022 - 2026

ஐ.பி.எல் 2022 – 25, மே, 2022 – லக்னோ vs பெங்களூரு
– K.V. பாலசுப்பிரமணியன் –

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (207/4, படிதார் 112*, கார்த்திக் 37*) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (193/6, ராகுல் 79, ஹூடா 45, ஹேசில்வுட் 3-43) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிர்ஷ்டத்தை நம்புவதற்கு மேலும் ஒரு வெற்றி அதற்கு ஒரு காரணமாக நேற்று அமைந்துவிட்டது.

இந்த ஆண்டு, லுவ்னித் சிசோடியாவின் காயம் காரணமாக சீசனின் நடுப்பகுதியில் விளையாட வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ரஜத் படிதார், 54 பந்தில் ஆட்டமிழக்காமல் 112 ரன்களை குவித்து அணியை இரண்டாவது தகுதிச் சுற்றிற்கு அனுப்பினார். படிதாரின் இன்னிங்ஸில் அதிர்ஷ்டம் விளையாடியது. ஆனால் அவர் 16ஆவது ஓவரில் ஆட்டமிழக்க வேண்டியது.

அதன் பின்னர் அவர் 14 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 6.5 ஓவர்களில் கார்த்திக்குடன் 92 ரன்களை சேர்த்ததற்கு முன், தினேஷ் கார்த்திக்கும் (37 ரன்), ஒரு எல்பிடபிள்யூ மற்றும் ஒரு ட்ராப் கேட்ச் இரண்டில் இருந்தும் தப்பித்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அந்த கைவிட்டுப்போன கேட்சுகளை எண்ணி மனம் புழுங்கியிருக்கும். ஏனெனில் அவர்கள் இறுதியில் பெங்களூருவின் ஸ்கோரை நெருங்கி வந்தனர். ஏறக்குறைய இன்னிங்ஸ் முழுவதும் அவர்களின் ரன்ரேட் ராயல் சேலஞ்சர்ஸை விட அதிகமாக இருந்தது, ஆனால் கடைசி ஐந்து ஓவர்களில் 84 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

கேப்டன் கே.எல். ராகுலின் இன்னிங்ஸ் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஏழு ஓவர்களில் 99 ரன்களை அடிக்கவேண்டும் என்ற நிலை வரை அவர் மெதுவாக ஆடிகொண்டிருந்தார். மேலும் அவர் 42 பந்துகளில் 48 ரன்கள் அடித்த அவருக்கு 58 பந்துகளில் 79 ரன்கள் அடிக்க இயலவில்லை.

பேட்டர்களின் தடாலடி ஆட்டத்தின் நடுவே சூப்பர் ஜெயண்ட்ஸின் மொஹ்சின் கான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸின் ஹர்ஷல் படேல் 4-0-25-1 என்ற ஒரே மாதிரியான ஓவர்களை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது. கோஹ்லி ஒரு நீண்ட இன்னிங்ஸுக்கு தன்னைத்தானே தகவமைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களை படிதார் ரிஸ்க் எடுத்து விளையாடினார்.

ரவி பிஷ்னோய் பின்னர் ரன்ரேட்டை மெதுவாக்கினார், கோஹ்லி ஒரு பந்துக்கு ஒரு ரன் என ஆடி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 8.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்தபோது, ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரன்ரேட்டை இன்னும் உயர்த்த வேண்டும் என எண்ணியது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

குயின்டன் டி காக் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ராகுலும் (79 ரன்) மனன் வோஹ்ராவும் (19 ரன்) பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களை நன்றாக ஆடினர். ஹேசில்வுட் வோஹ்ராவை அவுட் செய்தாலும், ராகுல் 6ஆவது ஓவரில் சிராஜ் பந்தில் இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து பவர்பிளேயில் 62 ரன்கள் எடுத்தார்.

15ஆவது ஊவரில் ஹசரங்காவை இரண்டு சிக்சர்கள் அடித்த தீபக் ஹூடா (45 ரன்) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ராகுல் 57 ரன்; அனி 137/3. ஸ்டொயினிஸும் (9 ரன்) நிலைக்கவில்லை.

கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. 19ஆவது ஓவரில் ஹேசல்வுட் மூன்று வைட், ஒரு நோபால் வீசினார்; இருப்பினும் ராகுல், க்ருணால் பாண்ட்யா ஆகியோரின் விக்கட்டுகளை எடுத்தார்.

கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் 24 ரன் எடுத்தால் வெற்றி. ஹர்ஷல் படேல் மிக அருமையாக அந்த ஓவரை வீசினார். லக்னோ அணியால் 9 ரன் கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

இனி அடுத்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறும். ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மே 27ஆம் தேதி அடுத்த க்வாலிஃபையர் போட்டியில் விளையாடுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories