44ஆவது செஸ் ஒலிம்பியாட்: எட்டாம் சுற்றுப் போட்டிகள்!

chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம்,
6 ஆகஸ்டு 2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மாமல்லபுரத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று எட்டாம் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இந்தியா A ஆண்கள் அணியும் ஆர்மீனியா அணியும் இன்று விளையாடின. இந்திய A அணி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்மீனிய அணியிடம் தோற்றுப்போனது.

விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன், எஸ்.எல். நாராயணன் மூவரும் ட்ரா செய்து அரைப்புள்ளி பெற்றனர். ஹரிகிருஷ்ணா தோல்வியடைந்தார். இந்தியா B ஆண்கள் அணி பலம் வாய்ந்த அமெரிக்க அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. குஹேஷ் இன்று தனது தொடர் எட்டாவது வெற்றியைப் பதிவுசெய்தார்.

சாத்வானி ரௌனக் வெற்றி பெற்றார். சரின் நிஹால் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். இந்தியா C ஆண்கள் அணி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் பெரு நாட்டு அணியிடம் தோற்றது. சேதுராமனும் கார்த்திகேயன் முரளியும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். கங்குலியும் அபிஜித்தும் தோல்வியுற்றனர்.

இந்தியா A பெண்கள் அணி இன்று உக்ரேன் அணியுடன் விளையாடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை சமன் செய்தது. இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, வைஷாலி, தானியா சச்சதேவ் ஆகிய நால்வரும் தத்தம் ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரை புள்ளி பெற்றனர்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

இந்தியா B பெண்கள் அணி குரேஷியா அணியுடன் விளையாடி 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. வந்திகா அகர்வால், பத்மினி ராவுத், திவ்யா தேஷ்முக் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். மேரி ஆம் கோம்ஸ் ட்ரா செய்தார்.

இந்தியா C பெண்கள் அணி போலந்து அணியுடன் விளையாடி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப்போனது. ஈஷா கர்வாடே மற்றும் விஷ்வா வாஸ்னவாலா இருவரும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். நந்திதாவும் பிரத்யுஷாவும் தோல்வியடைந்தனர்.

எட்டாவது சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் 13 புள்ளிகளுடன் ஆர்மீனியா தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்திலும் உஸ்பெஸ்கிஸ்தான், இந்தியா B அணி, இந்தியா A அணி, அமெரிக்கா, ஜெர்மனி, கஜகஸ்தான் ஆகிய அணிகள் தர வரிசைப் பட்டியலில் 2 முதல் 7ஆம் இடம் வரை பிடித்துள்ளன.

பெண்கள் பிரிவில் இந்தியா A அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா B அணி 11 புள்ளிகளுடன் 17ஆவது இடத்திலும் இந்தியா C அணி 11 புள்ளிகளுடன் 23ஆவது இடத்திலும் உள்ளது.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories