44ஆவது செஸ் ஒலிம்பியாட்: எட்டாம் சுற்றுப் போட்டிகள்!

chess olympiod chennai - 2026

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம்,
6 ஆகஸ்டு 2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மாமல்லபுரத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று எட்டாம் சுற்றுப் போட்டிகள் நடந்தன. இந்தியா A ஆண்கள் அணியும் ஆர்மீனியா அணியும் இன்று விளையாடின. இந்திய A அணி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் ஆர்மீனிய அணியிடம் தோற்றுப்போனது.

விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன், எஸ்.எல். நாராயணன் மூவரும் ட்ரா செய்து அரைப்புள்ளி பெற்றனர். ஹரிகிருஷ்ணா தோல்வியடைந்தார். இந்தியா B ஆண்கள் அணி பலம் வாய்ந்த அமெரிக்க அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. குஹேஷ் இன்று தனது தொடர் எட்டாவது வெற்றியைப் பதிவுசெய்தார்.

சாத்வானி ரௌனக் வெற்றி பெற்றார். சரின் நிஹால் மற்றும் பிரக்ஞானந்தா இருவரும் தங்களது ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். இந்தியா C ஆண்கள் அணி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் பெரு நாட்டு அணியிடம் தோற்றது. சேதுராமனும் கார்த்திகேயன் முரளியும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். கங்குலியும் அபிஜித்தும் தோல்வியுற்றனர்.

இந்தியா A பெண்கள் அணி இன்று உக்ரேன் அணியுடன் விளையாடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை சமன் செய்தது. இந்திய வீராங்கனைகள் கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, வைஷாலி, தானியா சச்சதேவ் ஆகிய நால்வரும் தத்தம் ஆட்டங்களை ட்ரா செய்து தலா அரை புள்ளி பெற்றனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இந்தியா B பெண்கள் அணி குரேஷியா அணியுடன் விளையாடி 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. வந்திகா அகர்வால், பத்மினி ராவுத், திவ்யா தேஷ்முக் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். மேரி ஆம் கோம்ஸ் ட்ரா செய்தார்.

இந்தியா C பெண்கள் அணி போலந்து அணியுடன் விளையாடி 1-3 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப்போனது. ஈஷா கர்வாடே மற்றும் விஷ்வா வாஸ்னவாலா இருவரும் ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர். நந்திதாவும் பிரத்யுஷாவும் தோல்வியடைந்தனர்.

எட்டாவது சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் 13 புள்ளிகளுடன் ஆர்மீனியா தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்திலும் உஸ்பெஸ்கிஸ்தான், இந்தியா B அணி, இந்தியா A அணி, அமெரிக்கா, ஜெர்மனி, கஜகஸ்தான் ஆகிய அணிகள் தர வரிசைப் பட்டியலில் 2 முதல் 7ஆம் இடம் வரை பிடித்துள்ளன.

பெண்கள் பிரிவில் இந்தியா A அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியா B அணி 11 புள்ளிகளுடன் 17ஆவது இடத்திலும் இந்தியா C அணி 11 புள்ளிகளுடன் 23ஆவது இடத்திலும் உள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories