IND Vs AUS: இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி

aus ind t20 - 2026

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டி20 போட்டி, நாக்பூர், 23.09.2022
– முனைவர் கு.வை பாலசுப்பிரமணியன்

ஆஸ்திரேலிய அணி (எட்டு ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 91 ரன், ஃபின்ச் 31 ரன், வேட் 43 ரன், அக்சர் படேல் 2/13) இந்திய அணியிடம் (7.2 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 92 ரன், ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 46, தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 10 ரன்) ஆறு விக்கட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

நாக்பூரில் நேற்று நல்ல மழை பெய்திருந்தது. இரு அணிகளும் அதனால் நெட் ப்ராக்டிஸ் கூட செய்ய முடியவில்லை. இன்று அதனால் போட்டி சரியான சமயத்தில் தொடங்கவில்லை. பிட்சுக்கு வெளியே மைதானத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. ஒருவழியாக போட்டி எட்டு ஓவர் போட்டியாகக் குறைக்கப்பட்டு, இரவு 2115 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை விளாசினார்கள். இன்று புவனேஷ்குமார், உமேஷ் யாதவ் இருவரும் ஆடவில்லை. அவர்களுக்குப் பதிலாக பும்ரா, பந்த் ஆடினார்கள். முதல் ஓவரை ஹார்திக் பாண்ட்யா வீசினார். அதில் 10 ரன் கொடுக்கப்பட்டது. இரண்டாவது ஓவரை அக்சர் படேல் வீசினார்.

அவரது சுழலில் ஒரு விக்கட் விழுந்தது. ஒருவர் ரன் அவுட் ஆனார். 9 ரன் கொடுக்கப்பட்டது. மூன்றாவது ஓவரை சாஹல் வீசினார்; 12 ரன் கொடுத்தார். கடைசி எட்டாவது ஹர்ஷல் படேல் ஓவரில் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் எடுத்து மொத்தம் 91 ரன் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவைத் தவிர மீதி ஆடியவர்கள் அனைவரும் ரன் ரேட் ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட்டைவிட அதிகமாக இருக்குமாறு விளையாடினர்.

ராகுல் (6 பந்துகளில் 10 ரன்), கோலி (6 பந்துகளில் 11 ரன்) பாண்ட்யா (9 பந்துகளில் 9 ரன்) தினேஷ் கார்த்திக் (2 பந்துகளில் 10 ரன்) ஆகியோர் நன்றாக ஆடினர்.

ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன் அடித்து வெற்றிக்கு அடிகோலினார். இந்த வெற்றியோடு இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இரண்டும் 1-1 என்ற கணக்கில் தொடரைச் சமன் செய்துள்ளன. அடுத்த போட்டி ஞாயிறு அன்று ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories