T20 WC 2022: அசத்திய ஆஸ்திரேலியா

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பத்தாம் நாள் – 25.10.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இன்று உலகக் கோப்பை டி20 போட்டியில் குரூப் 1 பிரிவில் பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது.

இலங்கை அணி (157/6, நிசாங்கா 40, அசலங்கா 38*, தனஞ்சயா 26, கருணரத்னே 14*) ஆஸ்திரேலிய அணியிடம் (16.3 ஓவரில் 158/3, ஸ்டொய்னிஸ் 59*, ஆரோன் ஃபிஞ்ச் 31*) ஏழு விக்கட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர் குஷால் மெண்டிஸ் (5 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர், நிசாங்காவுடன் (45 பந்துகளில் 40 ரன்) இணைந்து தனஞ்சயா (23 பந்துகளில் 26 ரன்), அசலங்கா (25 பந்துகளில் 38 ரன்) நன்றாக ஆடினர். ஆனால் அதன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கட்டுகளை இழந்தது.

இறுதியில் அந்த அணி 20 ஓவருக்கு ஆறு விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. அதன் பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சுமாராக இருந்தது. முதல் ஆட்டத்தில் நியுசிலாந்து அணியிடம் மிக மோசமாக தோற்றிருந்ததால் ஆஸ்திரேலிய அணி இந்த ஆட்டத்தில் வெற்றியும் பெற்றாக வேண்டும், நல்ல நெட் ரன்ரேட்டும் எடுக்க வேண்டும்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

அவர்களின் அந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய மார்க் ஸ்டோய்னிஸ் வந்தார். 18 பந்துகளில் 59 ரன் அடித்து 16.3 ஓவர்களில் அணியை வெற்றிக்கு இட்டுச்சென்றார். இது ஒரு ஆஸ்திரேலிய வீரரின் மிக வேகமான அரை சதமாகும்.

இதில் ஆறு சிக்சர்கள், 4 ஃபோர்கள் அவர் அடித்தார். இவ்வாறாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

நாளை மெல்போர்னில், குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து அயர்லாந்து ஆடும் ஆட்டமும், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்து அணிகள் ஆடும் ஆட்டமும் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories