Ind Vs Ban Test: சேப்பாக்கத்தில் கில், பந்த், அஷ்வினின் அசத்தல் ஆட்டம்!

Published:

ind vs ban test - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம்முதல் டெஸ்ட் போட்டி – சென்னை- 21.09.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மூன்றாம் நாளில், சேப்பாக்கத்தில் கில், பந்த் மற்றும் அஷ்வினின் அசத்தல் ஆட்டம்

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 376 (அஷ்வின்113, ஜதேஜா 86, மகமுது 5/83, டஸ்கின் 3/81), இரண்டாவது இன்னிங்க்ஸ் 287/4 (கில் ஆட்டமிழக்காமல் 119, ரிஷப் பந்த் 109, ) வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ் 149 (பும்ரா 4/50, ஆகாஷ்தீப்2/19, ஜதேஜா 2/19); இரண்டாவது இன்னிங்க்ஸில் 158/4 (ஶண்டோ ஆட்டமிழக்காமல் 51, ஷட்மன்35, சாகிர் 33, அஷ்வின் 3/63, பும்ரா 1/18)  இந்திய அணி 357 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          இந்தியஅணியின் ரிஷப் பண்ட்உணர்ச்சிமயமான தனது ஆறாவது டெஸ்ட் சதத்தையும், ஷுப்மான் கில் ஐந்தாவது சதத்தையும் இன்று அடித்தனர். மேலும் இந்திய பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்கள் கள நிலவரங்களை நன்று புரிந்துகொண்டு சென்னையில்மூன்றாவது நாளில் நான்கு வங்கதேச இரண்டாவது இன்னிங்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தினர். டெஸ்டில் இன்னும் இரண்டரை நாட்கள் மீதமுள்ள நிலையில், ரோஹித் ஆக்ரோஷமான டிக்ளேர் அறிவிப்பு மூலம் 515 என்ற இலக்கில் வங்கதேசம்357 ரன்கள் பின்தங்கியுள்ளது.

          ஆடுகளம்இன்னும் உடைந்து போகாததாலும், சராசரி வேகப்பந்தின் திசை மாற்றம் முதல்நாளில் இருந்ததைவிட  மூன்றாம்நாளில் சரிந்ததாலும், இன்றைய நாள் போட்டி சிறந்த பேட்டிங்கிற்கு உகந்ததாக இருந்தது. டிக்ளரேஷனைஅறிவிக்க இந்தியாவின் தாக்குதல் அணுகுமுறை இருந்தபோதிலும், அவர்கள் மூன்றாம் நாளில் 41 ஓவர்களில் 16 தவறான ஷாட்களை மட்டுமே விளையாடினர், அதே நேரத்தில் 206 ரன்கள்எடுத்தனர். பங்களாதேஷ் பேட்டிங் செய்யும் போது நிலைமை சீராகஇருந்தது, ஆனால் ஆர் அஷ்வினின் மராத்தான்ஸ்பெல் போட்டியில் இந்தியாவின் உயர்வைத் தக்க வைத்துக் கொண்டது.பந்து வீச்சாளர்கள் சற்றே கடினமான மூன்று குறைந்த உயர கேட்சுகள் பிடித்ததற்காக பீல்டர்களுக்குநன்றி சொல்ல வேண்டும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

          காலையில்இருந்த நிலைமைக்கு, நன் கு அடித்து ஆடக்கூடிய கில் மற்றும் பந்த்,தாங்களால் தவறு செய்தால்  மட்டுமேஅவுட் ஆக முடியும் என்பதைப் புரிந்துகொண்டனர், மேலும் பெரிய ஸ்கோருக்கு தயாராக இருந்தார்கள். அவர்கள்நல்ல பந்துகளை மதித்து ஆடினர். இந்தியாவின் 64 இரண்டாவது இன்னிங்ஸ் ஓவர்களில் 25 ஓவர்களை வீசிய மெஹிதி ஹசன் மிராஸை கில்நாலு சிக்சர்கள் அடித்தார்.ஷாகிப் அல் ஹசனின் இடதுகை சுழற்பந்து வீச்சைப் பார்த்து பந்த், நான்கு சிக்ஸர்களை அடித்து 59 ரன்களை எட்டினார், இது 34 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் ஏழாவது அதிகபட்சமாக இருந்தது.

          இருவரும்சிக்ஸர்கள் அடித்தார்கள், ஆயினும்யஷஸ்வி ஜெய்ஸ்வால்மற்றும் ரோஹித் ஷர்மா போல் அல்லாமல், பந்துவீச்சாளர்களைமரியாதையுடன் அணுகினர். மேலும் அவர்கள்பேட்டின் விளிம்பில் பட்டு பந்துபறந்ததையோ அல்லது நெருக்கமான பீல்டர்களைப்பற்றியோ  கவலைப்படாமல்சிறிது நேரம் டிஃபன்ஸ் ஆடினர். நாளின் ஏழாவது ஓவரில் முதல் சிக்சரை அடித்தனர். கில்அதை வைட் லாங்-ஆன்திசையில் இரண்டுசிக்ஸர்களுடன் அழகாகச் செய்தார்.

          பந்த்,முதல் இன்னிங்ஸில் மென்மையான ஆட்டமிழப்பிற்குப் பிறகு அதை போல ஆட்டமிழக்கமல் இருக்கஅதிக நேரம் எடுத்துக் கொண்டார். கில் மதிய உணவுக்குமுன் பேட்டிங் வேகத்தை முடுக்கிவிட்டார். அறிவிப்புவிரைவில் வரலாம் என்று பரிந்துரைத்தார். வேகமான ரன்கள் அடிக்கவேண்டும் என்ற உந்துதலுடன்,இடைவேளைக்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பந்திலிருந்து ஒரு கேட்ச் வாய்ப்பு வழங்கினார். ஆனால் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதைத் தவறவிட்டார். இடைவேளைக்குமுந்தைய இறுதி ஓவரில் பந்த் இன்னும் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

          மதியஉணவிற்குப் பிறகு, 118 பந்துகளில் தனது சதத்தை எட்டுவதற்காகவேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருவரையும் தனது முத்திரை ஷாட்டான ஃபிளிக்கை பந்த் வெளிப்படுத்தினார். கில் மிகவும் நிதானமாகசதம் அடித்தார். அவர் சதம் அடிக்க161 பந்துகள் எடுத்துக்கொண்டார்.கே.எல். ராகுல் சில கம்பீரமான இன்சைட்-அவுட் டிரைவ்களை விளையாடினார், அதற்கு முன் பங்களாதேஷை தேநீர்வரை பேட் செய்ய ஒருமணி நேரம் கொடுத்து ரோஹித் டிக்ளேர் செய்தார்.

          ஜாகிர்ஹசன் அவுட் ஆகக்கூடாது என்ற முழு நோக்கத்துடன் உள்ளே வந்தார். முன் மற்றும் பின் கால் இரண்டையும்ஓட்டி, முகமது சிராஜை ஒரு சிக்ஸருக்கு அடித்தார்.பந்து அதிகம் ஸ்விங் ஆகாததால், அவரும் ஷாட்மான் இஸ்லாமும் ரன்களைத் தேடிக்கொண்டே இருந்தனர், ஒவ்வொரு லென்த் தவறுக்கும் தண்டனை அளித்தனர்.

          அஷ்வின்பந்துவீச வந்தவுடன், அவர் சில வித்தைகள்செய்தார். இங்கே பேட்டின்ஸ்டிக்கரை அடித்தார், பந்தை உள்ளே எட்ஜ் ஆக வைத்தார். தேநீருக்குப்பிறகு, அவரும் ஜஸ்பிரித் பும்ராவும் மூன்று இறுக்கமான ஓவர்களை வீசினார். நான்காவது ஓவரில் ஜாகர்ஒரு பந்தில் டிரைவ் செய்ய முயன்று ஆட்டமிழந்தார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

நிலைமைகள் அஸ்வினை தனது விக்கெட்டுக்காக கடுமையாகஉழைக்க வைத்தது. அவர் நான்கு சிக்ஸர்களுக்குகூட கொடுத்தார். ஒரு இன்னிங்ஸில் அவர் விட்டுக்கொடுத்த அதிகபட்சம்ஐந்து சிக்சர்கள்.

          சரியாகவிளையாடாத மொமினுல் ஹக்கைவெளியேற்ற அஸ்வின் பின்னர் ஒரு அழகுப் பந்தை வீசினார். அந்தச் சமயத்தில் பந்து நன்கு திரும்பத்தொடங்கியது.மேலும் டர்ன் எட்ஜைத் தவறவிட போதுமானதாக இருந்தது ஆனால் ஆஃப் ஸ்டம்பை தகர்த்தது. முஷ்பிகுர் ரஹீம், “கொதிக்கும் தகரக்கூரையில் ஒருபூனையாக இருந்தார், மிட்-ஆனில் ராகுலிடம்ஒரு லோ கேட்ச் அடிப்பதற்கு முன்பு அஷ்வினை ஒரு சிக்ஸருக்கு ஸ்லாக்-ஸ்வீப் செய்தார். ஷாகிப் அல் ஹசன் இன்னும்குறைவாகவே செட்டில் ஆனார், ஆனால் மோசமான வெளிச்சத்தால் காப்பாற்றப்பட்டார், இதனால் நாடகம் சீக்கிரமே முடிந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில்,கேப்டன் நஜ்முல் நிதானமாக பேட்டிங் செய்தார், ஆனால் 60 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்.

Related articles

Recent articles

spot_img