IND Vs BAN 2nd TEST: வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்னில் ஆட்டமிழப்பு!

ind ban test 1 - 2026

இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் – முதல் நாள் – 22.12.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய -வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸ் 227 (மொமிநுல் ஹக் 84, முஷ்ஃபிகர் ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25, ஷண்டோ 24, உமேஷ் யாதவ் 4/25, அஷ்வின் 4/71) ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 8 ஓவருக்கு 19 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 3 ரன்னுடனும், சுப்மன் கில் 14 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா வங்கதேச அணிகள் ஆடும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடக்கிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ‘நஜ்முல் சாண்டோ’ விக்கெட்டை ஆரம்பித்திலேயே ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்தார். இந்திய அணியில் இவர் எதற்கு என்று கேள்வி கேட்டவர்களுக்கு, தனது பந்து வீச்சின் மூலம் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

இந்திய அணி, இந்த டெஸ்ட் போட்டி நடக்கும் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது. இதனால் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு ஜெயதேவ் உனட்கட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வின் ஒரு சிறப்பான ஆல்ரவுண்டர். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 5 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஆசிய பிட்சுகளில் இவர் பவுலிங்கை போலவே பேட்டிங் சிறப்பாக செய்வார். இதனால் இவருக்கு முன்னுரிமை கொடுக்க பட்டது. குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறவில்லை. சென்ற டெஸ்ட் ஆட்டத்தில் அவர் ஆட்ட நாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை தனது ஆப் ஸ்பின் பவுலிங்கால் திணறடிப்பது வழக்கம் தான். இதே போல, தான் வீசிய மூன்றாவது ஓவரிலேயே தொடக்க பேட்ஸ்மேன் ஷாண்டோவை LBW முறையில் ஆட்டம் இழக்க செய்தார். அதன் பின்னர், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ், கலீத் அகமது ஆகியோரின் விக்கட்டுகளையும் அஷ்வின் எடுத்தார்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

73.5 ஓவர்கள ஆடிய வங்கதேச அணி 227 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

அதன் பின்னர் எட்டு ஓவர்கள் ஆடிய இந்திய அணி 19 ரன் எடுத்தது. வெளிச்சம் போதாமையால் ஆட்டம் ஒரு மணி நேரம் முன்னதாக நிறுத்தப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories